என் மலர்

    நீங்கள் தேடியது "OnePlus"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலுக்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
    • புதிய ஒன்பிளஸ் டேப்லெட் பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. புதிய ஒன்பிளஸ் பேட் கோ விலை பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் பேட் கோ வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியான நிலையில், தற்போது டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    புதிய டேப்லெட் பற்றி அந்நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டேப்லெட்-இன் படமும் "What's work without a little play" மற்றும் "Take a Guess" என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் வெளியீட்டை உணர்த்துவதாகவே தெரிகிறது. வரும் நாட்களில் இந்த சாதனம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    டிப்ஸ்டரான இஷான் அகர்வால் ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையின் பட்ஜெட் ரக டேப்லெட் மாடல்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாகவும், இந்த பிரிவில் முதல் டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில், புதிய டேப்லெட் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் பேட் கோ மாடலை இந்தியா உள்பட சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த மாடல் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போதைக்கு இந்த மாடல்களின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம்.
    • ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய டேப்லெட் மாடல் பற்றிய விவரங்கள் இடம்பெற்று உள்ளது.

    அதன்படி புதிய ஒன்பிளஸ் டேப்லெட் OPD2304 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் ஒன்பிளஸ் ஃபோரமிலும் இடம்பெற்று, பிறகு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவைதவிர இந்த டேப்லெட் பற்றிய விவரங்கள் பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டான்டர்ட்ஸ் (பி.ஐ.எஸ்.) தளத்திலும் இடம்பெற்று இருக்கிறது. இவை இந்த டேப்லெட் நிச்சயம் வெளியிடப்படும் என்பதை உணர்த்துகிறது.

     

    இத்துடன் புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. OP2304 மற்றும் OP2305 என இரண்டு மாடல் நம்பர்கள் இடம்பெற்று இருப்பதால், இந்த டேப்லெட் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவை வை-ஃபை மற்றும் செல்லுலார் வேரியண்ட்களை குறிக்கலாம்.

    பி.ஐ.எஸ். தளத்தில் இந்த டேப்லெட் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருப்பதால், இந்த சாதனம் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இத்துடன் 11.61 இன்ச் IPS LCD ஸ்கிரீன், 2K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. UFS 3.1 மெமரி, 9510 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 13MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 13.1 வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய ஸ்கிரீன் வாரண்டி திட்டம் இந்தியாவில் வசிக்கும் ஒன்பிளஸ் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
    • ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வைத்திருப்போர் இதில் பயன்பெற முடியும்.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது பயனர்கள் தொர்ச்சியாக தெரிவித்துவந்த "கிரீன் லைன்" (Green Line) பிரச்சினைக்கு பதில் அளித்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட இந்திய பயனர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் ஒன்பிளஸ் பயனர்களுக்கு வாழ்நாள் முழுக்க ஸ்கிரீன் வாரண்டி வழங்கப்படுகிறது.

    பல்வேறு ஒன்பிளஸ் பயனர்கள் AMOLED பேனல் கொண்ட தங்களது பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் "கிரீன் லைன்" பிரச்சினை இருப்பதாக குற்றம்சாட்டி வந்தனர். அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இதே பிரச்சினை பல்வேறு சாதனங்களில் ஏற்பட்டு இருப்பதை அடுத்து, ஒன்பிளஸ் நிறுவனம் இதனை சரிசெய்வதற்காக வாழ்நாள் ஸ்கிரீன் வாரண்டியை வழங்குகிறது.

     

    ஒன்பிளஸ் 8 ப்ரோ, ஒன்பிளஸ் 8T, ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9R ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள், அவற்றில் "கிரீன் லைன்" ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரி செய்தற்கான கட்டணம் வாரண்டியில் இருந்து பிடித்துக் கொள்ளப்படும்.

    வாழ்நாள் ஸ்கிரீன் வாரண்டி திட்டம் இந்தியாவில் வசிக்கும் ஒன்பிளஸ் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒன்பிளஸ் எக்ஸ்-க்ளூசிவ் சர்வீஸ் சென்டர்களில் ஒட்டப்பட்டு இருக்கும் நோட்டீஸ்களில், "கிரீன் லைன்" பிரச்சினை கொண்ட பயனர்கள் தங்களது சாதனத்திற்கு அப்கிரேடு முறையில் தள்ளுபடி பெற்றுக் கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் பாதிக்கப்பட்ட சாதனங்களை கொடுத்து புதிய ஒன்பிளஸ் மாடல்களை வாங்கிக் கொள்ள முடியும்.

