என் மலர்
நீங்கள் தேடியது "உலகம்"
- அவரவர் பணிகளில் சுதந்திரமாகவும், சுய விருப்பத்துடனும் ஈடுபடுவதற்கு முழு உரிமை வழங்கப்பட வேண்டும்.
- யானைகள் இல்லாத காட்டில் ஏன் யானை பிடிக்கக் குழி வெட்டப்பட்டது? என்பது தனிவழக்கு!.
நமக்குத் தொடர்பில்லாத செயல்களிலிருந்து விலகியே இருப்போம்!; அது நமக்கும் நல்லது! அடுத்தவர்களுக்கும் நல்லது! என்பதில் அக்கறையாய் இருக்கும் வாசகர்களே! வணக்கம்.
இந்த உலகம் பயன்கருதுகிற உலகம். எந்தச் செயலை யார் செய்வார்? என்பது இல்லாமல், எந்தச் செயலை யார் அகப்படுகிறார்களோ அவர்கள் தலையில் கட்டிவிடுவது! என்பதில் ஆர்வமாய் இருக்கும் உலகம். அதனால், கணக்கெடுத்துப் பார்த்தால் தமக்குத் தொடர்புடைய வேலைகளைப் பார்க்காமல், தமக்குச் சம்பந்தமில்லாத காரியங்களில் அகப்பட்டுக்கொண்டு விழித்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இப்படி வேண்டாத வேலைகளில் அகப்பட்டுக் கொள்வது என்பது பலருக்கு அவர்களின் விருப்பத்தின் காரணமாகவே அமைந்து விடுகிறது; சிலர் விரும்பாமலேயே பல காரியங்கள் அவர்கள்மீது திணிக்கப்படுகின்றன. அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இன்னும் சில காரியங்கள் அவர்கள் மீது அவர்கள் அறியாமலேயே சுமத்தப்படவும் செய்கின்றன.
மனித வாழ்தலின் போக்கில், அலுவல் ரீதியாகவோ, அல்லது குடும்ப ரீதியாகவோ, அல்லது சமூக ரீதியாகவோ சில பணிகளை, சில கடமைகளை, சில பொதுக் காரியங்களை மனிதர்கள் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். நாம் செய்வது அலுவல் சம்பந்தமானதோ, அல்லது குடும்பக் கடமைகளோ, அல்லது சமுதாயப் பொதுக் காரியங்களோ இவை எதுவாயினும் விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் செய்தால் அவை இன்பமானவையாகவே அமையும். ஆனால் அவற்றையெல்லாம் வெறும் கடமைக்காகவும், ஊதியத்திற்காகவும், வெற்றுப் பகட்டிற்காகவும் செய்யும் மனநிலை வாய்த்தால், செயல்கள் கவலைகளின் குவியல்களாய்ப் பெருகிப் போகும்.
அந்த நிலையில் பார்த்தால் மனிதர்கள், தமக்கான வேலைகளைத் தமக்கான கவலைகள் ஆகவும், தமக்குத் தொடர்பற்ற வேலைகளை, அவையும் தம்மை மேலும் கவலைப்படுத்த வந்த பெருங்கவலைகளாகவுமே பார்க்கத் தொடங்கி விட்டனர். இன்றுள்ள நிலைமையில் மனிதர்கள் அவரவர் வேலைகளில் மட்டுமே அக்கறை காட்டிச் செய்து வந்தாலே போதும்; அடுத்தவர் வேலைகளில் மூக்கை நுழைத்துக் குழப்புவது; அந்த வேலைகளை அவர்கள் செய்ய விடாமல் தடுப்பது; கொஞ்சம் அசந்தால் தமது வேலைகளையும் அவர்கள் தலையில் கட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது போன்ற வேடிக்கை நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடும்பமாயினும் பணிபுரியும் அலுவல் இடமாயினும் பணிப் பகிர்மானம் என்பது அவசியமானது ஆகும். வீடு என்று எடுத்துக்கொண்டால், வீட்டுப் பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு, கல்வி, சமையல், நிதி நிருவாகம், குடும்பச் சுகாதாரம் போன்ற பல்வேறு பிரிவுகளில் கணவன் மனைவிக்கு இடையே பணிப் பகிர்மானம் தெளிவானதாக இருக்க வேண்டும். ஒருவர் பணி எல்லைக்குள் மற்றவர் தலையீடும், பணிச் சுமத்தலும் திணித்தலும் அறவே கூடாது. அவரவர் பணிகளில் சுதந்திரமாகவும், சுய விருப்பத்துடனும் ஈடுபடுவதற்கு முழு உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த உரிமை அடுத்தவர் கொடுப்பதாக அல்லாமல் அவரவர் எடுத்துக் கொள்வதாக இருக்க வேண்டும்.
சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்த மனைவியிடம் ஆசையாக வந்து, 'என்ன சமைத்துக் கொண்டிருக்கிறாய்? ரவா கேசரியா?" என்று ஆர்வத்தோடு கேட்டார் கணவர். "ஆமாம்!" என்றார் மனைவி. அதோடு 'சரி' என்று, 'மனைவி சமையல்கட்டில் அவர் வேலையைப் பார்க்கட்டும்! நாம் நமது வேலையில் கவனம் செலுத்துவோம்!' என்று கணவர் சென்றிருக்க வேண்டும். ஆனால் கணவர் சமையல்கட்டை விட்டுச் செல்லவில்லை; மாறாக, "ரவையைப் பொன்னிறமாக வறு!", "நெய்யில் பொரி", "தண்ணீரை ஊற்று", "சீனியைப் போட்டுக் கிண்டு", "வலது புறமாகக் கிண்டு", இடதுபுறமாகக் கிண்டு!" என்றெல்லாம் மாறிமாறிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
போதாக்குறைக்குக் கரண்டியைக் கையில் வாங்கி அவரே கிண்டவும் செய்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மனைவி, " இங்கே சமையல் நான் செய்யட்டுமா? இல்லை நீங்கள் செய்கிறீர்களா?. என்வேலையை என்னைப் பார்க்க விடுங்கள்!" என்று பொரிந்து தள்ளி விட்டார். இப்போது கணவர் பேசினார், "சமையல் வேலைபார்ப்பது எப்படி உன்னுடைய வேலையோ? அதில் தலையிட்டால் எப்படி உனக்குக் கோபம் வருகிறதோ? அதேபோலக் கார் ஓட்டுவது என்னுடைய வேலை; அதில், அருகில் அமர்ந்து கொண்டு, வலது திருப்பு, இடது திருப்பு, பிரேக் போடு, லைட் டிம் பண்ணு, பிரைட் பண்ணு, ஆரன் அடி! என்று என்னுடைய வேலைக்குள் தேவையில்லாமல் நீ தலையிட்டாலும் எனக்குக் கோபம் வரும்!" என்றார். அவரவர் வேலைகளை அவரவர் செய்துவிடுவர் என்று நம்பிக்கை வைத்துவிட்டால், தேவையற்ற தலையீடுகள் இல்லாமல் போகும்.
அதேபோலப் பணிபுரியும் இடங்களிலும் அவரவர் பணிப்பண்பாடு அவரவர்களால் பேணப்பட வேண்டும். அடுத்தவர் வேலைகளில் தேவையற்று நுழைந்து குற்றம் கண்டுபிடிப்பது; கோள் மூட்டுவது, தான் செய்யாமலிருப்பது மட்டுமல்லாமல் அடுத்தவர்களையும் பணியில் ஈடுபடாமல் தடுப்பது போன்ற செயல்களினால் பணிகள் விருப்பங்களாக அல்லாமல் கவலைகளாக மாறிவிடுகின்றன. தனது வேலைகளில் துளியும் அக்கறை செலுத்தாமல், அடுத்தவர் மீது குற்றம் கண்டுபிடித்து இரண்டுபக்க வேலைகளிலும் தோல்வி ஏற்படும்படி சிலர் நடந்து கொள்வர். இவ்வாறு தாம் செய்யும் பணிகளை எல்லாம் துன்பங்களாக எண்ணத் தொடங்கினால் அவை முடிவில் கவலைகளாகவே உருமாறிப்போகும். கவலைகள் எப்போதும் நல்ல பலன்களை விளைவிப்பதில்லை.' கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு! காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு! 'என்கிற திரைக்கவி வார்த்தைகள், ஆற்ற வேண்டிய காரியங்களின் கவலைகளை நீக்கி விட்டுத் துணிந்து செயலாற்றச் சொல்கின்றன.

