search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2019 world cup"

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சச்சின் டெண்டுல்கர் உலக கோப்பையில் மீண்டும் களமிறங்க உள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணியில் இருந்து, இவர் உலக கோப்பையில் ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.

    இன்றளவும் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. பல்வேறு தொடர்களில் பலமுறை  ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

    உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடங்க உள்ளது. முதல் சுற்றான இதில், இங்கிலாந்து-தென்ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது.

    இதில் கமெண்டரி பாக்ஸில் சச்சின், வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.

    சச்சின் டெண்டுல்கரின் இந்த புதிய அவதாரம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் மதியம் 1.30 மணி அளவில் தனி தொகுப்பாக 'Sachin Opens Again' எனும் தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது.

        
     
    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 500 ரன்களை எட்டிய முதல் அணி என்பதை வெஸ்ட் இண்டீஸ் ரிஜிஸ்டர் செய்யும் என ஷாய் ஹோப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன. வெஸ்ட் இண்டீஸ் தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 421 ரன்கள் குவித்தது. 3-வது வீரராக களம் இறங்கிய ஷாய் ஹோப் 86 பந்தில் 101 ரன்களும், தொடக்க வீரர் லிவிஸ் 54 பந்தில் 50 ரன்களும், அந்த்ரே ரஸல் 25 பந்தில் 54 ரன்களும் அடித்தனர்.

    50 ஓவர் உலகக்கோப்பையில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 481 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ரன்னாக இருக்கிறது. மேலும், 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 500 ரன்னை எட்டும் முதல் அணியாக இங்கிலாந்து இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

    இந்நிலையில் நாங்கள்தான் 500 ரன்களை எட்டிய முதல் அணி என்ற சாதனையை படைப்போம் என ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷாய் ஹோப் கூறுகையில் ‘‘500 ரன்களை எட்ட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. முயற்சி செய்தால் இந்த அரிய சாதனையை எங்களால் படைக்க இயலும். 500 ரன்களை எட்டிய முதல் அணி என்ற பெயர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மிகப்பெரிய பேட்டிங் ஆர்டரை வைத்திருக்கும் எங்களால் இந்த சாதனையை எட்ட முடியும்’’ என்றார்.



    வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பிராத்வைட் கூறுகையில் ‘‘இந்த சாதனையை உங்களால் எட்ட முடியுமா?, அதற்கான சாத்தியக்கூறுகள் உங்களிடம் உள்ளதா? என்று நீங்கள் கேட்டால், நிச்சயமாக இருக்கு என்பேன். எனினும், அதிகாரப்பூர்வமான ஆட்டங்களில் 10-ம் நிலை வீரர்கள் வரை சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்க வாய்ப்பில்லை. இதனால், எதார்த்தமான ஸ்கோர் குறித்து நாம் பேசுவது அவசியம்’’ என்றார்.
    யார்க்கர் பந்துடன் தனது ‘ஸ்லோ பால்’ பந்து வீச்சு முறையுடன் எதிரணியை அச்சுறுத்தும் மலிங்கா, அதை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டாய்னிஸ்க்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
    இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. நேர்த்தியான யார்க்கர் பந்து வீச்சின் மூலம் முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் வல்லவர். அத்துடன் பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத அளவிற்கு ‘ஸ்லோ பால்’-களை அற்புதமாக வீசக்கூடியவர்.

    140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய மலிங்கா, திடீரென 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் மிகவும் மெதுவாக வீசுவார். இதனால் பேட்ஸ்மேன்கள் திணறிவிடுவார்கள். ஐபிஎல் கிரிக்கெட்டில் ‘ஸ்லோ பால்’கள்தான் முன்னணி பேட்ஸ்மேன்களை வெளியேற்றும். யார்க்கருக்குப் பிறகு இதுதான் மலிங்காவின் பிரம்மாஸ்திரமாகும்.

