என் மலர்
நீங்கள் தேடியது "iOS"
ஆப்பிள் நிறுவனத்தின் 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புக்கள் சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் 2019 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 2019) ஜூன் 3 காலை 10.00 மணி (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது. கீநோட் உரையுடன் துவங்கும் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு கலிஃபோர்னியாவின் சான்ஜோசில் 0ள்ள மெக் எனர்ஜி கன்வெஷன் சென்டரில் நடைபெறுகிறது.
முந்தைய ஆண்டுகளை போன்று இந்த ஆண்டு கீநோட் உரையும் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் WWDC செயலிகளில் நேரலை செய்யப்படுகிறது. 2019 டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் 3 ஆம் தேதி துவங்கி ஜூன் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஆப்பிள் மென்பொருள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 13, மேக் ஓ.எஸ். 10.15 மற்றும் வாட்ச் ஓ.எஸ். 6 உள்ளிட்ட இயங்குதளங்கள் பற்றி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.ஓ.எஸ். 13 இயங்குதளம் யுகான் என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.

அந்த வகையில் ஐ.ஓ.எஸ். 13 இல் டார்க் மோட், யு.ஐ. ட்வீக்கள், புதிய அனிமேஷன்கள் மற்றும் அதிகாரப்பூர்வ கீபோர்டில் ஸ்வைப் டைப்பிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேக் ஓ.எஸ். 10.15 தளத்தில் ஐபேட் செயலிகளை இயக்கும் வசதியும் பாட்கேஸ்ட் போன்ற ஐபேட் செயலிகளுக்கு மேக் ஓ.எஸ். வெர்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இத்துடன் மேக் சாதனங்களுக்கென ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஆப்பிள் மியூசிக் செயலியை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இது ஐடியூன்ஸ் போன்றே செயல்படும் என தெரிகிறது. இத்துடன் மேம்பட்ட மேக் ப்ரோ சார்ந்த அறிவிப்பும் இந்நிகழ்வில் எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ச் ஓ.எஸ். 6 தளத்தில் ஆப் ஸ்டோர் வசதி சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் வாய்ஸ் மெமோஸ் செயலி, அனிமோஜிக்கள், மெமோஜி வசதி, ஆப்பிள் புக்ஸ் செயலி மற்றும் உடல்நலம் சார்ந்த புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுளின் ஜிமெயில் ஐ.ஓ.எஸ். தளங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வழங்கப்படுகிறது. #Gmail
கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையின் மொபைல் தளங்களில் சமீபத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். தளத்துக்கான ஜிமெயில் சேவையில் புதிய ஸ்வைப் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
அதன் படி ஐ.ஓ.எஸ். ஜிமெயில் செயலியில் ஆர்சிவ் (Archive), டிராஷ் (Trash), மார்க் ஆஸ் ரீட்/அன்ரீட் (Mark as read/unread), ஸ்னூஸ் (Snooze) மற்றும் மூவ் டு (Move to) என பல்வேறு அம்சங்களை ஸ்வைப் மூலம் இயக்கலாம். இந்த அம்சம் கொண்டு பல்வேறு அம்சங்களை மிக எளிமையாக ஸ்வைப் செய்தே இயக்க முடியும்.

பயனர்கள் ஸ்வைப் அம்சத்தை இயக்க ஐ.ஓ.எஸ். ஜிமெயில் செயலியின் செட்டிங்ஸ் -- ஸ்வைப் ஆக்ஷன்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். மேலும் இதே அம்சங்களை கொண்டு நோட்டிஃபிகேஷன்களையும் இயக்கலாம். உதாரணத்திற்கு மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்ய ஜிமெயில் ஐ.ஓ.எஸ். நோட்டிஃபிகேஷனை அழுத்திப் பிடித்து ஸ்னூஸ் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது எதுவரை மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்ய வேண்டும் என்பதை தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் புதிய அம்சங்களுடன் அட்டாச்மென்ட் க்விக் வியூ, அக்கவுண்ட்களிடையே ஸ்விட்ச் செய்தல் உள்ளிட்டவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தின் ஜிபோர்டு செயலியில் உடனடி மொழி மாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. #Gboard
கூகுள் நிறுவனம் தனது ஜிபோர்டு செயலியில் புதிய அப்டேட் வழங்கியிருக்கிறது. ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் உடனடியாக மொழிமாற்றம் செய்யும் வசதியை கீபோர்டு செயலியில் வழங்குகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே அம்சம் ஜிபோர்டின் ஆண்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அப்டேட் மூலம் ஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துவோர் கிட்டத்தட்ட 100 மொழிகளில் உடனடியாக மொழிமாற்றம் செய்து கொள்ளலாம். மேம்படுத்தப்பட்ட ஜிபோர்டு செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.
