என் மலர்
நீங்கள் தேடியது "டாடா"
- 165hp பவர், 280Nm டார்க் வெளிப்படுத்தும் புதிய 1.5 லிட்டர் TGD-i டர்போ-பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனும் வழங்கப்படலாம்.
- என்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்படலாம்.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா சியரா சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நவம்பர் 25-ந்தேதி (அதாவது இன்று) விலை குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாடா சியரா மாடலின் ஆரம்ப விலை ரூ.11.49 லட்சம் என்றும் அடுத்த மாதம் 16ந்தேதி முதல் முன்பதிவு ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி முதல் டாடா சியரா டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய டாடா சியரா காரில் 168hp பவர், 350Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 165hp பவர், 280Nm டார்க் வெளிப்படுத்தும் புதிய 1.5 லிட்டர் TGD-i டர்போ-பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனும் வழங்கப்படலாம். இந்த என்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்படலாம்.
வெளிப்புறத்தில், 2025 டாடா சியரா மாடலில், மேல்புறத்தில் சியரா எழுத்துக்களுடன் கூடிய முழு கருப்பு கிரில், எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் ஃபேசியாவில் லைட் பார், சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள் உள்ளன. இத்துடன் ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், ஒருங்கிணைந்த ஸ்பாய்லர், முன் கதவுகளில் சியரா எழுத்துக்கள், பெரிய அலாய் வீல்கள், கனெக்ட்டெட் எல்இடி டெயில் லைட்கள், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் பின்புற பம்பரில் நம்பர் பிளேட் ஹோல்டர் ஆகியவை உள்ளன.
உள்புறம், இந்த மாடல் 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஒளிரும் டாடா லோகோ, டேஷ்போர்டில் மூன்று-திரை அமைப்பு, ஏசி கண்ட்ரோல்களுக்கான டச் செயல்பாடு, டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி, புதிய சென்டர் கன்சோல், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா மற்றும் ஒரு இயங்கும் டெயில்கேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- புதிய அம்சமாக கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் மாடலில் 2 ஜோன் கான்சியர்ஸ் கிளைமேட் ஏ.சி. பொருத்தப்பட்டுள்ளது.
- அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
டாடா மோட்டார் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
டாடா கர்வ் காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 120 எச்.பி. பவரையும், 170 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வேரியண்டும் உள்ளது. இது அதிகபட்சமாக 118 எச்.பி. பவரையும், 260 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும். இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.
டாடா கர்வ் எலெக்ட்ரிக் மாடலில் 45 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 55 கிலோவாட் ஹவர் பேட்டரி வேரியண்ட்கள் உள்ளன. இவை முறையே 150 எச்.பி. பவரையும், 167 எச்.பி. பவரையும் வெளிப்படுத்தும். இரண்டு வேரியண்டும் 210 என்.எம். வரையிலான டார்க்கை வெளிப்படுத்தும்.
புதிய அம்சமாக கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் மாடலில் 2 ஜோன் கான்சியர்ஸ் கிளைமேட் ஏ.சி. பொருத்தப்பட்டுள்ளது. கர்வ் EV-யில் குரல் மூலம் செயல்படுத்தக்கூடிய பனோரமிக் சன்ரூப், சைகை மூலம் இயக்கக்கூடிய டெயில்கேட், 12.3 அங்குல டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
விலையை பொருத்தவரை புதிய டாடா கர்வ் ரூ.14.55 லட்சம் என்றும் கர்வ் EV சுமார் ரூ.18.49 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
- வரவிருக்கும் டாடா சப்காம்பாக்ட் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
- உற்பத்திக்குத் தயாரான மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள்- மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகியவை 2026ஆம் ஆண்டில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளன. இது தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த நிறுவனங்கள் தங்களது சப்-4 மீட்டர் மாடல் வரிசையை விரிவுபடுத்தத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் மாருதி சுசுகி நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட Fronx-ஐ ADAS சூட் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் புதிய சப்-காம்பாக்ட் SUV (ஸ்கார்லெட் என்ற குறியீட்டுப் பெயர்) அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா விஷன் S கான்செப்ட்டின் உற்பத்திக்குத் தயாரான மாடலை அறிமுகப்படுத்தலாம். இது ஸ்கார்பியோ குடும்பத்திற்குள் நிலைநிறுத்தப்பட்ட ஒரு சப்-காம்பாக்ட் எஸ்யூவி-ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் பேயோன் காம்பாக்ட் கிராஸ்ஓவர் வெளியீடும் 2026-இல் திட்டமிடப்பட்டுள்ளது.