    இதற்கு பயனர்கள் சாதனத்தை ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் வாங்க வேண்டும். இந்த அறிவிப்பின் படி ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் வாங்கும் போது, ரூ. 4 ஆயிரத்து 500 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    Photo Coutersy: OnePlus Community

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    • 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் நார்டு CE 3 5ஜி 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு CE 3 5ஜி மற்றும் நார்டு 3 5ஜி ஸ்மார்ட்போன்களை ஜூலை மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் நார்டு 3 ஸ்மார்ட்போன் ஜூலை 15-ம் தேதியில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நார்டு CE 3 5ஜி மாடல் விற்பனை இதுவரை துவங்கப்படவில்லை.

    இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மாடலின் இந்திய விற்பனை ஆகஸ்ட் 4-ம் தேதி துவங்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மாடலின் விற்பனை ஆகஸ்ட் 4-ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மாடல் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 26 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    வங்கி சலுகைகள், எக்சேன்ஜ் தள்ளுபடி உள்ளிட்டவைகளை சேர்த்து ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மாடலை ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இந்த ஸ்மார்ட்போன் அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

     

    ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி அம்சங்கள்:

    6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 2412x1080 பிக்சல், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    ஸ்னாப்டிராகன் 782ஜி பிராசஸர்

    அதிகபட்சம் 12 ஜிபி ரேம்

    அதிகபட்சம் 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    50MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ லென்ஸ்

    16MP செல்பி கேமரா

    ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 13.1

    டூயல் சிம்

    5ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவு வெளியாகி உள்ளது.
    • புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியான நிலையில், இது ஒன்பிளஸ் போல்டு அல்லது ஒன்பிளஸ் V போல்டு போன்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

    எனினும், சமீபத்திய தகவல்களில் இந்த மாடல் ஒன்பிளஸ் ஒபன் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் ஒபன் தான் அந்நிறுவனத்தின் முதல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போனின் பெயராக இருக்கும் என்று கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

     

    அதில் "We OPEN when others FOLD" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனம் தென்கொரியாவில் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், ஒன்பிளஸ் இந்த பதிவை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் பெயரில் அறிமுகமாகும் என்று உறுதியாகி இருக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இதன் வெளியீடு அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலுடன் ஒன்பிளஸ் நார்டு CE 3 மற்றும் ஏஸ் 2 ப்ரோ மாடல்களும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.
    • ஒன்பிளஸ் 12 மாடலில் 32MP செல்ஃபி கேமரா, பன்ச் ஹோல் கட்-அவுட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒன்பிளஸ் 12 வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    எனினும், புதிய ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 5400 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

     

    இதுபற்றி டிப்ஸ்டர் மேக்ஸ் ஜம்போர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் 12 மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது.

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    ஒன்பிளஸ் 12 மாடலில் ஆன்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 14, 6.7 இன்ச் புளூயிட் LTPO AMOLED டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் நிறுவனத்தின் இதுவரை அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 16 ஜிபி LPDDR5X ரேம், UFS 4.0 ரக ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

     

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் பன்ச் ஹோல் கட்-அவுட், அலர்ட் ஸ்லைடர், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5400 எம்ஏஹெச் பேட்டரி, , 100 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 56 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 61 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ கஸ்டமைஸ் செய்யக்கூடிய டைப்பிங் அனுபவத்தை வழங்குகிறது.
    • ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ வயர்டு மற்றும் வயர்லெஸ் முறையில் கனெக்டிவிட்டி ஆப்ஷன் வழங்குகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் மெக்கானிக்கல் கீபோர்டு, ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ விலை மற்றும் விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஏப்ரல் 2023 வாக்கில் வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ மாடல் தற்போது தான் விற்பனைக்கு வருகிறது.

    அலுமினியம்-கிராஃப்ட் செய்யப்பட்டு மிகக் குறைந்த எடை கொண்டிருக்கும் ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ கஸ்டமைஸ் செய்யக்கூடிய டைப்பிங் அனுபவத்தை வழங்குகிறது. இதில் ஹாட்-ஸ்வாப் செய்யக்கூடிய ஸ்விட்ச்கள், ஒபன்-சோர்ஸ் ஃபர்ம்வேர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவை டைப்பிங்கின் போது தனித்துவம் மிக்க அனுபவத்தை வழங்குகின்றன.

     

    கீக்ரோன் உடனான கூட்டணியில் உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ வயர்டு மற்றும் வயர்லெஸ் முறையில் கனெக்டிவிட்டி ஆப்ஷன் வழங்குகிறது. இதற்காக இந்த கீபோர்டில் ப்ளூடூத் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டு இந்த கீபோர்டினை ஐந்து மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும்.

     

    புதிய ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ மாடல் டார்க் கிரே மற்றும் லைட் கிரே என்று இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விறப்னை ஒன்பிளஸ் வலைதளத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி துவங்க இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படுகிறது.
    • ஒன்பிளஸ் ஒபன் ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என தகவல்.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் ஒன்பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    பிரபல டிப்ஸ்டரான மேக்ஸ் ஜம்போர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி இந்த பெயரில் அறிமுகமாகும் பட்சத்தில், குறைந்தபட்சம் பெயரளவில் இது வித்தியாசமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்கும்.

