search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apple Watch"

    • வர்த்தக கூட்டமைப்பின் தடை உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது.
    • மேல்முறையீடு செய்து அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

    ஆப்பிள் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் மாடல்களின் இறக்குமதிக்கு அமெரிக்காவில் உள்ள சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தடை விதித்தது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் மாடல்களை அமெரிக்க சந்தையில் விற்பனை செய்ய முடியாத சூழல் உருவானது. இது தொடர்பான உத்தரவில் இறுதி முடிவை அமெரிக்க அதிபர் தலைமையிலான அரசு எடுக்க வேண்டியிருந்தது.

    அந்த வகையில், வர்த்தக கூட்டமைப்பின் தடை உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக தடை உத்தரவை எதிர்த்து ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்து அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

     


    மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோ மற்றும் ஆப்பிள் இடையே கடந்த 2020 முதல் காப்புரிமை விவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. மசிமோ சார்பில் பதிவு செய்யப்பட்டிருந்த பிலட் ஆக்சிஜன் சென்சிங் அம்சம் தொடர்பான காப்புரிமையை ஆப்பிள் மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த விவகாரத்தில் ஆப்பிள் காப்புரிமையை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 போன்ற மாடல்களின் விற்பனைக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு காரணமாக இரு வாட்ச் மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் வாங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

    • புதிய மாடலில் பிளாக் செராமிக் பேக் பேனல் வழங்கப்படுகிறது.
    • ஆக்ஷன் பட்டன் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலின் புது வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் ரிடிசைன் செய்யப்பட்ட மாடல் ரெண்டர்கள் எஃப்.சி.சி. தளத்தில் வெளியானதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

    புதிய தகவல்களின் படி புதிய ஆப்பிள் வாட்ச் மாடல் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலில் இருப்பதை போன்ற ரக்கட் தோற்றம், வழக்கமான டிஜிட்டல் கிரவுன், ஆக்ஷன் பட்டன், ஸ்பீக்கர் கிரில், மைக்ரோபோன் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் பழைய மாடல்களில் இருப்பதை போன்ற பிளாக் செராமிக் பேக் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இதில் உள்ள ஆக்ஷன் பட்டன் ரிடிசைன் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. உண்மையில் இந்த வாட்ச் விற்பனைக்கு வரும் பட்சத்தில், இந்த மாடல் அல்ட்ரா பிராண்டிங் இன்றி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த ஆப்பிள் வாட்ச் விலை தற்போதைய மாடல்களை விட குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    செப்டம்பர் 2022 ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலையும், அதன்பிறகு கடந்த செப்டம்பரில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலையும் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என இரு மாடல்களிலும் ஏரோஸ்பேஸ் ரக அலுமினிம்-தர டைட்டானியம் கேஸ், மெட்டல் ஆக்ஷன் பட்டன், சஃபயர் க்ரிஸ்டல் பிளாக் பேனல் வழங்கப்பட்டு உள்ளது.

    • கடலில் காணாமல் போன ஆப்பிள் வாட்ச் மாடல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.
    • கடல்நீரில் மூழ்கி இருந்த ஆப்பிள் வாட்ச் மீட்கப்படும் போதும் சீராக இயங்கும் நிலையில் இருந்தது.

    ஆப்பிள் வாட்ச் மாடல்கள் எப்படி பயனர் உயிரை காப்பாற்றுகின்றன என்பதை கூறும் சம்பவங்கள் பலமுறை அரங்கேறியுள்ளன. தற்போது கடலில் காணாமல் போன ஆப்பிள் வாட்ச் மாடல் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வெற்றிகரமாக மீட்கப்பட்ட நிலையில் ஆப்பிள் வாட்ச் முன்பு இருந்ததை போன்றே சீராக இயங்கியது.

    பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனரியோவில் பாய்மர கப்பலில் பயணம் செய்த ஜெஃபர்சன் ரோச்சா, கடலில் இறங்கி நீந்த திட்டமிட்டார். கடலில் மகிழ்ச்சியாக நீந்திய ரோச்சா, தனது ஆப்பிள் வாட்ச்-ஐ தவறுதலாக கடலில் தொலைத்துவிட்டார். அவர் கடலில் தொலைத்த ஆப்பிள் வாட்ச் மாடல் ஃபைண்ட் மை (Find Me) எனும் அம்சம் கொண்டிருந்தது. எனினும், அது எந்த ஆப்பிள் வாட்ச் மாடல் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

     

    கடலில் ஆப்பிள் வாட்ச் தவறவிட்டதை அறிந்து கொண்ட ரோச்சா உடனடியாக படகில் ஏறி ஆப்பிள் வாட்ச் ஆஃப் ஆவதற்குள் அதனை 'ஃபைண்ட் மை' அம்சம் மூலம் தேட துவங்கினார். ஃபைண்ட் மை ஆப் மூலம் தேட துவங்கியதும், ஆப்பிள் வாட்ச் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. பின் காணாமல் போன மறுநாள் அவருக்கு நோட்டிஃபிகேஷன் அலர்ட் கிடைத்துள்ளது.

    அதில் ஆப்பிள் வாட்ச் ஆக்டிவேட் ஆகி இருப்பதாக தகவல் இருந்தது. உடனே லாஸ்ட் மோட்-ஐ ஆக்டிவேட் செய்த ரோச்சா, தனது தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டார். தேடல் முயற்சிக்கு பலன் அளிக்காத நிலையில், வேறு யாரேனும் அதனை கண்டெடுத்தால் தன்னை தொடர்பு கொள்வர் என்றும் ரோச்சா நம்பினார்.

     

    இவரது நம்பிக்கை வீண் போகவில்லை. இன்ஸ்டாகிராமில் இருந்து ரோச்சாவை 16 வயது சிறுமி ஒருவர் தொடர்பு கொண்டு ஆப்பிள் வாட்ச் தன்னிடம் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். ஆப்பிள் வாட்ச்-ஐ 50 வயது ஓட்டுனர் கண்டெடுத்தார் என்பதை ரோச்சா, அந்த சிறுமியின் மூலம் அறிந்து கொண்டார்.

    இவரது வாட்ச்-ஐ கண்டெடுத்த ஓட்டுனர் பெனோனி அண்டோனியோ ஃபிஹோ மக்கள் தொலைக்கும் பொருட்களை கண்டெடுத்தால், அதனை அவர்களிடம் சேர்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் மீட்டெடுத்த ரோச்சாவின் ஆப்பிள் வாட்ச் அதன் முந்தைய நிலையிலேயே சீராக இயங்கியது.

    ஆப்பிள் நிறுவனம் சீரிஸ் 2-வை தொடர்ந்து அறிமுகம் செய்த அனைத்து மாடல்களிலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்கி வருகிறது. இது ஆப்பிள் வாட்ச் அதிகபட்சம் 50 மீட்டர்கள் வரையிலான நீரில் மூழ்கினாலும் சீராக இயங்கும் வசதியை கொண்டுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் அதிகபட்சம் 100 மீட்டர்கள் ஆழத்தில் விழுந்தலும் சீராக இயங்கும்.

    காணாமல் போன ஆப்பிள் வாட்ச்-ஐ மீட்பது எப்படி?

    - ஐபோனில் ஆப்பிள் வாட்ச் செயலியை திறக்கவும்.

    - ஆல் வாட்சஸ் ஆப்ஷனில் மை வாட்ச் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    - வாட்ச் அருகில் உள்ள இன்ஃபோ பட்டனை கிளிக் செய்து, ஃபைண்ட் மை ஆப்பிள் வாட்ச் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    - ஐபோனில் ஃபைண்ட் மை ஆப்-இல் வாட்ச் லொகேஷனை பார்க்க அதற்கான ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

    - ஆப்பிள் வாட்ச் அருகாமையில் இருப்பதை காண்பித்தால், உடனே பிளே சவுண்ட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    Photo Courtesy: Arquivo Pessoal

    • ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் மாடல்களில் பயன்படுத்த இருக்கும் புதிய வகை பேண்ட் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • தற்போதைய வாட்ச்களில் பேண்ட் நிறத்தை மாற்ற, அதனை கழற்றிவிட்டு வேறு நிறம் கொண்ட பேண்ட்-ஐ இணைக்க வேண்டும்.

