search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tablet"

    • புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி பேட் SE மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு செய்யப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி இந்தியாவில் ஸ்மார்ட் லிவிங் 2024 நிகழ்வை அறிவித்துள்ள சியோமி, அதில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    புது சாதனங்களில் ஒன்று டேப்லெட் மாடலாக இருக்கும் என்று கூறப்பட்டது. தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், சியோமி நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. டீசரில் ரெட்மி பேட் SE மாடல் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. இதில் டேப்லெட் மட்டுமின்றி அதன் டிசைன், நிறங்கள் மற்றும் சில அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

     


    இந்திய சந்தையில் ரெட்மி பேட் SE மாடல் கிரீன், கிரே மற்றும் லாவண்டர் என மூன்று நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும். டிசைனை பொருத்தவரை இந்த மாடல் அதன் ஐரோப்பிய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் 11 இன்ச் FHD+ 1900x1200 LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 14 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படும் என்று தெரிகிறது. சர்வதேச சந்தையில் ரெட்மி பேட் SE மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரம் என துவங்குகிறது.

    • இந்த டேப்லெட் மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • ரியல்மி பேட் 2 மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பேட் 2 வைபை மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய P1 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் இந்த டேப் அறிமுகமாகி இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி பேட் 2 வைபை மாடலில் 11.5 இன்ச் 2K LCD ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    7.2mm அளவில் மிக மெல்லிய மெட்டல் பாடி மற்றும் குளோயிங் ஸ்பைஸ் டிசைன் கொண்டிருக்கும் ரியல்மி பேட் 2 வைபை மாடல் 8360 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

     


    ரியல்மி பேட் 2 வைபை அம்சங்கள்:

    11.5 இன்ச் 2K 2000x1200 LCD ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர்

    Arm Mali-G57 MC2 GPU

    6 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. 4

    8MP பிரைமரி கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ்

    குவாட் ஸ்பீக்கர்கள்

    வைபை, ப்ளூடூத் 5.3, யு.எஸ்.பி. டைப் சி

    8360 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    ரியல்மி பேட் 2 வைபை மாடல் இமேஜினேஷன் கிரே மற்றும் இன்ஸ்பிரிஷேன் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • புது ஐபேட்கள் இருவித அளவுகளில் கிடைக்கும்.
    • இதுவே வெளியீட்டை தாமதப்படுத்தி இருக்கிறது.

    ஆப்பிள் நிருவனம் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களை மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், புது ஐபேட் மாடல்களின் வெளியீடு தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய ஆப்பிள் டேப்லெட் மாடல்கள் மே மாத வாக்கில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    இது குறித்து ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில், "ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களை மே மாத துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது."

    "புது ஐபேட் ப்ரோ மாடல்களில் OLED டிஸ்ப்ளே தொழில்நுட்பம், மேஜிக் கீபோர்டு, புதிய M3 சிப்செட்கள் வழங்கப்படலாம். புதிய ஐபேட் ஏர் மாடல்கள் 11.9 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐபேட் மாடல்களின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். புது ஐபேட் ப்ரோ மாடல்களில் உள்ள OLED டிஸ்ப்ளேவை அசெம்பில் செய்ய சிக்கலான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதே, வெளியீட்டை தாமதப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு ஜூன் 10 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தது. இந்த நிகழ்வு ஆப்பிள் பார்க் வளாகத்தில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் டெவலப்பர்கள் ஆப்பிள் குழுவினரை நேரில் சந்தித்து உரையாட சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது.
    • 465 கிராம் எடையில் மிக மெல்லிய டிசைன் கொண்டுள்ளது.

    லெனோவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப்லெட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லெனோவோ டேப் M11 மாடல் முன்னதாக 2024 சர்வதேச நுகர்வோர் மின்சாதன நிகழ்வில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய லெனோவோ டேப் M11 மாடல் 7.15mm அளவில், 465 கிராம் எடையில் மிக மெல்லிய டிசைன் கொண்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை 11 இன்ச் 90Hz டிஸ்ப்ளே, 1920x1200 WUXGA ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டி.யு.வி. ரெயின்லாந்து மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் HD சான்று பெற்றுள்ளது. இந்த டேப்லெட் மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், மாலி G52 GPU, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது.