    தற்போது உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியா தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் நேற்று இலங்கையை எதிர்கொண்டது. இதில் இலங்கை 239 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா 44.5 ஓவரில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    இந்த போட்டி முடிந்த பின்னர் லசித் மலிங்காவிடம் சென்று ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஸ்டாய்னிஸ் ‘ஸ்லோ பால்’ வீசுவது எப்படி என்று கேட்டார். தன்னுடைய மிகப்பெரிய பலமாக கருதப்படுவதின் ரகசியத்தை பற்றி கேட்கிறாரே? என்று நினைக்காமல் உடனடியாக அதுபற்றி கற்றுக் கொடுத்தார்.

    மிகப்பெரிய தொடரில் மோதும் நிலையில் இப்படி கற்றுக் கொடுத்துள்ளீர்களே? என்று மலிங்காவிடம் கேட்கப்பட்டது. அதற்கு மலிங்கா கூறுகையில் ‘‘ஸ்டாய்னிஸ் என்னிடம் வந்து ‘ஸ்லோ பால்’ வீசுவது எப்படி என்று கேட்டார். ஷார்ட் பார்மட் போட்டியில் விதவிதமான பந்துகளை (variation) வீசுவது முக்கியமானது. எந்தவொரு வீரர் விரும்பினாலும், எல்லாவித டிப்ஸ்களையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு ‘ஸ்லோ பால்’கள் வீசுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்தேன். அவருடன் இதை பகிர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி’’ என்றார்.
    உலகக்கோப்பைக்கான இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் வெற்றி வாகை சூடியுள்ள ஆஸ்திரேலிய அணியை நோக்கி மூன்று கேள்விகள் காத்திருக்கின்றன.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். அதன்பின் ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட்டில் தனது உத்வேகத்தை இழந்தது. தோல்விமேல் தோல்விகளை சந்தித்தது.

    இதனால் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குக் கூட முன்னேறுவது சந்தேகம் எனக் கூறப்பட்டது.

    இந்நிலையில்தான் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், கடைசி மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. அதன்பின் பாகிஸ்தான் அணிக்கெதிராக ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது.

    இதனால் ஆஸ்திரேலியா அணியின் மீதான எதிர்பார்ப்பு மளமள என உயர்ந்தது. இதனால் உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வார்னர், ஸ்மித் ஆகியோர் தற்போது தடைக்காலம் முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் அந்த அணி கூடுதல் பலத்துடன் விளங்குகிறது.

    வார்னர், ஸ்மித் இல்லாத நேரத்தில் கவாஜா தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஷேன் மார்ஷ் இணைந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் வார்னர், கவாஜா சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வதில் அந்த அணிக்கு முக்கியமான மூன்று கேள்விகள் காத்துக் கொண்டிருக்கிறன.

    முதல் கேள்வி:-



    வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதால் கவாஜா மற்றும் ஷான் மார்ஷ் ஆகியோருக்கு இடம் கிடைக்குமா? என்பது சந்தேகமே. குறிப்பாக கவாஜாவுக்கு இடம் கிடைத்தால், அவரால் தொடக்க வீரராக களம் இறங்க முடியுமா?, அப்படி என்றால் வார்னர் அல்லது ஆரோன் பிஞ்ச் ஆகியோரில் ஒருவர் 3-வது இடத்தில் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்படும். இதை ஆஸ்திரேலியா எப்படி சரி செய்யும் என்பது மிகப்பெரிய கேள்வியே.

    2-வது கேள்வி:



    கேப்டன் ஆரோன் பிஞ்ச் உலகக்கோப்பையில் ஆடம் ஜம்பாதான் முதல் சுழற்பந்து வீச்சாளராக இருப்பார் என்று கூறினார். ஆனால் பயிற்சி ஆட்டத்தின்போது நாதன் லயனுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியா மூன்று முதன்மை பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும். அப்போது இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினால், முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரை நீக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் எத்தனை சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என்பது 2-வது கேள்வி.

    3-வது கேள்வி:



    மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கு ஏராளமான போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு, இவரையும் உலகக்கோப்பைக்காக தயார் செய்து வைத்துள்ளது. இவர்களுக்கு துணையாக பந்து வீசும் ஹசில்வுட் அணியில் இல்லை. ஜை ரிச்சர்ட்சன் காயத்தால் அணியில் இடம் பெறவில்லை.