புதிய அப்டேட் மூலம் கூகுள் டிரான்ஸ்லேட் சேவையில் கிடைக்கும் அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து கொள்ளலாம். கூகுள் டிரான்ஸ்லேட் வலைதளத்தின் படி டிரான்ஸ்லேட் சேவை 103 மொழிகளை சப்போர்ட் செய்யும். உடனடி மொழிமாற்றம் தவிர, ஜிபோர்டு ஐ.ஓ.எஸ். செயலியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

ஐ.ஓ.எஸ்.இல் ஜிபோர்டு பயன்படுத்துவது எப்படி?
செயலியை திறந்து மொழிமாற்றம் செய்ய வேண்டிய ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இனி, ஜி ஐகானை க்ளிக் செய்து டிரான்ஸ்லேட் ஐகானை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் மொழிமாற்றம் செய்ய வேண்டிய மொழிகளை தேர்வு செய்ய வேண்டும்.
இனி நீங்கள் மொழிமாற்றம் செய்யவேண்டிய வார்த்தைகளை பதிவிட்டால், அதற்கான பிரீவியூ தெரியும். இனி நீங்கள் மொழிமாற்றத்தை பயன்படுத்திக் கொள்ள செலக்ட் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
புதிய மொழிமாற்ற வசதியுடன் ஜிஃப், எமோஜி சர்ச், ஸ்டிக்கர்கள், கிளைட் டைப்பிங், சர்ச் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஜிபோர்டு செயலியில் தாய், மெர், லௌ மற்றும் மங்கோலிய மொழிகளுக்கான மொழிமாற்ற வசதியும் சேர்க்கப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் 2019 டெவலப்பர் நிகழ்வுக்கான தேதியை அறிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான டெவலப்பர் நிகழ்வு ஜூன் முதல் வாரத்தில் நடைபெறுகிறது. #Apple #WWDC2019
ஆப்பிள் நிறுவனம் தனது 30-வது சர்வதேச டெவலப்பர் நிகழ்வுக்கான (WWDC 2019) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 2019 ஆண்டின் டெவலப்பர் நிகழ்வு ஜூன் 3 ஆம் தேதி துவங்கி ஜூன் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வு ஆப்பிள் நிறுவனத்தின் மெக்கன்ரி கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. முந்தைய ஆண்டுகளிலும் ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு இதே இடத்தில் நடத்தப்பட்டது.
சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஆப்பிள் இயங்குதளங்களான ஐ.ஓ.எஸ். 13, மேக் ஓ.எஸ். 10.15, வாட்ச் ஓ.எஸ். 6 மற்றும் டி.வி. ஓ.எஸ். 13 உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்து அவற்றுக்கான அப்டேட்களை வழங்கும். புதிய ஐ.ஓ.எஸ். 13 இல் ஆப்பிள் டார்க் மோட் வசதியை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் புதிய ஐபேட் இன்டர்ஃபேஸ் அப்டேட்கள், புதிய ஹோம் ஸ்கிரீன், ஃபோட்டோஸ், ஃபைல்ஸ், மெயில் ஆப்ஸ், புதிய எமோஜி உள்ளிட்டவையும் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதுகுறித்த புதிய விவரங்கள் வரும் மாதங்களில் வெளியாகலாம்.
ஆப்பிள் 2019 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் கீநோட் மேடையில் இருந்து புதிய ஆப்பிள் தகவல்கள், இத்தனை ஆண்டுகளில் மெஷின் லெர்னிங், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் பல்வேறு பிரிவுகளில் புதிய அனுபவங்களை வழங்க தொட்ந்து பணியாற்றி வரும் டெவலப்பர்களை கொண்டாட இருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நிகழ்வில் தொழில்நுட்ப வகுப்புகள், ஹேண்ட்ஸ்-ஆன் லேப்கள் மற்றும் சிறப்பு பேச்சாளர்களின் கருத்தரங்கு உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. 2019 ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வுக்கான (WWDC 2019) டிக்கெட்கள் மார்ச் 20 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. நுழைவு சீட்டு கட்டணம் முந்தைய ஆண்டுகளை போன்றே 1599 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,10,777) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலியில் விரைவில் அட்வான்ஸ் சர்ச் வசதி வழங்கப்படுகிறது. #WhatsApp
வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுக்க சுமார் 130 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். செயலியின் ஒட்டுமொத்த பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன.