மாருதி Fronx ஃபேஸ்லிஃப்ட்
புதுப்பிக்கப்பட்ட மாருதி Fronx பலமுறை சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இந்த காம்பாக்ட் கிராஸ்ஓவர் ADAS ஆப்ஷனுடன் வரும் என்பதை புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன. இது சுசுகியின் அடுத்த தலைமுறை 48V சூப்பர் எனி-சார்ஜ் (SEC) ஹைப்ரிட் பவர்டிரெயினைக் கொண்ட நிறுவனத்தின் முதல் மாடலாகவும் இருக்கலாம்.

டாடா ஸ்கார்லெட்
வரவிருக்கும் டாடா சப்காம்பாக்ட் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், டாடா ஸ்கார்லெட் ஒரு மோனோ-கோக் சேசிஸை அடிப்படையாகக் கொண்டதாகவும், சியரா எஸ்யூவி-இல் இருந்து பல வடிவமைப்பு அம்சங்களை பகிர்ந்து கொள்ளும் என்றும் கூறப்படுகின்றன. ஸ்கார்லெட் மாடலில் டாடா கர்வ்-இல் உள்ள 1.2L மற்றும் நெக்சானின் 1.2L டர்போ பெட்ரோல் என்ஜின்களுடன் வழங்கப்படலாம்.
மஹிந்திரா பேபி ஸ்கார்பியோ
உற்பத்திக்குத் தயாரான மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து 2027 இல் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும். இறுதி மாடல் அப்சைடு டவுன் L-வடிவ ஹெட்லேம்ப்கள், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் அப்சைடு டவுன் L-வடிவ டெயில் லேம்ப்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஸ்கிரீன், 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் வழங்கப்படலாம்.

ஹூண்டாய் பேயோன்
மாருதி Fronx மற்றும் டாடா பன்ச் ஆகியவற்றிற்கு ஹூண்டாய் நிறுவனத்தின் பதிலாக பேயோன் காம்பாக்ட் கிராஸ்-ஓவர் இருக்கும். இது முற்றிலும் புதிய உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 1.2L TGDi பெட்ரோல் என்ஜினைக் கொண்ட முதல் ஹூண்டாய் கார் ஆக இருக்கும். இது கிரெட்டாவின் 1.5L டர்போ பெட்ரோல் என்ஜினை விட மிகவும் கச்சிதமான மற்றும் எரிபொருள் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
- புதிய டாடா சியரா காரில் 168hp பவர், 350Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த என்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்படலாம்.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா சியரா கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. நவம்பர் 25ஆம் தேதி திட்டமிடப்பட்ட விலை அறிவிப்புக்கு முன்னதாக, டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் புத்தம் புதிய சியராவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. முதற்கட்டமாக ICE வேரியண்ட் அறிமுகமான நிலையில், இதன் எலெக்ட்ரிக் வேரியண்ட் விரைவில் வெளியிடப்படும்.
வெளிப்புறத்தில், 2025 டாடா சியரா மாடலில், மேல்புறத்தில் சியரா எழுத்துக்களுடன் கூடிய முழு கருப்பு கிரில், எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் ஃபேசியாவில் லைட் பார், சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள் உள்ளன. இத்துடன் ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், ஒருங்கிணைந்த ஸ்பாய்லர், முன் கதவுகளில் சியரா எழுத்துக்கள், பெரிய அலாய் வீல்கள், கனெக்ட்டெட் எல்இடி டெயில் லைட்கள், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் பின்புற பம்பரில் நம்பர் பிளேட் ஹோல்டர் ஆகியவை உள்ளன.