சுந்தர ஆவுடையப்பன்
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்"
என்கிற வள்ளுவ வாசகம், எல்லாப் பொருள்களின் மீதும் பற்றறுக்கும் அவசியத்தைத் துறவிகளுக்கு வலியுறுத்திக் கூறுவது ஆகும். ஆயினும் இந்தக் குறளின் வாயிலாக மற்ற ஆசாமிகளும் பெற்றுக்கொள்ள வேறொரு நற்செய்தியும் உண்டு. தமக்குச் சொந்தமான பொருள்களின் மீதும் செயல்களின்மீதும் அக்கறை காட்டுவதும் ஆசையோடு செயல்படுவதும் உலகியல் கண்ணோட்டத்தில் சரியானதுதான் என்றாலும், தமக்குச் சொந்தமில்லாத, தமக்குச் சம்பந்தமில்லாத வேலைகளில் தலையிடுவது தேவையற்ற துன்பங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று எச்சரிக்கவும் செய்கிறது இந்தத் திருக்குறள்.
உலகின் ஒவ்வொருவரும் அவரவர்க்கு விதிக்கப்பட்டுள்ள பணிகளில் மட்டுமே அக்கறை செலுத்துவது போதுமானது. ஒரு நகரப்பேருந்து போய்க்கொண்டிருக்கிறது என்றால், அதில் ஓட்டுநரின் பணி, போக்குவரத்து விதிகளின்படி வண்டியை ஓட்டுவது, நிறுத்தங்களில் நிறுத்திப், பயணிகள் பாதுகாப்பாக ஏற இறங்க உதவுவது, நேர மேலாண்மையில் அக்கறை காட்டுவது ஆகியவை மட்டுமே!; மாறாக ஏறிய பயணிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு நான் தான் பயணச் சீட்டு தருவேன்! என்று அடம்பிடிக்கக் கூடாது: அது நடத்துநரின் வேலை.
பேருந்தில் ஏறுகிற பயணிகளில் ஒருவர், " இந்த ஓட்டுநர் வண்டியோட்டும் வாகு எனக்குப் பிடிக்கவில்லை!; எனக்கும் வண்டியோட்டத் தெரியும் ஆகையால் நான் தான் வண்டியோட்டுவேன்! என்று ஸ்டீயரிங் பக்கம் போய்விடக்கூடாது. பேருந்துப் பயணத்திலேயே இவ்வளவு பொறுப்புகளும் பணிகளும் அவரவர்க்கென்று இருக்கும்போது அடுத்தவர் பணிகளில் எதற்காக கவனம் செலுத்திக், கவலைகளை விலையின்றிப் பெற்றுக் கொள்ளவேண்டும்?.
ஒரு சந்தையில் ஒரு குதிரை வியாபாரி, மூன்று குதிரைகளை விலைக்கு வாங்கித், தனது ஊரை நோக்கி அவற்றை ஓட்டிக்கொண்டு வந்தான். ஒருகாட்டு வழியே விரைவாக மூன்று குதிரைகளும் ஓடி வரும்போது, சருகுகளால் மூடிக்கிடந்த ஒருபள்ளத்திற்குள் விழுந்து காலொடிந்து இறந்து விட்டன. பள்ளத்தை ஆராய்ந்து பார்த்த குதிரை வியாபாரி அப்பள்ளம் யானைகளை உயிரோடு பிடிப்பதற்காக வெட்டப்பட்ட பள்ளம் என்பதும், பள்ளம் இருப்பதை யானைகள் அறியாமலிருப்பதற்காகச் சருகுகள்போட்டு மூடப்பட்டுள்ளதையும் தெரிந்து கொண்டான்.