வாட்ஸ்அப் க்ரூப் இன்விடேஷன், டார்க் மோட், சாட்களுக்கு கைரேகை சென்சார் லாக், தொடர்ச்சியாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை சரிபார்க்க புதிய வசதி உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன.
இவை தவிர, வாட்ஸ்அப் விரைவில் அட்வான்ஸ்டு சர்ச் மோட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப் சர்ச் ஆப்ஷனை தினந்தோரும் பயன்படுத்துவோருக்கு மிக எளிமையான ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. அட்வான்ஸ் சர்ச் அம்சம் மூலம் ஒருவர் அதிகப்படியான குறுந்தகவல்களை தேட முடியும் என கூறப்படுகிறது.

புகைப்படம் நன்றி: WABetaInfo
புதிய ஆப்ஷனிற்கென வாட்ஸ்அப் செயலியில் மீடியா எனும் புதிய வசதி சேர்க்கப்படும் என்றும் இதனை கொண்டு பயனர்கள் புகைப்படங்கள், ஜிஃப்கள், வீடியோக்கள், டாக்குமென்ட், லிண்க் மற்றும் ஆடியோ உள்ளிட்டவற்றை தேட முடியும். உதாரணத்திறஅகு வாட்ஸ்அப் மீடியா ஆப்ஷனில் புகைப்படங்களை தேர்வு செய்யும் போது, புகைப்படங்கள் மட்டும் வரிசைப்படுத்தப்படும்.
இதுதவிர மீடியா அபனஷன் வாட்ஸ்அப் ஸ்டோரேஜில் எத்தனை மீடியா ஃபைல்கள் சேமிக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களும் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதனுடன் சர்ச் ஹிஸ்ட்ரியை பார்க்கும் வசதியும், தேவைப்படாத சமயங்களில் இதனை நீக்கும் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் சர்ச் ஆப்ஷனில் தேடும் போது பிரீவியூ வழங்கப்படும் என்பதால், பயனர் தேடும் தரவுகளை மிகச்சரியாக தேர்வு செய்து பெற முடியும். புதிய அட்வான்ஸ் சர்ச் ஆப்ஷன் தொடர்ந்து உருவாக்கும் பணிகளில் இருப்பதாகவும், விரைவில் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
ஃபேஸ்புக் நிறுவன சேவையில் பேக்கிரவுண்டு லொகேஷன் டிராக்கிங்கை பிளாக் செய்வதற்கென புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Facebook #SocialMedia
ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டு முழுக்க பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித்தவித்து வருகிறது. சர்ச்சைகளில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தவிக்கும் ஃபேஸ்புக் தற்சமயம் புதிய செட்டிங்களை தனது சேவையில் இணைத்திருக்கிறது.
முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய செட்டிங்களை கொண்டு பயனர்கள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை இயக்க முடியும். செட்டிங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள், பயனர் செயலியை பயன்படுத்தாத சமயத்தில் இரண்டடுக்கு முறையில் உங்களது இருப்பிட விவரங்களை இயக்குவது பற்றி முடிவு செய்யும்.

முதலாவதாக பயனர் தனது இருப்பிட விவரங்களை இயக்க ஃபேஸ்புக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதா என்றும் இரண்டாவதாக பின்னணியில் தகவல்களை சேகரிக்கலாமா என ஃபேஸ்புக் பயனரிடம் கேட்கும். சேவையை பயன்படுத்தாத போது ஏன் பின்னணி தகவல்களை சேகரிக்க வேண்டும் என்கிறீர்களா?