    ஆப்பிள் நிறுவனம் விசேஷ எலெக்ட்ரோக்ரோமிக் அம்சம் கொண்ட ஆப்பிள் வாட்ச் பேண்ட்-க்கு ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை பெற்று இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் பேண்ட் நிறத்தை மூன்று வழிகளில் அட்ஜஸ்ட் செய்து அதன் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம். பேண்ட் நிறத்தை மூன்று விதங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்பதோடு, இதற்கு பயனர்கள் பேண்ட்-ஐ கழற்றி மாற்ற வேண்டிய அவசியத்தை நீக்கி இருக்கிறது.

    பயனர்கள் தங்களின் வாட்ச் பேண்ட்களை அடிக்கடி கஸ்டமைஸ் செய்து அதன் ஸ்டைல் மற்றும் நிறத்தை வித்தியாசப்படுத்த நினைப்பர், புதிய தொழில்நுட்பம் இதற்கான தீர்வை வழங்கி விட்டது. வழக்கமான வாட்ச்களில் பேண்ட் நிறத்தை மாற்ற, ஒவ்வொரு முறையும் வேறு நிறம் கொண்ட பேண்ட்களை பயன்படுத்த வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

     

    புதிய தொழில்நுட்பம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கலர் கண்ட்ரோல் மூலம் பல்வேறு நிறங்கள் மற்றும் நிற காம்பினேஷன்களை ஒற்றை பேண்ட்-இல் வெளிப்படுத்துகிறது. பயனர் அல்லது கண்ட்ரோல் சிஸ்டம் பேண்ட்-இல் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறங்களை கண்ட்ரோல் செய்து மாற்றுகிறது. இவ்வாறு செய்யும் போது பல்வேறு பேண்ட்களை மாற்றாமலேயே பேண்ட்-இல் பல நிறங்கள் அல்லத நிற காம்பினேஷன்களை மாற்ற முடியும்.

    அட்ஜஸ்ட் செய்யக்கூடிய நிறங்களை கொண்டு பயனர்கள் தகவல் பரிமாற்றத்தையும் செய்ய முடியும் என காப்புரிமை விவரங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கலர் அட்ஜஸ்ட் செய்யும் கூறுகளை ஒருங்கிணைக்கவோ அல்லது தனித்தனியாக கண்ட்ரோல் செய்து குறிப்பிடத்தக்க ஐகான், வடிவம் அல்லது எழுத்துக்களை வெளிப்படுத்த முடியும். இந்த வாட்ச் பேண்ட் ஆடை மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

    விசேஷமாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஆடையில் நூல் வடிவில் மென்கம்பிகள் புகுத்தப்பட்டு உள்ளன. சில அல்லது அனைத்து மென்கம்பிகளில் எலெக்ட்ரோக்ரோமிக் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. எலெக்ட்ரோ-க்ரோமிசம் என்பது எலெக்ட்ரிக் ஃபீல்டு அல்லது கரண்ட் பாய்ச்சும் போது ஆடையில் ஏற்படும் நிற மாற்றம் ஆகும். ஐயன் இன்சர்ஷன் பொருட்கள் கண்டக்டர்களில் புகுத்தப்படுகிறது. இவற்றில் ஐயன்களை வேகமாகவும், தலைகீழாக செருகி எலெக்ட்ரோக்ரோமிக் பாகங்களாக பயன்படுத்த முடியும்.

    வாட்ச் பேண்ட் கண்டக்டரில் ஆப்ஷனாக ஷேப் மெமரி அலாய் வழங்கப்படுகிறது. இது கண்டக்டரில் வோல்டேஜ் செலுத்தும் போது வடிவத்தை மாற்றும். நிற மாற்றத்திற்கு தேவையான அதே அளவு வோல்டேஜ்-ஐ கண்டக்டரிலும் செலுத்தலாம். இவ்வாறு வடிவம் மாறுவது பயனருக்கு ஹேப்டிக் ஃபீட்பேக் வழங்குகிறது. பயன்பாட்டுக்கு வரும் போது இந்த தொழில்நுட்பம் வழக்கமான வாட்ச் பேண்ட்களுக்கு வித்தியாசமான, புதுமை மிக்க மாற்றாக அமையும்.

