search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "san francisco"

    • கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் குருட்டுகுலம் அப்பெண்ணின் உடல்நிலையை சோதித்தார்.
    • மயக்கமடைந்த பெண் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியோடு, அவருடைய இதயத்துடிப்பைச் சோதனை செய்தார்.

    டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில், மயக்கமடைந்த பயணியை ஆப்பிள் வாட்ச் உதவியுடன் மருத்துவர் காப்பற்றிய சம்பவம் நடந்துள்ளது.

    ஜூலை 2 ஆம் தேதி பறந்து கொண்டிருந்த விமானத்தில் 56 வயதான பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல், மயக்கமடைந்துள்ளார்.

    அதே விமானத்தில் பயணம் செய்த, கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் குருட்டுகுலம் அப்பெண்ணின் உடல்நிலையை சோதித்தார்.

    அப்போது அவரிடம் எந்த மருத்துவ உபகரணமும் இல்லாததால், மயக்கமடைந்த பெண் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியோடு, அவருடைய இதயத்துடிப்பைச் சோதனை செய்தார். மேலும் எலக்ட்ரோ கார்டியோகிராம் சோதனையையும் செய்தார்.

    அப்போது அப்பெண்ணின் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததையும், ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததையும் அவர் கண்டுபிடித்தார். பின்னர் விமானத்தில் இருந்த மருந்துகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினார்.

    விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியதும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "மருத்துவர்கள் மருத்துவருக்கான அடையாள அட்டையுடன் விமானத்தில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் யாருக்கேனும் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அவருக்கு நம்மால் சிகிச்சை அளிக்க முடியும். அடையாள அட்டை இல்லாவிட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்க மாட்டார்கள்" என்று மருத்துவ அடையாளத்தின் முக்கியத்துவத்தை மருத்துவர் குருட்டுகுலம் விவரித்தார்.

    • வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களுடன் பேச பெரு நிறுவனங்கள் சாட் பாட்களை பயன்படுத்தி வருகிறது.
    • இந்த உரையாடலின் ஆடியோவை பகிர்ந்த அந்த நபர் தான் ஒரு ஏ.ஐயின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

    உலகம் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது என்று கூறிவந்த நிலை வழக்கொழிந்து தற்போது உலகம் செயற்கைத் நுண்ணறிவான ஏ.ஐ மயமாக மாறி வருகிறது என்று கூறும் அளவுக்கு ஏ.ஐ மனிதர்களின் வாழ்க்கையோடு அதிகம் இணங்கத் தொடங்கியுள்ளது. இந்த இணக்கம் ஒரு படி மேலே சென்று மனிதர்களை ஆட்டிப்படைக்கும் சக்தியாக ஏ.ஐ மாறும் என்ற அச்சமும் பரவி வருகிறது.

    போலியான DEEP FAKE புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை உருவாக்குவது தொடங்கி மனிதர்களின் வேலையை பறிப்பது வரை இந்த 21 ஆம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஏ.ஐ மாறத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஏ.ஐ மூலம் இயங்கும் சாட் பாட்கள் [CHAT BOT] மனிதர்களின் கட்டளை இன்றியே பொய் சொல்லத் தொடங்கியுள்ளது.

     

    வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களுடன் பேச பெரு நிறுவனங்கள் சாட் பாட்களை பயன்படுத்தி வருகிறது. அமரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்று சேல்ஸ் பிரிவில் வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ரோபோ கால் சர்வீஸ் மூலம் பிளான்ட் என்று அதிநவீன ஏ.ஐ சாட் பாட்டை பணியமர்த்தியுள்ளனர்.

     

    இந்த சாட் பாட் வாடிக்கையாளர்களிடம் மனிதரைகளைப் போலவே பேசுமாம். இந்நிலையில் நிறுவனத்தின் முன்னாள் நின்றுகொண்டு விஷயம் தெரிந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்யவே, போனை அட்டென்ட் செய்த சாட் பாட் பெண்ணைப் போலவே அவரிடம் பேசியுள்ளது.தான் ஒரு சாட் பாட் தான் என தனது குரலில் காட்டிக்கொள்ளவில்லை.

     

    தான் உயிருள்ள மனிதன் தான் என நம்பவைக்க நிறுவனத்துக்குள் வேலை நேர இரைச்சல் இருப்பது போன்ற சத்தங்களை உருவாக்கி அவ்வப்போது பேச்சை நிறுத்தி நிறுத்தி பேசியுள்ளது சாட் பாட். ஆனால் ஏ.ஐ சாட்பாட்டை உருவாக்கிய நிறுவனம் இது எதையும் புரோக்ராம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஏ.ஐ ஆகவே இவ்வாறு ஏமாற்ற கற்றுக்கொண்டுள்ளது.

