search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC Cricket World Cup 2019"

    ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்குவதை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.



    ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று தொடங்குகின்றன. பத்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. இங்கிலாந்து சார்பில் நடத்தப்படும் ஐ.சி.சி. உலகக் கோப்பை போட்டிகளை காண உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

    இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் வண்ணமிகு அனிமேஷன் காட்சிகளுடன் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் வலைதளத்தை திறக்கும் போது லோகோவுக்கு அடுத்து நான்கு புள்ளிகள் இடம்பெற்றிருக்கிறது.



    அதனை க்ளிக் செய்ததும் கூகுள் வார்த்தையில் O மற்றும் L எழுத்துக்கள் கிரிக்கெட் பந்து மற்றும் விக்கெட்களாக மாறும் அனிமேஷன் காட்சிகள் தோன்றுகிறது. இத்துடன் டூடுளை க்ளிக் செய்ததும் கூகுள் சர்ச் பக்கம் ஒன்று திறக்கிறது. அதில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் சார்ந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    இந்த பக்கம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நிறைவுறும் வரை இருக்கும். இன்று துவங்கும் முதல் போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு துவங்குகிறது. இரண்டாவது போட்டி நாளை மதியம் 3.00 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மோதுகின்றன. 
    உலகக்கோப்பைக்கான இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் வெற்றி வாகை சூடியுள்ள ஆஸ்திரேலிய அணியை நோக்கி மூன்று கேள்விகள் காத்திருக்கின்றன.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். அதன்பின் ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட்டில் தனது உத்வேகத்தை இழந்தது. தோல்விமேல் தோல்விகளை சந்தித்தது.

    இதனால் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குக் கூட முன்னேறுவது சந்தேகம் எனக் கூறப்பட்டது.

    இந்நிலையில்தான் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், கடைசி மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. அதன்பின் பாகிஸ்தான் அணிக்கெதிராக ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது.

    இதனால் ஆஸ்திரேலியா அணியின் மீதான எதிர்பார்ப்பு மளமள என உயர்ந்தது. இதனால் உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வார்னர், ஸ்மித் ஆகியோர் தற்போது தடைக்காலம் முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் அந்த அணி கூடுதல் பலத்துடன் விளங்குகிறது.

    வார்னர், ஸ்மித் இல்லாத நேரத்தில் கவாஜா தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஷேன் மார்ஷ் இணைந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் வார்னர், கவாஜா சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வதில் அந்த அணிக்கு முக்கியமான மூன்று கேள்விகள் காத்துக் கொண்டிருக்கிறன.

    முதல் கேள்வி:-



    வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதால் கவாஜா மற்றும் ஷான் மார்ஷ் ஆகியோருக்கு இடம் கிடைக்குமா? என்பது சந்தேகமே. குறிப்பாக கவாஜாவுக்கு இடம் கிடைத்தால், அவரால் தொடக்க வீரராக களம் இறங்க முடியுமா?, அப்படி என்றால் வார்னர் அல்லது ஆரோன் பிஞ்ச் ஆகியோரில் ஒருவர் 3-வது இடத்தில் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்படும். இதை ஆஸ்திரேலியா எப்படி சரி செய்யும் என்பது மிகப்பெரிய கேள்வியே.

    2-வது கேள்வி:



    கேப்டன் ஆரோன் பிஞ்ச் உலகக்கோப்பையில் ஆடம் ஜம்பாதான் முதல் சுழற்பந்து வீச்சாளராக இருப்பார் என்று கூறினார். ஆனால் பயிற்சி ஆட்டத்தின்போது நாதன் லயனுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியா மூன்று முதன்மை பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும். அப்போது இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினால், முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரை நீக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் எத்தனை சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என்பது 2-வது கேள்வி.

    3-வது கேள்வி:



    மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கு ஏராளமான போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு, இவரையும் உலகக்கோப்பைக்காக தயார் செய்து வைத்துள்ளது. இவர்களுக்கு துணையாக பந்து வீசும் ஹசில்வுட் அணியில் இல்லை. ஜை ரிச்சர்ட்சன் காயத்தால் அணியில் இடம் பெறவில்லை.