உள்புறம், இந்த மாடல் 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஒளிரும் டாடா லோகோ, டேஷ்போர்டில் மூன்று-திரை அமைப்பு, ஏசி கண்ட்ரோல்களுக்கான டச் செயல்பாடு, டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி, புதிய சென்டர் கன்சோல், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா மற்றும் ஒரு இயங்கும் டெயில்கேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
புதிய டாடா சியரா காரில் 168hp பவர், 350Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 165hp பவர், 280Nm டார்க் வெளிப்படுத்தும் புதிய 1.5 லிட்டர் TGD-i டர்போ-பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனும் வழங்கப்படலாம். இந்த என்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்படலாம்.
- முதன்முறையாக இந்திய மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்தது.
- இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ 51 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 51 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலக கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசு ஒன்றை அறிவித்துள்ளது.
விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள டாடா சியாரா கார், மகளிர் உலக கோப்பை வென்ற ஒவ்வொரு இந்திய வீராங்கனைகளுக்கு பரிசாக வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
- இந்த காரில் 6 ஏர் பேக்குகள் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கார்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிக பாதுகாப்பானதாக மாறி வருகின்றன. மத்திய அரசின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் இதற்கு முக்கிய காரணம் எனலாம். அந்த வகையில், பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு அம்சம் பெற்ற 5 கார்களை பற்றி இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்..!
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்
டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் டி.என்.ஜி.ஏ. தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அதிக பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. இந்த காரில் டைனமிக் ரேடார் குரூஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங், 6 ஏர் பேக்குகள், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக்போர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, முன்பக்கமும், பின்பக்கமும் பார்க்கிங் சென்சார், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
கியா சைரோஸ்
கியா நிறுவனத்தின் சைரோஸ் கார் தான் அந்த நிறுவனத்திலேயே பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் எஸ்.யூ.வி. கார் ஆகும். இந்த காரிலும் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த காரில் 16 ஆட்டோமெட்டிக் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய லெவல் 2 ADAS தொழில்நுட்பம் உள்ளது. இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், 6 ஏர்பேக்குகள் உள்ளன.

ஸ்கோடா கைலாக்
இந்த கார் அதன் பிரிவிலேயே பாதுகாப்பான காராக மாறியுள்ளது. இந்த காரில் 25 அதிநவீன அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரோல் ஓவர் புரோடெக்ஷன், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், மல்டி கோலிஷன் பிரேக்கிங் மற்றும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டாடா ஹேரியர் EV
டாடா ஹேரியர் EV காரை பொறுத்தவரை இந்தியாவில் பாதுகாப்பான ஆல்வீல் டிரைவ் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி. காராகும். இந்த காரும் பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை எச்.டி. ரியர் வியூ கேமரா, 7 ஏர் பேக்குகள், 20-க்கும் அதிகமான அம்சங்கள் கொண்ட லெவல் 2 ADAS தொழில்நுட்பம், 540 டிகிரி டிரான்ஸ்பரன்ட் மோடு, 360 டிகிரி கேமரா, I-VPAC உடன் கூடிய ESP, SOS கால் வசதி, ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
மாருதி டிசையர்
இந்தியாவில் பாதுகாப்பான முதல் செடான் காராக, மாருதி டிசையர் கார் திகழ்கிறது. இந்த காரில் 6 ஏர் பேக்குகள் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன. இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராமும் அனைத்து வேரியண்ட்களிலும் உள்ளன. முக்கியமாக ஹில் ஹோல்டு அசிஸ்ட், EBD-யுடன் கூடிய ABS, 360 வியூ கேமரா, ஸ்பீடு சென்சிட்டிவ் டோர் லாக்கிங், ஹை-ஸ்பீடு வார்னிங் அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்பட ஏகப்பட்ட அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
- டாடா ஹாரியர் EV மாடல் Boost, Sport, City மற்றும் ECO என நான்குவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.
- இந்த காரில் வேரியண்டிற்கு ஏற்ப 65 கிலோவாட் ஹவர் மற்றும் 75 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது.
டாடா நிறுவனத்தின் புதுவரவு எலெக்ட்ரிக் கார் ஹாரியர் EV. சமீபத்தில் வெளியான இந்த ஃபுல் சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் வாங்க பலரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், சென்னையில் இதன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் ஆஃப்-ரோடு அகாடமியில் முற்றிலும் புதிய ஹாரியர் EV-இன் செயல்திறன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்கான நிகழ்வில் டாடா வல்லுநர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வந்தவர்கள் டாடா ஹாரியர் EV கரடு முரடான பாதையில் செய்த சம்பவங்களை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.