    நாதன் கவுல்டர்-நைல், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெரேண்டர்ப் ஆகியோர் உள்ளனர். இவர்களில் யாரைத் தேர்வு செய்வார்கள் என்பது மூன்றாவது கேள்வி. இந்த மூன்று கேள்விக்கும் உரிய பதிலோடு ஆஸ்திரேலியா உலகக்கோப்பை தொடரை எதிர்கொள்ளும்.
    பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான இருக்கும் என கருதப்படும் இந்த உலகக்கோப்பையில் பந்து வீச்சாளர்கள் ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருப்பார்கள் என லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.
    கிரிக்கெட் போட்டியில் யார்க்கர் என்றாலே வக்கார் யூனிஸ்க்குப் பிறகு சற்றென்று நினைவுக்கு வரும் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. 35 வயதாகும் இவர்  உலகக்கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்.

    வயது மற்றும் உடற்தகுதி பிரச்சனை ஆகியவற்றால் மலிங்காவால் சிறப்பாக பந்துவீச முடியவில்லை என்ற விமர்சனம் ஒருபக்கம் இருந்தாலும், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் 16 விக்கெட்டுக்கள் கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.

    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் நாளைமறுநாள் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் பந்து வீச்சாளர்கள் ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருப்பார்கள் என்று லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மலிங்கா கூறுகையில் ‘‘கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், பந்து வீச்சாளர்களால் ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருக்க முடியும். அவர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்தும்போது, போட்டியில் வெற்றி பெற முடியும்.



    திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்களை  எந்த அணியில் இடம் பிடித்திருந்தாலும், எந்தவொரு ஆடுகளத்திலும் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார்கள். போட்டியை எப்படி ஆராய வேண்டும் என்பது பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியம்.

    நான் கடந்த சில வருடங்களாக விதவிதமான பந்து வீச்சுக்கள் (variations) மீது கவனம் செலுத்தி வருகிறேன். இது எனக்கு உறுதியை அதிக அளவில் கொடுத்துள்ளது. ஆனால், போட்டியில் சூழ்நிலையை நன்கு அறிவது மிக மிக முக்கியம்’’ என்றார்.
    இந்தியாவின் பந்து வீச்சு பலம் வாய்ந்தது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், ஜடேஜா ஆகிய பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதில் பும்ரா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசி வருகிறார்.

    இந்த சீசனில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் பந்து வீச்சு பலம் வாய்ந்தது என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணியின் பந்து வீச்சு பலம் வாய்ந்ததாக இருக்கிறது. வெவ்வேறு வகையில் வீசக்கூடிய திறமை வாய்ந்த பவுலர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    வேகப்பந்தில் முகமது ஷமி, பும்ராவும், சுழற்பந்தில் குல்தீப் யாதவும், சாஹலும் நேர்த்தியாக வீசக்கூடியவர்கள்’’ என்றார்.
    பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் பீதி அடைய தேவையில்லை என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. முன்னணி பேட்ஸ்மேன்களின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்தியா 179 ரன்களில் சுருண்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. மேலும், உலகக்கோப்பையை வெல்லுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதால் பீதி அடைய தேவையில்லை என்று கிரிக்கெட் சகாப்தம் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் இந்திய அணியை நான் மதிப்பீடு செய்யமாட்டேன். இது ஒரு நீண்ட தொடர். இதுபோன்று சம்பவம் கிரிக்கெட்டில் நடைபெறலாம்.

    முக்கியமான போட்டிகள் இன்னும் தொடங்கவே இல்லை. இது வெறும் பயிற்சி ஆட்டம்தான். என்ன மாதிரியான ஆடுகளம் என்பதை புரிந்து கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்கள் பயன்படும். அதற்குள் பீதி அடைய தேவையில்லை.

    பெரும்பாலான அணிகள் பயிற்சி ஆட்டத்தில் ஆடும் லெவனை (11 வீரர்களை) முடிவு செய்ய விரும்பாது. பந்து வீச்சையும், பேட்டிங்கையும் மேம்படுத்திக் கொள்ள பயிற்சி ஆட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.



    ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி அளிக்கும வகையில் விளையாடும் என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன். ஏனென்றால் அந்த அணியின் சுழற்பந்து வீச்சு அபாரமாக உள்ளது. மிடில் ஓவரில் விக்கெட்டை கைப்பற்றக்கூடிய திறமை உள்ளது. அந்த அணி வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெண்டுல்கர் ஏற்கனவே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதுவோம் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே ஆஷஸ் தொடர் மிகப்பெரியதாக கருதப்படும்.

    அதன்பின் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டிதான். இரு அணி ரசிகர்களும் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள். உலகக்கோப்பை போன்ற தொடரைக் காட்டிலும் இந்த போட்டியிலும் வெற்றி பெற்றாலே போதுமானது என்று நினைக்கும் அளவுக்கு இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 6 போட்டிகளில் பாகிஸ்தான் இதுவரை வெற்றி பெற்றது கிடையாது. இந்த வரலாற்றை மாற்றி எழுதுவோம் என்று பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவரான இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள். உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றாலே போதும் என்று கூறும் அளவிற்கு ரசிகர்கள் தீவிரமாக உள்ளனர்.

    தொடர் தோல்விக்கு இந்த உலகக்கோப்பையில் முற்றுப்புள்ளி வைப்போம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இந்தியாவை வீழ்த்துவதை போல் மற்ற அணிகளையும் வீழ்த்தி சாத்தியக்கூறு பாகிஸ்தான் அணியிடம் உள்ளது.



    15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை தேர்வு செய்வது எளிது என ரசிகர்கள் நினைக்கிறார்கள். அது ஒன்றும் அப்படி அல்ல. ஏனென்றால், ஏகப்பட்ட நெருக்கடி உள்ளது. உதாரணமாக வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், முகமது அமிர், ஜுனைத் கான், உஸ்மான் ஷின்வாரி போன்ற வீரர்கள் பட்டியலில் இருந்தனர்.’’ என்றார்.

    உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் கடைசி நேரத்தில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டனர். இதனால் இன்சமாம் உல் ஹக் மீது கடும் விமர்சனம் எழும்பியது குறிப்பிடத்தக்கது.
    உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில் பின்வரிசை வீரர்கள் ரன் குவிப்பது அவசியம் என்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்க இன்னும் 4 தினங்களே உள்ளது. வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை14-ந்தேதி வரை உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நடக்கிறது.

    உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு 10 நாடுகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தன. 1983 மற்றும் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்துடன் இந்திய அணி நேற்று மோதிய பயிற்சி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

    முதலில் விளையாடிய இந்திய அணி 39.2 ஓவர்களில் 179 ரன்னில் சுருண்டது. 8-வது வீரராக களம் இறங்கிய ஜடேஜா 50 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி 2 சிக்சர்), ஹர்திக் பாண்டியா 30 ரன்னும் எடுத்தனர். போல்ட் 4 விக்கெட்டும், நீசம் 3 விக்கெட்டும், சவுத்தி, கிராண்ட்ஹோம், பெர்குசன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.



    பின்னர் விளையாடிய நியூசிலாந்து 37.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னாள் கேப்டன் டெய்லர் 71 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 67 ரன்னும் எடுத்தனர். பும்ரா, சாஹல், ஜடேஜா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    நாங்கள் திட்டமிட்டு ஆடவில்லை, எங்கள் முன்பு கடுமையான சவால்கள் இருந்தன. இங்கிலாந்தில் உள்ள சில இடங்களில் தட்ப வெப்பநிலை, ஆடுகள தன்மை ஆகியவற்றை எதிர்பார்க்கவில்லை. 50 ரன்னில் 4 விக்கெட் என்ற நிலை 180 ரன்னை இலக்காக நிர்ணயித்தது நல்ல முயற்சியாகும்.