அந்த நாட்டை ஆளும் அரசனின் நெருங்கிய உறவினன் ஒருவனே அப்பள்ளத்தை வெட்டியவன் என்பதையும் கூடுதல் தகவலாக அறிந்துகொண்டான். அந்த வனத்தில் வாழ்ந்துகொண்டிருந்த சாது ஒருவர் அப்போது அப்பக்கம் வந்தார்; அவரிடம் எல்லா விஷயங்களையும் கூறித், தன்னுடன் வந்து அரசனிடம் நியாயம் கேட்க உதவுமாறும் வேண்டிக் கொண்டான். சாதுவும் குதிரை வியாபாரியும் அரசனிடம் நீதி கேட்க அரண்மனைக்குச் சென்றார்கள்.
அரசனிடம் எல்ல விவரங்களையும் கூறிய சாது, " அரசே! யானைக்குக் குழி வெட்டி, இந்தக் குதிரைகள் அதில் விழுந்து சாவதற்கு முழுமுதற் காரணமாக இருக்கும் தங்கள் உறவினனை, பாரபட்சம் பாராமல் தண்டித்து, உரிய நஷ்ட ஈட்டைக் குதிரை வியாபரிக்கு வழங்கிடுமாறு உத்தரவிடுங்கள்!" என்றார். நீள யோசித்த அரசன் இவ்வாறு தீர்ப்புக் கூறினான், "யானைக்கு வெட்டிய குழியில் யானைகள் விழுந்து இறந்திருந்தால் அதற்கு, உரியவனிடம் நஷ்ட ஈடு பெற்றுத் தரலாம்; ஏனென்றால் அந்தக் குழி யானைகளை உயிரோடு பிடிப்பதற்காக மட்டுமே வெட்டப்பட்ட குழி ஆகும்.
மற்றொன்று, யானைகளுக்காக வெட்டப்பட்ட குழியில் குதிரைகள் விழுந்தாலும் விழுந்து இறந்தாலும் அது நோக்கத்திற்குப் பொருந்தாத செயலாகவே கருதப்படுகிறது. மொத்தத்தில் வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்!" என்றார். சாது மேலும் பேசினார், "அரசே! இந்த வழக்குத் தொடர்பான கூடுதலான ஒரு செய்தி, அந்தக் காட்டில் யானைகளே கிடையாது! என்பதாகும்". " யானைகள் இல்லாத காட்டில் ஏன் யானை பிடிக்கக் குழி வெட்டப்பட்டது? என்பது தனிவழக்கு!. அதைத் தனியாகத்தான் விசாரிக்க வேண்டும். அதில் குதிரைகள் விழுந்து இறந்ததுதான் சம்பந்தமில்லதது என்று இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன். மேலும் நீர் காட்டில் தவம் செய்யும் துறவி; உமக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் நீர் சம்பந்தப்படுவது எதற்காக? என்று எச்சரிக்கும் தொனியில் அரசன் சாதுவைப் பார்த்து எதிர்க்கேள்வி கேட்டார். தொடர்பில்லாத விஷயங்களின் தொடர் சங்கிலியாய் வழக்கு நீண்டுகொண்டே போனது.
யானைகளே இல்லாத காட்டில் யானையைப் பிடிப்பதற்காக ஏன் குழி வெட்டப்பட்டது? யானைகள் விழும் பள்ளத்தில் ஏன் குதிரைகள் விழுந்தன? விழுந்த குதிரைகள் பிழைக்காமல் ஏன் இறந்து போயின? அரசன் குழிவெட்டிய உறவினனுக்காக வழக்கைத் திசை திருப்புகிறானா? எந்தப்பற்றும் இல்லாத துறவி எதற்காகக் குதிரை வியாபாரிக்காகப் பரிந்து பேச வேண்டும்?.
நமக்கு வேண்டாத வேலைகளிலிருந்து சற்றே அல்ல முழுமையும் விலகி இருப்பது இருநூறு சதவீதம் பாதுகாப்பானது.