முற்றிலும் புதிய ஹாரியர் EV இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வருகிறது. இவை இரண்டும் இணைந்து அதிகபட்சமாக 504 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர்கள் வேகத்தை வெறும் 6.3 நொடிகளில் எட்டிவிடும். கரடு முரடான பாதையில் சீரான பயணத்தை உறுதி செய்ய ஏதுவாக இந்த காரில் ஆஃப்-ரோடு அசிஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.
டாடா ஹாரியர் EV மாடல் Boost, Sport, City மற்றும் ECO என நான்குவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த காரில் வேரியண்டிற்கு ஏற்ப 65 கிலோவாட் ஹவர் மற்றும் 75 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது. இவ்விரண்டிற்கும் வெவ்வேறு மைலேஜ்கள் அமைந்துள்ளது. இவற்றுடன் 7.2 கிலோவாட் AC ஃபாஸ்ட் சார்ஜிங் யூனிட் வழங்கப்படுகிறது.
- புதிய CEO-வாக பாலாஜி தேர்வு நவம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார்.
- பாலாஜி தற்போது டாடா குழுமத்தின் தலைமை நிதி மேலாண்மை அதிகாரியாக பதவி வகித்து வருகிறார்.
டாடா குழுமம் வசமிருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO-வாக தமிழரான P.B.பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் CEO-வாக அட்ரியன் மார்டெலின் பதவிக் காலம் வருகின்ற அக்டோபர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், புதிய CEO-வாக பாலாஜி தேர்வு நவம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி, 2017 ஆம் ஆண்டு வரை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழும தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றார். பாலாஜி தற்போது டாடா குழுமத்தின் தலைமை நிதி மேலாண்மை அதிகாரியாக (CFO) பதவி வகித்து வருகிறார்.
- இந்தியாவிலும் பல்வேறு நாடுகளிலும் பணிபுரியும் ஊழியர்களைப் பாதிக்கும்.
- டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கிருத்திவாசன் தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அதிர்ச்சியூட்டும் செய்தியை அறிவித்துள்ளது.
தொழில்நுட்பத்தில் ஏற்படும் விரைவான மாற்றங்களைச் சமாளிக்க, அதன் ஊழியர்களில் 2 சதவீதம் பேரை, அதாவது சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியாவிலும் பல்வேறு நாடுகளிலும் பணிபுரியும் ஊழியர்களைப் பாதிக்கும். பணிநீக்க செயல்முறை ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கிருத்திவாசன், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தான் எடுத்த மிகக் கடினமான முடிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறினார். இது நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.
புதிய தொழில்நுட்பங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.
"புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக வேலை செய்யும் முறைகள் மாறி வருகின்றன. எதிர்காலத்திற்கு நாம் தயாராகவும், முன்கூட்டியே செயல்படவும் வேண்டும்" என்று அவர் கூறினார்.
- 8 ஆண்டு அல்லது 1.6 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை வாரண்டி வழங்கப்பட்டிருந்தது.
- டாடா இ.வி. வைத்திருப்போர் புதிய நெக்சான் இ.வி. 45 அல்லது கர்வ் இ.வி. வாங்கினால் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி சலுகை உண்டு.
டாடா நிறுவனம் நெக்சான் 45 மற்றும் கர்வ் ஆகிய எலெக்ட்ரிக் கார்களை சந்தைப்படுத்தியுள்ளது. தற்போது இவற்றின் பேட்டரிகளுக்கு 15 ஆண்டு அல்லது வரம்பற்ற கிலோ மீட்டர்கள் வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. வாழ்நாள் கால வாரண்டி என்பது வாகனம் பதிவு செய்யப்பட்டதில் இருந்து 15 ஆண்டுகள் என கணக்கில் கொள்ளப்படும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு முன்பு 8 ஆண்டு அல்லது 1.6 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை வாரண்டி வழங்கப்பட்டிருந்தது. புதிதாக டாடா இ.வி. வாங்குவோருக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என கூறப்படுகிறது.