    உலகக்கோப்பை போன்ற முக்கியமான போட்டிகளில் முன்னிலை பேட்ஸ்மேன்கள் ஆடாதபோது பின்கள வீரர்கள் ரன் குவிப்பது அவசியமானது. இதற்கு அவர்கள் இங்குள்ள மைதானத்தில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஜடேஜா நம்பிக்கை அளிக்கும் வகையில் பின்கள வரிசையில் ஆடினார். எங்களது பந்து வீச்சு நன்றாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    வெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, ‘‘வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியை பெற்று தந்தனர். இந்த வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்றார். இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை 28-ந்தேதி சந்திக்கிறது. அதே தினத்தன்று நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீசை சந்திக்கிறது.

    நேற்று நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 12 ரன்னில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான்- வங்காளதேசம், தென்ஆப்பிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
    விராட் கோலி ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறியுள்ளார்.
    லண்டன்:

    உலககோப்பை போட்டி தொடர் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறியதாவது:-

    உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மனிதரே அல்ல. அவர் ஒரு ரன் மிஷின். கோலி ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அவரது ஆட்ட திறன் 80 மற்றும் 90 ஆண்டுகளில் விளையாடிய வீரர்களை நினைவுப்படுத்துகிறது.

    என்னை பொறுத்தவரை சச்சின் தெண்டுல்கர் என்றுமே மிகச்சிறந்த வீரர். அவருடன் கோலியை ஒப்பிட முடியாது. ஆனால் கோலியிடம் சிறப்பான திறமைகள் பல உள்ளன. இளம் வீரர்களுக்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பார்.

    அவரது தலைமையில் உலககோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன்.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் வேகம் அனைத்து அணிகளையும் உற்றுநோக்க வைத்துள்ளது. தற்போது வரை மற்ற பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ள வழிகளை தேடி கொண்டிருக்கிறார்கள்.

    நான் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள நிலை இருந்தால் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு விட்டுவிடுவேன்.

    தற்போது பும்ரா சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கோலிக்கு எப்போதெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அப்போது என் பங்களிப்பை அளிப்பேன் என்று துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
    லண்டன்:

    உலககோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா அணி கருதப்படுகிறது.

    தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. இன்று நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விராட்கோலி சிறந்த அணியை பெற்று இருக்கிறார். சில ஆண்டுகளாகவே அவர் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறார். கோலிக்கு எனது உதவி எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது என் பங்களிப்பை அளிப்பேன்.

    எந்த வி‌ஷயமாக இருந்தாலும் அணிக்கு தான் முக்கியத்துவம் முதலில் இருக்கும். எனது பொறுப்புகளில் அதிக விழிப்புடன் இருக்கிறேன்.

    தற்போது என் மீது மட்டுமல்ல, மற்றவர்கள் மீதும் அக்கறை கொண்டுள்ளேன். நான் தவான், கோலி ஆகியோரின் பணியை முன்னெடுத்து செல்வது தான். இதை எங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நிலையாக கொண்டு செல்ல வேண்டும்.

    இது நேற்று நான் சிறப்பாக விளையாடினேன். இன்று நீ சிறப்பாக விளையாடு என்று சொல்வது போல் அல்ல. அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கூறியதாவது:-

    இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பது பற்றி கவலைப்படவில்லை. ஏனென்றால் ஒருநாள் போட்டிக்கு நாங்கள் பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களே பயன்படுத்துகிறோம்.

    இதுபோன்ற ஆடுகளமான பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நான் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறேன் என்பதை மறந்துவிடக்கூடாது.

    பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்கள் பற்றி நாம் பேசும்போது, ஒரு பந்துவீச்சாளராக நான் நெருக்கடியில் இருந்தால், அதேபோல தான் எதிரணி பந்துவீச்சாளர்களும் கூட இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலககோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் வருகிற ஜூன்.5-ந்தேதி மோதுகிறது.
    2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றபோது நான் ரசிகனாக கொண்டாடினேன். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. 2016-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். தற்போது முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக உள்ளார். உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

    25 வயதாகும் இவர், ‘‘2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றபோது நண்பர்களுடன் வெற்றியை கொண்டாடினேன். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து விளையாட இருக்கிறேன். எனது கனவு நனவாகியுள்ளது’’ என்று டுவிட் செய்துள்ளார்.
    ×