    நாதன் கவுல்டர்-நைல், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெரேண்டர்ப் ஆகியோர் உள்ளனர். இவர்களில் யாரைத் தேர்வு செய்வார்கள் என்பது மூன்றாவது கேள்வி. இந்த மூன்று கேள்விக்கும் உரிய பதிலோடு ஆஸ்திரேலியா உலகக்கோப்பை தொடரை எதிர்கொள்ளும்.
    பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான இருக்கும் என கருதப்படும் இந்த உலகக்கோப்பையில் பந்து வீச்சாளர்கள் ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருப்பார்கள் என லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.
    கிரிக்கெட் போட்டியில் யார்க்கர் என்றாலே வக்கார் யூனிஸ்க்குப் பிறகு சற்றென்று நினைவுக்கு வரும் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. 35 வயதாகும் இவர்  உலகக்கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்.

    வயது மற்றும் உடற்தகுதி பிரச்சனை ஆகியவற்றால் மலிங்காவால் சிறப்பாக பந்துவீச முடியவில்லை என்ற விமர்சனம் ஒருபக்கம் இருந்தாலும், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் 16 விக்கெட்டுக்கள் கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.

    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் நாளைமறுநாள் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் பந்து வீச்சாளர்கள் ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருப்பார்கள் என்று லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மலிங்கா கூறுகையில் ‘‘கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், பந்து வீச்சாளர்களால் ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருக்க முடியும். அவர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்தும்போது, போட்டியில் வெற்றி பெற முடியும்.



    திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்களை  எந்த அணியில் இடம் பிடித்திருந்தாலும், எந்தவொரு ஆடுகளத்திலும் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார்கள். போட்டியை எப்படி ஆராய வேண்டும் என்பது பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியம்.

    நான் கடந்த சில வருடங்களாக விதவிதமான பந்து வீச்சுக்கள் (variations) மீது கவனம் செலுத்தி வருகிறேன். இது எனக்கு உறுதியை அதிக அளவில் கொடுத்துள்ளது. ஆனால், போட்டியில் சூழ்நிலையை நன்கு அறிவது மிக மிக முக்கியம்’’ என்றார்.
    தன்னை கண்டு எதிரணி பவுலர்கள் இன்னும் நடுங்குகிறார்கள் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் கெய்ல் கூறியுள்ளார்.
    ஆன்டிகுவா:

    5-வது முறையாக உலக கோப்பையில் விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் 39 வயதான கிறிஸ் கெய்ல் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் எனது தலைக்கு குறி வைக்கிறார்கள். அதனால் முந்தைய போட்டிகளை போன்று இந்த உலக கோப்பை எனக்கு எளிதாக இருக்காது. அப்போது நான் அதிரடியாக ஆடி மிரட்டினேன். ஆனாலும் அவர்களுக்கு (பவுலர்கள்) என் மீது இன்னும் பயம் இருக்கும். இந்த ‘யுனிவர்ஸ் பாஸ்’ (கெய்லின் பட்டப் பெயர்) என்ன செய்வார், அவரது திறமை என்ன என்பதை அவர்கள் அறிவார்கள். இவர்தான் உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன் என்பது எதிரணி பந்து வீச்சாளர்களின் மனதில் நிச்சயம் இருக்கும்.

    கேமராவின் முன் கேட்டால், கெய்லை கண்டு பயமா? இல்லவே இல்லை என்பார்கள். இதையே தனியாக கேட்டால், ‘கெய்ல் எப்போதும் கெய்ல் தான்’ என்று சொல்வார்கள். இதை நான் ரசித்து மகிழ்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான போராட்டத்தை நான் எப்போதும் உற்சாகமாக அனுபவித்து ஆடுகிறேன். இது, சில சமயம் ஒரு பேட்ஸ்மேனாக, எனக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கிறது. இத்தகைய சவால்கள் எனக்கு பிடித்திருக்கிறது.

    ஐ.பி.எல். போட்டி ஓரளவு நன்றாக அமைந்தது. இப்போது நல்ல பார்மில் உள்ளேன். உலக கோப்பை நீண்ட தொடர். முடிந்தவரை சூழலை நன்கு கணித்து, சரியான மனநிலையுடன் ஆட வேண்டும் என்பதே எனது நோக்கம்.

    இவ்வாறு கெய்ல் கூறினார்.

    ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கெய்ல் 39 சிக்சர் உள்பட 424 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
    ×