search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து
    X

    தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • ஒரு மாணவனுக்கும், ஒரு ஆசிரியருக்கு மட்டும் லேசான காயம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் அடுத்து ஆக்கூரில் ஒரு தனியார் பள்ளி செயல் பட்டு வருகிறது.

    இந்த பள்ளிக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வேன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு சென்று படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் சின்னங்குடியில் இருந்து மாணவ மாணவிகளை பள்ளிக்கு வேனில் அழைத்து சென்றனர்.

    வேன் மயிலாடுதுறை அருகே கிடங்கள் என்ற இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு, ஒரு ஆசிரியருக்கு மட்டும் லேசான காயத்துடன் உயிர் தப்பி உள்ளனர்.

    அவர்களுக்கு ஆக்கூரில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவிகள் அளிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    வேனில் சென்ற மற்ற மாணவர்கள் யாரும் காயம் அடைய வில்லை.

    இது குறித்து தகவல் அறிந்ததும் செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

    Next Story
    ×