    Photo Courtesy: Patently Apple

    • ஆப்பிள் நிறுவத்தின் ஆப்பிள் வாட்ச் மாடல் சர்வதேச ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அதிகம் விற்பனையாகி வருகிறது.
    • ஆப்பிள் வாட்ச் மாடல்களில் உள்ள பாதுகாப்பு அம்சம் பற்றிய உண்மை சம்பவங்கள் உலகம் முழுக்க நடைபெற்று வருகின்றன.

    ஆப்பிள் வாட்ச் மாடல்கள் அதனை அணிந்திருப்போர் உயிரை காப்பாற்றியதாக உலகம் முழுக்க ஏராளமான சம்பவங்கள் நடைபெறுவதாக வழக்கமான ஒன்று தான். அந்த வரிசையில், இந்தியாவில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்த ஒருத்தர் 150 அடி ஆழமான பகுதியில் தவறி விழுந்திருக்கிறார். இவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் 7 மூலம் அவரது குடும்பத்தார் அவரை மீட்டுள்ளனர்.

    இந்திய இளைஞர் ஸ்மித் மேத்தா என்பவர் ஆழமான பகுதியில் தவறி விழுந்திருக்கிறார். இவரை தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான், அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் அவரை மீட்க உதவி இருக்கிறது. மிகவும் கோரமான ஆபத்தில் சிக்கி, ஆப்பிள் வாட்ச் மூலம் காப்பாற்றப்பட்ட சம்பவத்தை அந்த இளைஞர் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்து இருந்தார்.

    மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்மித் மேத்தா தான் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். மழை பெய்து கொண்டிருந்த போது அவர் தனது நண்பர்களுடன் மலை ஏற்றத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இவருடன் மூன்று நண்பர்கள் சென்று இருந்தனர். மலை ஏற்றம் முடிந்து திரும்பி கொண்டிருந்த போது பள்ளத்தாக்கில் தவறி விழுந்து விட்டார்.

    எனினும், கீழே விழும் போது மரம் மற்றும் பாறை மீது விழுந்ததில் எலும்பு முறிவுகளுடன் உயிர் பிழைத்து இருக்கிறார். கடுமையான வலியில் தவித்துக் கொண்டிருந்த இளைஞரை அவரது நண்பர்கள் அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியுடன் காப்பாற்றினர். பின் காயமுற்ற இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்தமைக்காக டிம் குக், ஸ்மித் மேத்தாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    • ஆப்பிள் நிறுவனம் அதன் வாட்ச் 8 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்களை வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
    • அந்த ஸ்மார்ட்வாட்ச் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் அதன் வாட்ச் 8 சீரிஸ் ஸ்மார்ட்வாட்சை அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச், 3 விதமான வேரியண்ட்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாக இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    அண்மையில் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்காணிக்கும் டெம்பரேச்சர் சென்சாரும் இடம்பெற்று இருக்கும் என கூறப்பட்டது. இந்த அம்சம் மூலம் உடல் வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி ஒருவேளை பயனர்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருந்து அவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மருத்துவரை அணுகச் சொல்லி அலர்ட் செய்யும் அம்சமும் இந்த ஸ்மார்ட்வாட்சில் இடம்பெற்று உள்ளதாக கூறப்பட்டு இருந்தது.