இது தவிர, லாயல்டி போனசாக டாடா இ.வி. வைத்திருப்போர் புதிய நெக்சான் இ.வி. 45 அல்லது கர்வ் இ.வி. வாங்கினால் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி சலுகை உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது. தொடக்க ஷோரூம் விலையாக டாடா கர்வ் சுமார் ரூ.17.49 லட்சம் எனவும், நெக்சான் இ.வி. சுமார் ரூ.12.49 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- 15 ஆண்டுகளுக்கு இந்த பேட்டரி வாரண்டி செல்லுபடியாகும்.
- ஏற்கனேவே இந்த கார்களை வாங்கியவர்களுக்கும் இந்த வாரன்டி பொருந்தும்.
டாடா Curvv மற்றும் நெக்ஸான் EV கார்களுக்கு லைப் டைம் பேட்டரி வாரண்டியை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது கார் ரெஜிஸ்டர் செய்த நாளில் இருந்து 15 ஆண்டுகளுக்கு இந்த பேட்டரி வாரண்டி செல்லுபடியாகும். 15 ஆண்டுகளுக்குள் எத்தனை கிமீ ஓட்டியிருந்தாலும் இந்த வாரன்டி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை இனிமேல் புதிதாக இந்த கார் வாங்குபவர்களுக்கு மட்டும் இல்லாமல் ஏற்கனேவே இந்த கார்களை வாங்கியவர்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் EV சந்தை மற்றும் EV கார்களின் மறு விற்பனையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ஹாரியர் எலெக்ட்ரிக் காரின் பேசிக் வேரியண்ட், டாப் எண்ட் போலவே வெளிப்புற தோற்றத்தை பெறும்.
- அட்வென்ச்சர் வேரியண்டின் சரியான பேட்டரி மற்றும் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் இந்தியாவில் ஹாரியர் எலெக்ட்ரிக் காரை ரூ.21.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி.-இல் அட்வென்ச்சர், ஃபியர்லெஸ் மற்றும் எம்பவர்டு என மூன்று வேரியண்ட்கள் இருக்கும் என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹாரியர் எலெக்ட்ரிக் காரின் அம்சங்கள் மற்றும் விவரங்களை டாடா வெளியிட்டுள்ளது.
டாடா ஹாரியர் பேசிக் வேரியண்ட்: எக்ஸ்டீரியர்
ஹாரியர் எலெக்ட்ரிக் காரின் பேசிக் வேரியண்ட், டாப் எண்ட் போலவே வெளிப்புற தோற்றத்தை பெறும். இது LED பை-ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், LED DRLகள், LED டெயில் லேம்ப்கள், இரு முனைகளிலும் கனெக்டெட் லைட்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் பலவற்றைக் கொண்டிருக்கும். மேலும், ஹாரியர் எலெக்ட்ரிக் அட்வென்ச்சரில் 18-இன்ச் அலாய் வீல்கள் ஏரோ இன்செர்ட்டுகள் மற்றும் பக்கவாட்டுகளிலும், பின்புறத்திலும் EV பேட்ஜிங் பொருத்தப்பட்டிருக்கும்.

டாடா ஹாரியர் எலெக்ட்ரிக்: இன்டீரியர்
உட்புறத்தில், டாடா ஹாரியர் பேசிக் வேரியண்டில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளேவுடன் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தானியங்கி கிளைமேட் கண்ட்ரோல், பின்புறமும் ஏசி வென்ட்கள், நான்கு-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது.
டாடா ஹாரியர் எலெக்ட்ரிக்: பேட்டரி மற்றும் பவர்டிரெய்ன்
டாடா நிறுவனம், ஹாரியர் எலெக்ட்ரிக் காரில் 75 கிலோவாட் பேட்டரி பேக் பொருத்தப்பட்டு, 627 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த விவரக்குறிப்புகள் மின்சார எஸ்யூவியின் டாப் வேரியண்ட்களைப் பொறுத்தது. அட்வென்ச்சர் வேரியண்டின் சரியான பேட்டரி மற்றும் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது 65 கிலோவாட் பேட்டரி பேக் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