தொடர்புக்கு - 9443190098
- இசை நீரூற்று நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்
- கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா சிறப்பு அம்சங்களை பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி:
ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 35 பேர் உலகம் முழுவதும் சாலை வழியாக கேரவன் வாகனத்தில் சென்று சுற்றுலா பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி துருக்கியில் தங்களது பயணத்தை தொடங்கினார்கள். அனைத்து வசதிகளையும் கொண்ட கேரவன் போன்ற வடிவமைப்புடைய 18 வாகனங்களில் இவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். 21 நாடுகளுக்கு சென்று அங்குஉள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட இவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
துருக்கியில் இருந்து புறப்பட்ட அவர்கள் ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்தடைந்தனர். நேற்று அவர்கள் கன்னியாகுமரிக்கு வந்தனர்.
கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா சிறப்பு அம்சங்களை பார்வையிட்டனர்.
பின்னர் இரவு அவர்கள் கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் முருகன் குன்றம் எதிரே அமைந்துள்ள இசை நீரூற்று கண்காட்சியை பார்வையிட்டனர். முன்ன தாக கன்னியாகுமரி வந்த அவர்களை இசை நீரூற்று கண்காட்சி நிர்வாக இயக்குனர் டாக்டர் நிதின் வரவேற்றார்.இன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் அவர்கள் பின்னர் நேப்பாளம், பூட்டான், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியாவில் தங்களது பயணத்தை நிறைவு செய்கின்றனர்.
- கீழக்கரையில் உலக மனித உரிமைகள் தின விழா நடந்தது.
- பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் இணைந்து உலக மனித உரிமை தின விழாவை கீழக்கரையில் நடத்தியது.
மக்கள் நல பாதுகாப்புக் கழக தலைவர் தமீமுதீன் தலைமை தாங்கினார். சட்ட விழிப்புணர்வு இயக்க செயலாளர் தாஜுல் அமீன் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட வக்கீல் சங்க தலைவர் ஷேக்இப்ராஹிம் சாதனையாளர்கள் மற்றும் தனியார் நிறுவனம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
சட்ட விழிப்புணர்வு இயக்க தலைவரும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான முஹம்மது சாலிஹ் ஹுசைன், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, தனியார் நிறு வனத்தின் இணை நிறுவனர் அப்துல் ரஹ்மான், ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் சுந்தரம் ஆகி யோர் பேசினர். சட்டம் சம்பந்தமான பொது மக்களின் கேள்விகளுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.
சட்ட விழிப்புணர்வு இயக்க பொருளாளர் ஜாபீர் சுலைமான் நன்றி கூறினார். மக்கள் நல பாதுகாப்புக் கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் தொகுத்து வழங்கினார். இதில் 100-க்கும் அதிகமான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இன்னும் சரியா 400 கோடி ஆண்டுகள் கழிச்சு அன்ட்ரோமிடாவும், பால்வீதியும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும்னு சொல்றாங்க.
- ஒப்பீட்டளவில் 400 கோடி ஆண்டுகள் என்பது தொலைதூரமா தெரிஞ்சாலும், பூமியில் டைனசார்கள் உருவானது 24 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான்.
பூமி இருக்கும் காலக்ஸியின் பெயர் பால்வீதி. பால்வீதியில் சுமாரா 1 லட்சம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. பால்வீதியின் நடுவே ஒரு கருந்துளை இருக்கு. ஒட்டுமொத்தமா இந்த லட்சம் கோடி நட்சத்திரங்களும் இந்த கருந்துளையை தான் சுத்தி வந்துகிட்டு இருக்கு.
நமக்கு அருகாமையில் அன்ட்ரோமிடான்னு இன்னொரு காலக்ஸி இருக்கு. அது பால்வீதியை விட பெரியதுன்னு சொல்றாங்க. இந்த காலஸிக்கள் எல்லாமே விண்வெளியில் எங்கோ போய்கிட்டே இருக்கு. எங்கே போகுதுன்னு யாருக்கும் தெரியாது. அதாவது ஒரு மணிநேரத்துக்கு 21 லட்சம் கிமி வேகத்தில் காலக்ஸிகள் எங்கோ பயணம் பண்ணிகிட்டு இருக்கு.