     

    இதுவரை வெளியாகி இருக்கும் ரென்டர்களின் படி ஒன்பிளஸ் ஒபன் ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்கள், ஹேசில்பிலாடு டியூனிங், ஃபிளாஷ், பக்கவாட்டில் கேரேகை சென்சார், பன்ச் ஹோல் கேமரா கொண்டிருக்கிறது.

    ஒன்பிளஸ் ஒபன் அறிமுக நிகழ்வு நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது. இதே ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஒன்பிளஸ் ஒபன் ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. சாம்சங் தனது கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடல் ஜூலை 26-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 12.
    • புதிய ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல்.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிளாக்ஷிப் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் தான் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஒன்பிளஸ் 11 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி வரும் ஒன்பிளஸ் 12 டிசைன் எப்படி இருக்கும் என்று தற்போதைய டீசர்களில் தெரியவந்துள்ளது.

    பிரபல டிப்ஸ்டரான @OnLeaks வெளியிட்டு இருக்கும் ரென்டர்களில், ஒன்பிளஸ் 12 மாடல் மெல்லிய டிசைன், கிளாசி பிளாக் நிறம் மற்றும் ஒன்பிளஸ் பாரம்பரிய சான்ட்ஸ்டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

     

    புதிய ஒன்பிளஸ் 12 மாடலில் ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் இருப்பதை போன்றே பெரிஸ்கோபிக் டெலிபோட்டோ லென்ஸ் செட்டப் வழங்கப்படுகிறது. கேமரா மாட்யுல் பிளாக் நிற ஸ்ட்ரிப், ஹேசில்பிலாட் பிரான்டிங் கொண்டிருக்கிறது. இவை பக்கவாட்டு ஃபிரேம் பகுதியில் சீராக இணைவதை போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கேமரா ரிங்-இன் கீழ்புறத்தில் க்ரோம் அக்சென்ட் செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பம்ப் உள்ளது.

    பெரிஸ்கோபிக் லென்ஸ்களை வைப்பதற்காக, எல்இடி ஃபிலாஷ் கேமரா ஐலேன்ட்-இன் இடதுபுறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. ஒன்பிளஸ் 12 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மெல்லிய பெசல்களை கொண்டிருக்கின்றன. இத்துடன் பன்ச் ஹோல் டிசைன், ஸ்மார்ட்போனின் நடுவில் வைக்கப்பட்டு இருக்கிறது. இது சாதனத்தின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.

     

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 12 மாடலில் வளைந்த 2K டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், 120Hz ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 150 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அட்ரினோ 750 GPU வழங்கப்படலாம்.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP வைடு ஆங்கில் லென்ஸ், 64MP ஆம்னிவிஷன் பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது. வரும் மாதங்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய மேலும் புதிய விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நார்டு பட்ஸ் 2r மாடலில் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இத்துடன் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி மற்றும் 94ms வரையிலான லேடன்சி வழங்குகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நார்டு சீரிஸ் சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி, நார்டு CE3, ஒன்பிளஸ் புல்லட்ஸ் Z2 ANC, ஒன்பிளஸ் நார்டு 2r மாடல்கள் இதில் அடங்கும்.

    புதிய நார்டு பட்ஸ் 2r மாடலில் உள்ள குறைந்த விலை ஆடியோ தொழில்நுட்பம் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதன் இயர்பட்ஸ் சவுகரிமான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் 12.4mm டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் மாஸ்டர் இக்வலைசேஷன் சிஸ்டம்- போல்டு, பேஸ் மற்றும் பேலன்ஸ்டு போன்ற சவுன்ட் ப்ரோஃபைல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருப்பதால், இந்த இயர்பட்ஸ் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதில் உல்ள டிராக் ஆடியோ டியுனர் சீரான செயல்திறன், சிறப்பான ஃபிடெலிட்டி வழங்குகிறது.

     

    ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2r மாடலில் டூயல் மைக் மூலம் சிறப்பான ஆடியோ மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படுகிறது. ஏ.ஐ. க்ளியர் கால் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் அழைப்புகளின் போது, பேக்கிரவுன்ட் நாய்ஸ்-ஐ குறைக்கிறது. இத்துடன் ப்ளூடூத் 5.3 மற்றும் 94ms வரையிலான லேடன்சி வழங்குகிறது.

    இதில் உள்ள ஃபாஸ்ட் பேர் அம்சம் அதிவேக கனெக்டிவிட்டி வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இத்துடன் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 38 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் IP55 தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2r விலை ரூ. 2 ஆயிரத்து 199 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் டீப் கிரே மற்றும் ட்ரிபில் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print