    இந்நிலையில், தற்போது இதன் டிஸ்ப்ளே பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்ட ஸ்மார்ட்வாட்ச்களை விட இந்த ஸ்மார்வாட்சில் தான் பெரிய அளவு டிஸ்ப்ளே இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாட்ச் 7 சீரிஸை விட வாட்ச் 8 சீரிஸில் உள்ள டிஸ்ப்ளே 7 சதவீதம் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆப்பிள் கடிகாரத்தை பயன்படுத்துபவர்கள் அதன் ஓ.எஸ்.சை அந்த நிறுவனத்தின் சமீபத்தைய பாதுகாப்பு பதிப்புகளுக்கு புதுப்பிக்க வேண்டும்.
    • இதன்மூலம் தகவல் திருட்டை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவின் சைபர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று ஆப்பிள் கை கடிகாரத்தை கையில் கட்டினால் தகவல்கள் திருடப்படும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளது.

    அதேநேரத்தில் இந்த கடிகாரத்தை பயன்படுத்துபவர்கள் அதன் ஓ.எஸ்.சை அந்த நிறுவனத்தின் சமீபத்தைய பாதுகாப்பு பதிப்புகளுக்கு புதுப்பிக்க வேண்டும்.

    இதன்மூலம் தகவல் திருட்டை தடுக்க முடியும் என்று கூறி உள்ளது.

    ஆப்பிள் வாட்ச் 7 தாமதமாக அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆப்பிள் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் பற்றிய கவலைகள் இருந்த போதிலும், குளோபல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் டிராக்கரின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் 13 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து ஆப்பிள் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் 7 தாமதமாக அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆப்பிள் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    அதேபோல் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் பிரபலம் அடைந்ததன் காரணமாக சாம்சங் நிறுவனம் இரண்டாவது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளது. ஹவாய், சியோமி மற்றும் கார்மின் ஆகியவை முறையே 3, 4 மற்றும் 5 வது இடங்களை பெற்றுள்ளன. மற்ற ஸ்மார்ட்வாட்ச் நிறுவனங்களான அமேஸ்பிட் 4 சதவீத வளர்ச்சி உடன் 6-வது இடத்தில் உள்ளது.

     ஆப்பிள் வாட்ச்

    முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் அதிக வளர்ச்சி கண்டு ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக அமைந்ததற்கு முக்கிய காரணமாக கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் அமைந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தென் கொரியாவை சேர்ந்த ஹவாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் 10.1 சதவீத வளர்ச்சியைக் கண்டதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் தாக்கம் இந்த முதல் காலாண்டில் தெரியவில்லை என்றும், அதன் பாதிப்பு இரண்டாம் காலாண்டில் எதிரொலிக்கும் என்பதால் பல நிறுவனங்கள் அடுத்த காலாண்டில் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புக்கள் சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஆப்பிள் நிறுவனத்தின் 2019 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 2019) ஜூன் 3 காலை 10.00 மணி (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது. கீநோட் உரையுடன் துவங்கும் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு கலிஃபோர்னியாவின் சான்ஜோசில் 0ள்ள மெக் எனர்ஜி கன்வெஷன் சென்டரில் நடைபெறுகிறது.

    முந்தைய ஆண்டுகளை போன்று இந்த ஆண்டு கீநோட் உரையும் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் WWDC செயலிகளில் நேரலை செய்யப்படுகிறது. 2019 டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் 3 ஆம் தேதி துவங்கி ஜூன் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஆப்பிள் மென்பொருள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என தெரிகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 13, மேக் ஓ.எஸ். 10.15 மற்றும் வாட்ச் ஓ.எஸ். 6 உள்ளிட்ட இயங்குதளங்கள் பற்றி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.ஓ.எஸ். 13 இயங்குதளம் யுகான் என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.



    அந்த வகையில் ஐ.ஓ.எஸ். 13 இல் டார்க் மோட், யு.ஐ. ட்வீக்கள், புதிய அனிமேஷன்கள் மற்றும் அதிகாரப்பூர்வ கீபோர்டில் ஸ்வைப் டைப்பிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேக் ஓ.எஸ். 10.15 தளத்தில் ஐபேட் செயலிகளை இயக்கும் வசதியும் பாட்கேஸ்ட் போன்ற ஐபேட் செயலிகளுக்கு மேக் ஓ.எஸ். வெர்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இத்துடன் மேக் சாதனங்களுக்கென ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஆப்பிள் மியூசிக் செயலியை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இது ஐடியூன்ஸ் போன்றே செயல்படும் என தெரிகிறது. இத்துடன் மேம்பட்ட மேக் ப்ரோ சார்ந்த அறிவிப்பும் இந்நிகழ்வில் எதிர்பார்க்கப்படுகிறது.