இன்னும் சரியா 400 கோடி ஆண்டுகள் கழிச்சு அன்ட்ரோமிடாவும், பால்வீதியும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும்னு சொல்றாங்க. ஒப்பீட்டளவில் 400 கோடி ஆண்டுகள் என்பது தொலைதூரமா தெரிஞ்சாலும், பூமியில் டைனசார்கள் உருவானது 24 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஆக இன்னும் 500 கோடியாவது ஆண்டில் மனிதர்கள் இருக்காங்களோ இல்லையோ, ஏதோ உயிரினம் பூமியில் இருக்கும்.
தலா 1 லட்சம் கோடி நட்சத்திரங்கள் உள்ள இரு காலக்ஸிகள் மோதிக்கொண்டால் என்ன ஆகும்?
"பெருசா ஒன்றும் ஆகாது" என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஏனெனில் காலக்ஸிக்களின் நட்சத்திரங்களுக்கு இடையே இருப்பது பெரும்பாலும் வெற்றுவெளிதான். அதாவது ஒரு காலக்ஸியில் 99.2% வெறும் வெளிதான். மீதம் உள்ள 0.8% தான் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள்.
ஆக இந்த மோதல் நிகழ்கையில் விண்ணை பார்த்தால் திடீர் என வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். புதுசா ஏராளமான நட்சத்திரங்கள் விண்ணில் தோன்றும். சில நட்சத்திரங்கள் மோதி கிலோனோவா (Kilonova) எனும் வானவேடிக்கை நிகழலாம். பார்த்தால் ஒரே ஜாலியா இருக்கும்.
அப்ப நாம மனித வடிவில் இருக்கமாட்டோம். ஆனால் ஏதோ ஒரு வடிவில் இருந்து விண்ணை உற்றுபார்த்துக்கொண்டிருப்போம்.
ரோபாட் வடிவில் உட்கார்ந்து விண்ணைபார்த்துவிட்டு நோட்ஸ் எழுதிகிட்டு கூட இருக்கலாம். யாருக்கு தெரியும்?
- நியாண்டர் செல்வன்
கன்னியாகுமரி:
நாகர்கோவில் நகரில் கடந்த 17 ஆண்டுகளாக நாஞ்சில் பொழுதுபோக்கு பொருட்காட்சி நிறுவனம் உலக அதிசயங்கள் மற்றும் பல்வேறு அதிசயங்களை தத்ரூபமாக வடிவமைத்து, குமரி மாவட்ட மக்களை அதிசயிக்க வைத்து வருகிறது.
இந்த நிறுவனம் 18-வது ஆண்டாக இந்த ஆண்டு "பனி உலகம் (ஸ்னோவேர்ல்டு)-ஆஸ்திரேலிய பறவைகள்" என்ற பெயரிலான பொழுது போக்கு பொருட்காட்சியை, நாகர்கோவில் இந்து கல்லூரி அருகில் உள்ள மாநகராட்சி பொருட்காட்சி திடலில் அமைத்துள்ளது.
பனிமலைக்கு சென்று வந்ததை நினைவுபடுத்தும் வகையில் பனிக்கட்டிகளால் ஆன மலையை உருவாக்கியும், ஆஸ்திரேலியாவில் உள்ள பறவைகள், விலங்குகளை தத்ரூபமாக வடிவமைத்தும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்த பொருட்காட்சியின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் கலந்துகொண்டு பொருட்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
பின்னர் அவர்கள் பொருட்காட்சி திடலில் அமைக்கப்பட்டு இருந்த ஜில்லென்ற பனிமலை, ஆஸ்திரேலிய பறவைகள் மற்றும் விலங்குகளை பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் முத்துராமன், ஜவகர், அகஸ்டீனா கோகிலவாணி, கவுன்சிலர்கள் ராணி, ரமேஷ், ஸ்ரீலிஜா மற்றும் கவுன்சிலர்கள், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த், வக்கீல் சதாசிவன், நாஞ்சில் பொழுதுபோக்கு பொருட்காட்சி நிறுவனத்தை சேர்ந்த ஏ.பாரூக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நாஞ்சில் பொழுதுபோக்கு பொருட் காட்சி நிறுவன பாரூக் கூறியதாவது:-
மக்களின் பேராதரவை பெற்ற ராட்டினங்களுடன் கூடிய "ஸ்னோ வேர்ல்டு-ஆஸ்திரேலிய பறவைகள்" பொருட்காட்சி 20-ந்தேதி தொடங்கி வருகிற ஜூன் மாதம் 4-ந்தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடை பெறும். இந்த பொருட் காட்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான பொருட்கள், சமையலறை சாதனங்கள், சிறுவர்க ளுக்கான விளை யாட்டுப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், பெண்களுக்கு தேவையான அழகு சாதனப்பொருட்கள், நாற்காலி, ஷோபா கம் பெட்டுகள், டிரஸ்சிங் டேபிள், பெட்ஷீட்டுகள், தரைவிரிப்புகள், நிலம் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கல்வி சார்ந்த நிறுவனங்கள் இந்த பொருட்காட்சியில் அரங்கு கள் அமைத்துள்ளன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் நாவிற்கு சுவையான பாப்கார்ன், பஞ்சுமிட்டாய், சோலாப்பூரி, பானிபூரி, டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், டீ-காபி, மதுரை பேமஸ் ஜிகர்தண்டா உள்ளிட்ட சிற்றுண்டி கடைகளும் இடம் பெற்றுள்ளன.