     


    லெனோவோ டேப் M11 அம்சங்கள்:

    11 இன்ச் 1920x1200 WUXGA டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர்

    மாலி G52 GPU

    8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    13MP பிரைமரி கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    ஆண்ட்ராய்டு 13

    குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி

    3.5mm ஆடியோ ஜாக், வைபை, ப்ளூடூத் 5.1

    7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    15 வாட் சார்ஜிங் வசதி

    லெனோவோ டேப் பென் மற்றும் கீபோர்டு சப்போர்ட்

    லெனோவோவின் புதிய டேப் M11 மாடல் சீஃபார்ம் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் இந்தியா வலைதளத்தில் நடைபெறுகிறது.

    • இதில் புதிய ஆப்பிள் பென்சில்கள் மற்றும் மேஜிக் கீபோர்டு உள்ளிட்டவை அடங்கும்.
    • இந்த சாதனங்கள் சர்வதேச சந்தையில் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சாதனங்கள் செய்தி குறிப்பின் வாயிலாகவே அறிவிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

    இம்முறை புதிய மேக்புக் ஏர் மாடல்களுடன் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் புதிய நிற ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் புதிய ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் மற்றும் மேக்புக் ஏர் மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த சாதனங்கள் வரும் வாரத்திலேயே அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

     


    பிரபல ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில் வரும் வாரங்களில் ஆப்பிள் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள், மேம்பட்ட ஐபேட் ஏர், 12.9 இன்ச் மாடல், புதிய ஆப்பிள் பென்சில்கள் மற்றும் மேஜிக் கீபோர்டு உள்ளிட்டவை அடங்கும்.

    மேக் சாதனங்களை பொருத்தவரை 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல்கள் அதிநவீன M3 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த சாதனங்கள் அனைத்தும் சர்வதேச சந்தையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை மிக விரைவில் அறிவிக்க ஆப்பிள் விளம்பர குழுக்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    • பெண்கள் ஒருபோதும் ஹேண்ட் பேக் எடுத்துச் செல்ல மறப்பதில்லை.
    • நமக்குத் தேவையான பொருட்களை அதில் வைத்து எடுத்துச் செல்லலாம்.

    பொதுவாக பெண்கள் எங்கு சென்றாலும் தங்களது ஹேண்ட்பேக்கை எடுத்துச் செல்வார்கள். இதை அவர்கள் ஒருபோதும் எடுத்துச்செல்ல மறப்பதில்லை. இதனால் நமக்குத் தேவையான பொருட்களை அதில் வைத்து எடுத்துச் செல்லலாம்.

    மேலும் பெண்கள் தங்கள் ஹேண்ட் பேக்கில் ஸ்நாக்ஸ், சாக்லேட், மேக்கப் கிட் போன்றவை தான் அதிகமாகவே இருக்கும். ஆனால், இவற்றை தவிர உங்களது பாதுகாப்பிற்காகவும், அவசர தேவைக்காகவும் சில பொருட்களை கண்டிப்பாக ஹேண்ட் பேக்கில் வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பணிபுரியும் பெண்கள் இதனை வைத்திருப்பதால் அவை நிச்சயம் உங்களுக்கு உதவும். அவை எது என்று இந்த பதிவில் பார்க்கலாம்....

     ஹேண்ட் சானிடைஷர்:

    பைக், ஸ்கூட்டி, பஸ், ரெயில் என பல வழிகளில் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்கிறார்கள். பயணத்தின் போது பல வகையான கிருமிகள் கைகளில் ஒட்டிக்கொள்வது மட்டுமின்றி, கைகளும் அழுக்காகிவிடும். மேலும் கைகளை உடனே, தண்ணீரில் கழுவுவது சாத்தியமில்லை. அச்சமயத்தில், சானிடைசர் நிச்சயமாக உங்களுக்கு உதவும். இதனால் பிரச்சனை ஏதும் இல்லை.

     வாய் ஃப்ரெஷ்னர்:

    அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு வாயில் இருந்து வரும் துர்நாற்றத்தை சமாளிக்க வாய் ஃப்ரெஷ்னர் பயன்படுத்துங்கள். இது உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியாக வைக்கும். எனவே, இதை எப்போதும் கைப்பையில் வைத்திருக்க வேண்டும்.