    வாட்ச் ஓ.எஸ். 6 தளத்தில் ஆப் ஸ்டோர் வசதி சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் வாய்ஸ் மெமோஸ் செயலி, அனிமோஜிக்கள், மெமோஜி வசதி, ஆப்பிள் புக்ஸ் செயலி மற்றும் உடல்நலம் சார்ந்த புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் வாட்ச் சாதனத்திற்கு என ஆப்பிள் புதிய காப்புரிமைகளை பெற்றிருப்பது சமீபத்திய தகவல்களில் தெரியவந்துள்ளது. #AppleWatch



    ஆப்பிள் பதிவு செய்திருக்கும் இரண்டு காப்புரிமைகளில் வளைந்த ஓரங்களுடன் பெரிய ஆப்பிள் வாட்ச் டிஸ்ப்ளேக்கள், OLED டிஸ்ப்ளேக்களுக்கு ஆன்டி-பர்ன்-இன் தீர்வு உள்ளிட்டவை கோரப்பட்டுள்ளது.

    காப்புரிமை விண்ணப்பத்தின் படி, டிஸ்ப்ளேவில் முழுமையான பிக்சல்கள் மற்றும் முழுமையான அளவு கொண்ட பிக்சல்களில் தேர்வு செய்யப்பட்ட ஆன்டி-அலைசிங் பிக்சல்கள் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிக்சல்கள் OLED அல்லது LCD பிக்சல்களாகவோ அல்லது பெரிய டிஸ்ப்ளே பிக்சல்களை கொண்டிருக்கலாம்.

    இதன் மூலம் ஆப்பிள் வாட்ச் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இது 15% பெரிய டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆப்பிள் காப்புரிமை விண்ணபம் 20180246363 “Pixel Array Antialiasing to Accommodate Curved Display Edges,” தலைப்பில் 2018 இரண்டாவது காலாண்டு வாக்கில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    ஏப்ரல் 2018-இல் ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த காப்புரிமை வழங்கப்பட்டது, இதன் மூலம் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் வட்டம் அல்லது வளைந்த டிஸ்ப்ளே இன்டர்ஃபேஸ் வழங்க முடியும். பர்ன்-இன் பிழையை சரி செய்ய ஆப்பிள் காப்புரிமையில் புதிய தகவல் இடம்பெற்றுள்ளது.

    சில தினங்களுக்கு முன் 2018 ஆப்பிள் நிகழ்வினை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் படி செப்டம்பர் 12-ம் தேதி காலை 10.00 மணி்க்கு ஆப்பிள் தலைமையகத்தில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற இருக்கிறது. 

    இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனம் 6.5 இன்ச் OLED ஐபோன் X பிளஸ், மேம்படுத்தப்பட்ட 5.8 இன்ச் OLED ஐபோன் X, 6.1 இன்ச் எல்.சி.டி. ஐபோன் மாடல், ஐ.ஓ.எஸ். 12 புதிய ஏ12 பிராசஸர் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஹார்டுவேர் நிகழ்வில் 2018 ஐபோன்கள் தவிர ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக மிங் சி கியோ தெரிவித்திருக்கிறார். #applenews



    ஆப்பிள் 2018 ஹார்டுவேர் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட இருக்கும் சாதனங்கள் குறித்து பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். 

    அதன்படி ஆப்பிள் நிறுவனம் 11-இன்ச் ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட மேக் மினி, பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் வாட்ச், ஏர்பவர் உள்ளிட்ட சாதனங்களை உருவாக்கி வருவதாக மிங் சி கியோ தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட சாதனங்களுடன் 5.8 இன்ச் OLED, புதிய 6.5 இன்ச் OLED, 6.1 இன்ச் எல்சிடி மாடல்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். 

