search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் அருகே அரசு பஸ்-வேன் மோதல் - 2பேர் பலி
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் அருகே அரசு பஸ்-வேன் மோதல் - 2பேர் பலி

    • கோவையில் இருந்து கும்பகோணத்திற்கு இன்று அரசு பஸ் புறப்பட்டு சென்றது.
    • ஆம்னி வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதின.

    வெள்ளக்கோவில் :

    கோவையில் இருந்து கும்பகோணத்திற்கு இன்று அரசு பஸ் புறப்பட்டு சென்றது. வெள்ளக்கோவில் அருகேயுள்ள வெள்ளமடை திருச்சி சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது திருப்பூரில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதின.

    இதில் ஆம்னி வேனில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து தகவல் கிடைத்து விரைந்து சென்ற வெள்ளக்கோவில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர்கள் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த பிரமிளா (வயது 45), அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் லோகேஸ்வரன் (வயது26) என்பது தெரியவந்தது. மேலும் 4 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×