     தண்ணீர் பாட்டில்:

    தண்ணீர் தான் உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. மேலும் நாம் சராசரியாக ஒரு நாளைக்கு 8 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே, உங்கள் கைப் பையில் தண்ணீர் பாட்டில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

     மாத்திரை:

    எப்போதுமே, காய்ச்சல் தலைவலியை குறைக்கும் மாத்திரைகளை உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைப்படும் போது பயன்படுத்தலாம் அல்லது தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கலாம்.

     சானிடரி நாப்கின்:

    ஒவ்வொரு பெண்களின் கைப்பையில் சானிட்டரி நாப்கின் அவசியம் இருக்க வேண்டும். உங்களுக்கு வேண்டும் சமயத்தில் உபயோகித்துக் கொள்ளலாம் இல்லையெனில், மற்றவர்களுக்கு கொடுத்து உதவலாம்.

     பெப்பர் ஸ்பிரே:

    ஒவ்வொரு பெண்களும் தங்களது கைப்பையில் பெப்பர் ஸ்ப்ரே வைத்திருப்பது நல்லது. அது உங்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும். இது ஒரு தற்காப்பு ஆயுதமாக பயன்படுத்தப்படலாம்.

     சேஃப்டி பின்கள்:

    உங்கள் டிரஸ்சில் திடீரென்று ஊக்கு இல்லையென்று உணரும் போது இது நிச்சயமாக உங்களுக்கு உதவும். எனவே சேஃப்டி பெண்களை எப்போதும் உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள்.

    • புது அக்சஸரீக்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படலாம்.
    • மினி எல்.இ.டி. ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டிற்கு முன் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார்.

    அந்த வகையில், மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட ஐபேட் ஏர், அளவில் பெரிய ஐபேட் ஏர் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றில் மேக்புக் ஏர் மாடல் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் டிஸ்ப்ளே ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இவற்றில் M3 பிராசஸர்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

     


    புதிய ஐபேட் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்களுடன் புது அக்சஸரீக்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐ.ஒ.எஸ். 17.4 வெர்ஷனின் முதல் பீட்டாவில் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவை ஐபேட் ப்ரோவில் பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. இத்துடன் ஃபேஸ் ஐ.டி. கேமராவும் வழங்கப்படுகிறது.

    2024 ஐபேட் மாடலில் புதிய OLED ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் இவற்றில் அதிக பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் அதிக நேர பேட்டரி பேக்கப் வழங்கும் மினி எல்.இ.டி. ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    • ரெட்மி பேட் மாடலில் மீடியாடெக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்தியாவில் ரெட்மி பேட் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி பேட் டேப்லெட் இந்திய விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ரெட்மி பிராண்டின் முதல் டேப்லெட் என்ற பெருமையுடன் ரெட்மி பேட் அறிமுகம் செய்யப்பட்டது.

    பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி பேட் மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அறிமுகமாகி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், ரெட்மி பேட் இந்திய விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

     

    புதிய விலை விவரங்கள்:

    ரெட்மி பேட் (3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி) ரூ. 13 ஆயிரத்து 999

    ரெட்மி பேட் (4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 14 ஆயிரத்து 999

    ரெட்மி பேட் (6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 16 ஆயிரத்து 999

    இதன் மூலம் ரெட்மி பேட் விலை அதிகபட்சம் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ரெட்மி பேட் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என துவங்கியது. இதன் 4 ஜி.பி. ரேம் மற்றும் 6 ஜி.பி. ரேம் மாடல்களின் விலை ரூ. 17 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     


    விலை குறைப்பு மட்டுமின்றி ரெட்மி பேட் வாங்குவோர் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போதோ அல்லது மாத தவணை முறைகளை பயன்படுத்தும் போதோ அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. நெட் பேங்கிங் பயன்படுத்தும் போது ரூ. 1500 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்டிற்கு மட்டும் ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. 

    மெடிக்கலுக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு அருகே இளையனார்குப்பம் உள்ளது. இங்கு செல்லக்கோட்டி (வயது 45) என்பவர் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். அங்குள்ள நோயாளிகளுக்கு, டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருத்து கொடுப்பது, ஊசி போடுவது என அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வந்துள்ளார்.