    மேம்படுத்தப்பட்ட ஐபேட் ப்ரோ மாடல் ஐபோன் X போன்றே ஃபேஸ் ஐடி, ஹோம் பட்டன் நீக்கப்பட்டு, 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் டிஸ்ப்ளேக்கள் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். மேக் மினி அப்டேட் குறித்து அதிக தகவல்களை வழங்காத பட்சத்திலும், புதிய பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    கோப்பு படம்

    மேக்புக் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களிலும் புதிய பிராசஸர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் விலை குறைந்த நோட்புக் மாடலை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாடல் மேக்புக் ஏர் இன்றி 12 இன்ச் மேக்புக் மாடலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேக்புக் ஏர் சாதனத்துக்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனம் மேக்புக் மாடல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஆப்பிள் வாட்ச் சாதனத்தை பொருத்த வரை ஆப்பிள் நிறுவனம் இரண்டு 2018 மாடல்களை உருவாக்கி வருவதாகவும், இவற்றில் ஒரு மாடலில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் மேம்படுத்தப்பட்ட இதய துடிப்பு அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இரண்டில் ஒரு மாடல் 1.57 இன்ச் (39.9 மில்லிமீட்டர்) மற்றொரு மாடலில் 1.778 இன்ச் (45.2 மில்லிமீட்டர்) டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிகம் எதிர்பார்க்கப்படும் ஏர்பாட் மற்றும் ஏர்பவர் சாதனங்கள் 2018 மூன்றாவது காலாண்டு வாக்கில் அதிகளவு உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய சாதனங்களின் அதிகாரப்பூர்வ வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும், இவை செப்டம்பர் மாத ஹார்டுவேர் நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் இந்தியா மற்றும் சிட்டிபேங்க் இணைந்து ஆப்பிள் நிறுவன சாதனங்களை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ.10,000 வரை சலுகை வழங்குகின்றன.
    புதுடெல்லி:

    ஆப்பிள் இந்தியா மற்றும் சிட்டிபேங்க் இணைந்து ஆப்பிள் சாதனங்களை வாங்குவோருக்கு கேஷ்பேக் வழங்குகின்றன.

    அந்த வகையில் ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் பென்சில் மற்றும் பேக்புக் சாதனங்களை வாங்குவோருக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இன்று (ஜூன் 11) துவங்கும் இந்த சலுகை ஜூலை 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. சிட்டி கார்ப்பரேட் கார்டுகளை தவிர இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து சிட்டிபேங்க் கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தி இந்த சலுகையை பெற முடியும்.

    கேஷ்பேக் சலுகை ஒரு கிரெடிட் கார்டுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் மாத தவணை முறையை (EMI) தேர்வு செய்தாலும் பெற முடியும். கேஷ்பேக் தொகை பரிமாற்றம் செய்தது முதல் 90 நாட்களுக்குள் கிரெடிட் கார்டு கணக்கில் சேர்க்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய கேஷ்பேக் சலுகையின் கீழ் ரூ.10,000 கேஷ்பேக் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மேக்புக் வேரியன்ட்கள், அனைத்து வித ஐபேட் சாதனங்களுக்கும் ரூ.5,000 வரை கேஷ்பேக், அனைத்து வித ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் ரூ.5,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று ஆப்பிள் பென்சில் வாங்குவோருக்கு ரூ.1,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    கேஷ்பேக் சலுகையை சேர்த்தால் என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர் விலை ரூ.67,200, ஐந்தாம் தலைமுறை என்ட்ரி லெவல் ஐபேட் விலை ரூ.23,000-க்கு பெற முடியும். இதே போன்று ஆப்பிள் வாட்ச் 1 சாதனத்தை ரூ.18,950, ஆப்பிள் பென்சில் ரூ.6,600 விலையில் வாங்கிட முடியும்.

    புதிய சலுகை ஆப்பிள் அதிகாரப்பூர்வ ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கான பரிமாற்றங்கள் ப்ளூடஸ் / பைன் லேப்ஸ் பிஓஎஸ் டெர்மினல்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இத்துடன் மற்ற சிட்டிபேங்க் சலுகைகளை சேர்க்க முடியாது.
    ×