     

    இந்த உரையாடலின் ஆடியோவை பகிர்ந்த அந்த நபர் தான் ஒரு ஏ.ஐயின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து, இதுபோன்ற பல்வேறு ஏ.ஐ சாட் பாட் களுடன் உரையாடி வல்லுநர்கள் நடத்திய செய்து ஏஐ தொழில்நுட்ப பாட்கள் மனிதர்களின் கட்டளை இல்லாமலேயே இந்த செயல்களை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மனித குலத்துக்கு வருங்காலங்களில் ஏஐ மூலம் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றுஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

     

    • இந்தியாவில் சேவையை தொடங்கி ஊபர் 10 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது
    • ஆரம்ப கல்வியிலிருந்து முதுநிலை வரை ஆகும் செலவை ஊபர் ஏற்கிறது

    அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம், ஊபர் (Uber). உலகின் 70 நாடுகளில் 11 ஆயிரம் நகரங்களில் வாடகை கார் சேவையில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், இச்சேவை தவிர உணவு வினியோகத்திலும், சரக்கு போக்குவரத்திலும் ஈடுபட்டுள்ளது.

    இந்நிறுவனம், இந்தியாவில் வாடகை கார் சேவையை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

    இதனையொட்டி, அந்நிறுவனம் தங்களின் கட்டமைப்புடன் இணைந்துள்ள டிரைவர்களின் குழந்தைகளில் 1000 பேருக்கு ஆரம்பகல்வியிலிருந்து முதுநிலை கல்வி வரை ஆகும் செலவை ஏற்று கொள்கிறது. இதில் பள்ளிக்கல்வி கட்டணம், உபகரணங்கள், இணைய சேவை உட்பட அக்குழந்தைகளின் கல்விக்கு தேவைப்படும் அனைத்து செலவினங்களும் இதில் அடங்கும்.

    மேலும், தங்களுடன் நீண்டகாலமாக இணைந்துள்ள 100 டிரைவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டு விழாவையும் ஊபர் நடத்தியது.

    இது குறித்து ஊபர் இந்தியா நிறுவன தலைவர் பிரப்ஜீத் சிங் (Prabhjeet Singh) தெரிவித்ததாவது:

    மக்கள் சேவையில் டிரைவர்களின் பங்களிப்பு இல்லாமல் ஊபர் 10 ஆண்டுகாலம் நிலைத்து நின்றிருக்க முடியாது. எங்களின் சாதனைகளை நினைத்து பார்க்கும் இவ்வேளையில் எங்களுடன் இணைந்து மக்கள் சேவையாற்ற இணைந்திருப்பவர்களுக்கு நாங்கள் திருப்பி அளிக்க வேண்டிய பங்கை முறையாக வழங்க கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்கான வாய்ப்பு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். இந்த சிறு முயற்சி மூலமாக அனைத்து குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதற்கு எங்களின் பங்களிப்பும் உறுதி செய்யும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஊபரின் இச்செயல் சமூக வலைதளங்களில் பயனர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.

    அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ பகுதியில் ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய் வருவாய் குறைவான வருமானமாக கருதப்படுகிறது. #America #SanFrancisco
    நியூயார்க்:

    இந்தியாவில் 5 இலக்க எண்களில் சம்பளம் வாங்குவதுதான் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை இலட்சியமாகவே இருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஆண்டு வருமானம் 80 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அவர்கள் ஏழைகளாக கருதப்படுவதாக வெளியிடப்பட்ட அறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரம் அந்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இங்கு வாழ்வதற்கான இயற்கை சூழலும், பாதுகாப்புடன் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நிலையும் உள்ளது.

    அமெரிக்காவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நபர்கள் வசிக்கும் பகுதியும் சான் பிரான்சிஸ்கோதான். இங்கு ஆண்டு வருவாய் 80 லட்சத்துக்கும் மேலாக இருந்தால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது. 80 லட்ச ரூபாய் வருமானம் பெருபவர்களை ஏழைகள் என்றும், அதற்கு குறைவாக 60 லட்ச ரூபாய் அளவில் வருமானம் பெருபவர்கள் மிக ஏழைகள் எனவும் அமெரிக்காவின் வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

    குறிப்பாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தின் மாத வருமானம் சுமார் 17.19 லட்சம் ரூபாய் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பண்ணை தொழிலாளர்களின் ஆண்டு வருமானம் 12 லட்ச ரூபாயாகவும், குழந்தை பராமரிப்பு வேலை பார்ப்பவர்களுக்கு சுமார் 15 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    அமெரிக்காவின் பிற பகுதிகளை காட்டிலும், இங்கு வருமான வரையறையில் வேறுபாடு காணப்படுகிறது. ஏனெனில், சான் பிரான்சிஸ்கோ பகுதியில் 2 அறைகள் கொண்ட வீட்டின் வாடகையே சுமார் 2.13 லட்ச ரூபாயாம்!

    இங்கு கோடிகளில் சம்பளம் பெறுபவர்கள் மட்டுமே நடுத்தர வசதி படைத்தோராக கருதப்படுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமான ஒன்றாகும். #America #SanFrancisco
    ×