என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
இந்தியாவில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு
Byமாலை மலர்12 May 2019 10:27 AM GMT (Updated: 12 May 2019 10:27 AM GMT)
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது.
சாம்சங் நிறுவனம் 2018 கேலக்ஸி ஏ7 மற்றும் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. சத்தமில்லாமல் விலை குறைக்கப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களின் புதிய விலை அந்நிறுவன வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.25,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.28,990 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வேரியண்ட் ரூ.31,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
கேலக்ஸி ஏ7 (2018) 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலும் ரூ.3000 விலை குறைக்கப்பட்டு ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது முன்னதாக ரூ.22,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமானது முதல் இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இரு ஸ்மார்ட்போன்களின் விலை ஏப்ரல் மாதத்தில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X