இவ்வாறு தகவல்களை சேகரிப்பதன் மூலம் அருகாமையில் இருக்கும் நண்பர்கள், செய்ய வேண்டியதற்கான பரிந்துரைகள் மற்றும் குறிப்பாக பனர்களின் அருகாமையில் இருப்பவர் பற்றி பரிந்துரைக்க முடியும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு, ஆப்பிள் பின்னணியில் தகவல்களை சேகரிக்கும் வசதியை வழங்கியிருக்கிறது. இதனால் ஃபேஸ்புக் இதற்கென தனியே அப்டேட் வழங்கி வேண்டிய அவசியம் எழவில்லை. எனினும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு தகவல் அனுப்பி அவர்களின் லொகேஷன் செட்டிங்களை மாற்ற வேண்டுமா என கேட்கப்போவதாக ஃபேஸ்புக் தெரிவித்திருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2019 டெவலப்பர்கள் நிகழ்வுக்கான தேதி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #Apple #WWDC2019
ஆப்பிள் நிறுவனம் 2019 ஆண்டின் முதல் அறிவிப்பை உறுதி செய்திருக்கிறது. அந்த வகையில் ஆப்பிள் மார்ச் 25 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வு ஆப்பிள் பார்க் வளாகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஆப்பிள் தனது புதிய செய்தி சந்தா திட்டத்தை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் ஆப்பிளின் வீடியோ ஸ்டிரீமிங் சேவையும் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் 2019 ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனக்கென பிரத்யேக வீடியோ ஸ்டிரீமிங் சேவையை துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் தனது டெவலப்பர்கள் நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஆப்பிள் சார்பில் WWDC பேஷ் நிகழ்வு டிஸ்கவரி மீடோவில் நடத்தப்பட்டது. இதில் 2019 ஆப்பிள் நிகழ்வுகளுக்கான காலெண்டரில் ஜூன் 6 ஆம் தேதி டெவலப்பர்கள் நிகழ்வு சான் ஜோஸ் நகரில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

2019 டெவலப்பர்கள் நிகழ்வில் 7000 பேர் வரை கலந்து கொள்வர் என்றும் இந்த நிகழ்வு ஜூன் 3 ஆம் தேதி துவங்கி ஜூன் 7 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் கீநோட் நிகழ்வு ஜூன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளை போன்றே இந்த ஆண்டும் டெவலப்பர் நிகழ்வு கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் அமைந்துள்ள மெக்கன்ரி கன்வெஷன் மையத்தில் நடைபெறும் என தெரிகிறது.
இந்த ஆண்டு டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ்., ஓ.எஸ். எக்ஸ். உள்ளிட்டவற்றின் எதிர்கால பதிப்புகளான ஐ.ஓ.எஸ். 13, மேக் ஓ.எஸ். 10.15, வாட்ச் ஓ.எஸ். 6, டி.வி. ஓ.எஸ். 13 உள்ளிட்டவற்றுக்கான அப்டேட்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஐ.ஓ.எஸ். 13 பதிப்பில் டார்க் மோட், புதிய ஐபேட் இன்டர்ஃபேஸ், புதிய ஹோம் ஸ்கிரீன், போட்டோஸ், ஃபைல்ஸ், மெயில் ஆப் உள்ளிட்டவற்றுக்கான அப்டேட்கள் மற்றும் புதிய எமோஜி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் வரும் மாதங்களில் தெரியவரும்.
வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். பதிப்பில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் பாதுகாப்பு வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #WhatsApp #iOS
வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். பதிப்பின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் ஆப்பிளின் டச் ஐ.டி. மற்றும் ஃபேஸ் ஐ.டி. வசதி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் செயலியை பயோமெட்ரிக் முறையில் லாக் செய்து கொள்ளும்.
புதிய பயோமெட்ரிக் பாதுகாப்பை செயல்படுத்த வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். ஐ.ஓ.எஸ். தளத்தில் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் -- பிரைவசி உள்ளிட்ட ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.
எனினும், வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன் மற்றும் அவற்றுக்கான க்விக் ரிப்ளை ஆப்ஷன்களை தொடர்ந்து பார்க்க முடியும். வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தின் நோட்டிபிகேஷனில் க்விக் ரிப்ளை வசதி வழங்கப்பட்டிருந்தாலும், செயலியை முழுமையாக பயன்படுத்த பயோமெட்ரிக் முறையை கடக்க வேண்டியது அவசியமாகும்.

புதிய பாதுகாப்பு வசதி பற்றி ஆப்ஸ்டோரில் எழுதப்பட்டிருப்பதாவது: வாட்ஸ்அப் செயலியை அன்லாக் செய்ய ஃபேஸ் ஐ.டி. அல்லது டச் ஐ.டி. உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். இதற்கு செட்டிங்ஸ் - - அக்கவுண்ட் -- பிரைவசி உள்ளிட்ட ஆப்ஷன்களுக்கு சென்று ஸ்கிரீன் லாக் வசதியை செயல்படுத்த வேண்டும்.
முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களை 2020 ஆம் ஆண்டிற்குள் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வசதியை கொண்டு மூன்று செயலிகளுக்கு இடையே பயனர்கள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் இணைய பதிப்பின் இன்டர்ஃபேஸ் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Twitter #socialmedia
ட்விட்டர் வெப் பயனர்களுக்கு புதிய இன்டர்ஃபேஸ் வழங்கும் பணிகள் நடைபெறுகிறது. ட்விட்டரில் புதிய வடிவமைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
புதிய வடிவமைப்பை விரும்பும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளவோ அல்லது முந்தைய வடிவமைப்பிலேயே தொடரலாம். புதிய இன்டர்ஃபேசை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ‘opt-in’ ஆப்ஷனை க்ளிக் செய்யலாம். புதிய வடிவமைப்பில் இரண்டு அல்லது மூன்றடுக்குகளை கொண்டிருக்கிறது.
இத்துடன் எமோஜி பட்"ன், க்விக் கீபோர்டு ஷார்ட்கட்கள், மேம்படுத்தப்பட்ட டிரெண்ட்கள், அட்வான்ஸ்டு சர்ச் மற்றும் பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய இன்டர்ஃபேஸ் பயன்படுத்த விரும்பாத பட்சத்தில் வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பழைய இன்டர்ஃபேசிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
A new https://t.co/fHiPXozBdO is coming.
— Twitter (@Twitter) January 22, 2019
Some of you got an opt-in to try it now. Check out the emoji button, quick keyboard shortcuts, upgraded trends, advanced search, and more. Let us know your thoughts! pic.twitter.com/G8gWvdHnzB
ட்விட்டரில் டார்க் மோட் சீராக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி, விரைவில் மேம்படுத்தப்பட்ட டார்க் மோட் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். சில வாடிக்கையாளர்கள் டார்க் மோட் கருப்பு நிறத்திற்கு பதிலாக டார்க் புளு நிறத்தில் தோன்றுவதாக குற்றம்சாட்டியிருந்தனர்.
சமீபத்தில் ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் அவரவர் விரும்பும் டைம்லைனை தேர்வு செய்து கொள்ளும் வசதியை சேர்த்தது. ட்விட்டர் இந்த வசசதி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தது. முன்னதாக இந்த வசதி ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், விரைவில் வலைதளத்தில் வழங்கப்பட இருக்கிறது.
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தின் பீட்டா பதிப்பில் புதிய வசதிகள் சோதனை செய்யப்படுகிறது. #Whatsapp #Apps
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பீட்டா பயனர்களுக்கு புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய 2.19.10.21 அப்டேட் மூலம் பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகள் கிடைக்கின்றன.
அந்த வகையில் புதிய அம்சங்கள் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம். இந்த அப்டேட் மூலம் செயலியில் சில முக்கிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, செயலியின் ஒட்டுமொத்த அனுபவமும் மேம்படுத்தப்படலாம் என தெரிகிறது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஜிஃப்களில் ஸ்டிக்கர்களை சேர்க்க முடியும். இதில் பயனர்கள் நேரம், இருப்பிடம் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளில் கிடைக்கும் தனிப்பட்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும். இந்த அப்டேட்டில் ஸ்டிக்கர்களை தேர்வு செய்ய புதிய வடிவமைப்பு கொண்ட பகுதி வழங்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே இந்த அம்சம் தெரிகிறது. இதுதவிர குரூப்களில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. தற்சமயம் இந்த அம்சம் கொண்டு பயனர் தேர்வு செய்யும் குறுந்தகவல்களுக்கு வாட்ஸ்அப் தானாக புதிய சாட் ஸ்கிரீனை திறக்கும். இதில் பயனர்கள் தனிப்பட்ட முறையில் பதில் அளிக்க முடியும்.