    மேலும், ஒரு சில நோயாளிகளுக்கு அவரே மாத்திரை தயாரித்தும் வழங்கி வந்துள்ளார். இது குறித்து சங்கராபுரம் தாசில்தார் குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு தாசில்தார் குமரன் விரைந்து சென்றார்.அங்கிருந்த மெடிக்கலுக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர். மேலும், மாத்திரை, மருந்து தயாரித்த மெடிக்கல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒன்பிளஸ் பேட் கோ போன்றே காட்சியளிக்கிறது.
    • ஒப்போ ரெனோ 11 சீரிஸ் மாடல்களும் அறிமுகம்.

    ஒப்போ நிறுவனத்தின் புதிய பேட் ஏர் 2 மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் இந்த மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஒப்போ பேட் ஏர் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய டேப்லெட் வெளியீட்டை ஒட்டி, இதன் சிறப்பம்சங்கள் மற்றும் டிசைன் சார்ந்த விவரங்கள் டீசர்களாக வெளியாகி உள்ளன.

    டீசர்களின் படி இந்த டேப்லெட் தடிமனான டிஸ்ப்ளே, வளைந்த கார்னர்கள் மற்றும் இருவித நிறங்களை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதன் டிசைனை பார்க்க ஒப்போ பேட் ஏர் மற்றும் ஒன்பிளஸ் பேட் கோ போன்றே காட்சியளிக்கிறது. நவம்பர் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒப்போ பேட் ஏர் 2 மாடலுடன் ஒப்போ ரெனோ 11 மற்றும் ரெனோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    புதிய ஒப்போ பேட் ஏர் 2 டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய ஒப்போ பேட் ஏர் 2 விலை CNY1000 இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 500 வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் 11.35 இன்ச் 2.4K 1720x2408 பிக்சல் LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி, 8MP பிரைமரி கேமரா, EIS, 8MP செல்ஃபி கேமரா, 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலுக்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
    • புதிய ஒன்பிளஸ் டேப்லெட் பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. புதிய ஒன்பிளஸ் பேட் கோ விலை பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் பேட் கோ வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியான நிலையில், தற்போது டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    புதிய டேப்லெட் பற்றி அந்நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டேப்லெட்-இன் படமும் "What's work without a little play" மற்றும் "Take a Guess" என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் வெளியீட்டை உணர்த்துவதாகவே தெரிகிறது. வரும் நாட்களில் இந்த சாதனம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    டிப்ஸ்டரான இஷான் அகர்வால் ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையின் பட்ஜெட் ரக டேப்லெட் மாடல்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாகவும், இந்த பிரிவில் முதல் டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில், புதிய டேப்லெட் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் பேட் கோ மாடலை இந்தியா உள்பட சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த மாடல் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போதைக்கு இந்த மாடல்களின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம்.
    • ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய டேப்லெட் மாடல் பற்றிய விவரங்கள் இடம்பெற்று உள்ளது.

    அதன்படி புதிய ஒன்பிளஸ் டேப்லெட் OPD2304 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் ஒன்பிளஸ் ஃபோரமிலும் இடம்பெற்று, பிறகு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவைதவிர இந்த டேப்லெட் பற்றிய விவரங்கள் பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டான்டர்ட்ஸ் (பி.ஐ.எஸ்.) தளத்திலும் இடம்பெற்று இருக்கிறது. இவை இந்த டேப்லெட் நிச்சயம் வெளியிடப்படும் என்பதை உணர்த்துகிறது.

     

    இத்துடன் புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. OP2304 மற்றும் OP2305 என இரண்டு மாடல் நம்பர்கள் இடம்பெற்று இருப்பதால், இந்த டேப்லெட் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவை வை-ஃபை மற்றும் செல்லுலார் வேரியண்ட்களை குறிக்கலாம்.

    பி.ஐ.எஸ். தளத்தில் இந்த டேப்லெட் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருப்பதால், இந்த சாதனம் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இத்துடன் 11.61 இன்ச் IPS LCD ஸ்கிரீன், 2K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. UFS 3.1 மெமரி, 9510 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 13MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 13.1 வழங்கப்பட்டு இருக்கிறது. 

    ×