இத்துடன் ஸ்டேட்டஸ்களை சரிபார்ப்பதற்கென டெவலப்பர்கள் புதிய வழிமுறையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் வழக்கமாக பயனர்கள் 3D ஃபோர்ஸ் முறையில் வாட்ஸ்அப் கான்டாக்ட்கள் அனுப்பும் குறுந்தகவல்களை சரிபார்ப்பதை போன்று இயங்கும். எனினும், தற்சமயம் இந்த அம்சம் 3D டச் தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். #Whatsapp #Apps
அந்த வகையில் புதிய அம்சங்கள் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம். இந்த அப்டேட் மூலம் செயலியில் சில முக்கிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, செயலியின் ஒட்டுமொத்த அனுபவமும் மேம்படுத்தப்படலாம் என தெரிகிறது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஜிஃப்களில் ஸ்டிக்கர்களை சேர்க்க முடியும். இதில் பயனர்கள் நேரம், இருப்பிடம் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளில் கிடைக்கும் தனிப்பட்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும். இந்த அப்டேட்டில் ஸ்டிக்கர்களை தேர்வு செய்ய புதிய வடிவமைப்பு கொண்ட பகுதி வழங்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: WABetaInfo
இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே இந்த அம்சம் தெரிகிறது. இதுதவிர குரூப்களில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. தற்சமயம் இந்த அம்சம் கொண்டு பயனர் தேர்வு செய்யும் குறுந்தகவல்களுக்கு வாட்ஸ்அப் தானாக புதிய சாட் ஸ்கிரீனை திறக்கும். இதில் பயனர்கள் தனிப்பட்ட முறையில் பதில் அளிக்க முடியும்.
இத்துடன் ஸ்டேட்டஸ்களை சரிபார்ப்பதற்கென டெவலப்பர்கள் புதிய வழிமுறையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் வழக்கமாக பயனர்கள் 3D ஃபோர்ஸ் முறையில் வாட்ஸ்அப் கான்டாக்ட்கள் அனுப்பும் குறுந்தகவல்களை சரிபார்ப்பதை போன்று இயங்கும். எனினும், தற்சமயம் இந்த அம்சம் 3D டச் தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். #Whatsapp #Apps
ஐபோன்களுக்கான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் க்ரூப் கால்களை மிக எளிமையாக மேற்கொள்ளும் புது வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. #WhatsApp
ஐபோன் மாடல்களுக்கான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் க்ரூப் கால்களை எளிமையாக மேற்கொள்ள புது அப்டேட் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஐ.ஓ.எஸ். பீட்டா செயலியின் அங்கமாக புது அம்சம் வழங்கப்படுகிறது. இத்துடன் க்ரூப் கால்களை நேரடியாக நியூ கால் ஸ்கிரீனில் (New Call screen) இருந்து மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
புது அப்டேட் வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக பிளே செய்யும் வசதியும் வழங்குகிறது. இந்த வசதிகளை பயன்படுத்த ஐபோனில் ஐ.ஓ.எஸ். 8.0 அல்லது அதற்கும் அதிக பதிப்புகளை பயன்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் வசதி சாட் விண்டோவை திறக்கும் போது காணப்படுகிறது.
புது மாற்றம் மூலம் க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால்களை மிக எளிமையாக மேற்கொள்ள முடியும். அதற்குரிய ஆப்ஷனை கிளிக் செய்ததும், நீங்கள் கால் செய்ய வேண்டியவர்களை வாட்ஸ்அப் மூலம் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் மேற்கொள்ள வேண்டுமா என்ற ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் விரும்பும் ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் கால் செய்யும் போது, நீங்கள் அட்ரெஸ் புக்கில் சேமித்து வைத்திருக்கும் எண்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். வாட்ஸ்அப் க்ரூப் கால் செய்ய அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நீங்கள் துவங்கும் க்ரூப் காலில் மூன்று புது நபர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும்.
புது க்ரூப் காலிங் பட்டன் முன்னதாக ஐ.ஓ.எஸ். பீட்டா 2.18.110.17 வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டது. இந்த பீட்டா அப்டேட் ஐபோன் பயனர்களுக்கு டெஸ்ட்ஃபிளைட் (TestFlight) மூலம் வழங்கப்பட்டது. டெஸ்ட்ஃபிளைட் என்பது, செயலிகளை ஓவர்-தி-ஏர் மூலம் சோதனை செய்யும் ஆப்பிள் நிறுவனத்தின் சேவையாகும்.

புதிய க்ரூப் காலிங் பட்டன் தவிர ஐ.ஓ.எஸ். வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் புதிய க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஷார்ட்க்ட் நியூ கால் ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கிறது. ஷார்ட்கட் பட்டனை கிளிக் செய்து நேரடியாக க்ரூப் கால் துவங்கி, அதிகபட்சம் மூன்று நபர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.
ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள க்ரூப் காலிங் அம்சங்கள் ஆன்ட்ராய்டு தளத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி கடந்த மாத ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் வழங்கப்பட்டு இருந்தது. எனினும், ஆன்ட்ராய்டு சாதனங்களுக்கு புது அம்சத்திற்கான பொதுப்படையான அப்டேட் இதுவரை வழங்கப்படவில்லை. #WhatsApp