குடும்பத்தோடு விளையாடி மகிழ ஜெயிண்ட் வீல், கொலம்பஸ், பிரேக் டான்ஸ், கோஸ்டர், பேன்சி கார்கள், மினி ரெயில், ஹெலிகாப்டர் மற்றும் பல விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளது. இரவை பகலாக்கும் மின்ஒளியில் நடைபெறும் இந்த பொருட்காட்சி கோடை கால விடுமுறை முழுவதும் குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்திடும் வகையில் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.
- செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தன்னலமற்ற சேவையை வழங்கி வரும் செவிலியர்களை பெருமைப்படுத்தும் விதமாக 'விளக்கேந்திய மங்கை' , 'கை விளக்கேந்திய காரிகை' என்று உலகம் முழுவதும் போற்றப்படுபவரும் , நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12 ஆம் தேதி உலகம் முழுவதும் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நோயாளிகளுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத சேவையை கவுரவிக்கும் விதத்தில் தஞ்சை நகர பொதுமக்கள் சார்பில் செவிலியர்கள் தின கொண்டாட்டம் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் நடைபெற்றது .
ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் , செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டினர்.
மேலும் அவர் பேசுகையில் " சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பாசத்துடனும், பரிவுடனும் நடந்து கொண்டு கனிவான சேவையை வழங்கி வரும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.
முன்னதாக தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி , தஞ்சை மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா சரவணன் ஆகியோர் செவிலியர்களுக்கு இனிப்புகளை வழங்கி செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர் .
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபுராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் மாலதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- கோ. பூஜை, மகா கணபதி பூஜை, கன்னியா பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள க.கிருஷ்ணாபுரம் தனியார் திருமண மண்டபத்தில் உலக நன்மை வேண்டி ருத்ர காளி மற்றும் பகளாமுகி மகா யாகம் நடைபெற்றது.
இதில் கோ. பூஜை, மகா கணபதி பூஜை, கன்னியா பூஜை, மகா வேள்வி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மகா யாகத்தை பாலக்காடு கல்பாதி ருத்ரகாளி மடம் பாஸ்கரசர்மா சாமிகள் நடத்தி வைத்தார். இதில் சூலூர் கந்தசாமி எம்.எல்.ஏ.,பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி, கேத்தனூர் ஊராட்சி முன்னாள் தலைவர் கே.என்.வெங்கிடபதி, உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
- தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
உலகம் முழுவதும் பரவியுள்ள ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம், சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கரப்பான் பூச்சிகள் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவிலிருந்து மேற்கு நோக்கியும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் நோக்கியும் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வீரர்கள் ஆசியாவிலிருந்து வர்த்தக பாதைகளில் ஐரோப்பாவிற்கு பயணித்த போது, அவர்களின் ரொட்டி கூடைகளில் கரப்பான் பூச்சிகள் ஏறி ஐரோப்பாவிற்குப் பயணித்து அங்கு அதிகம் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அந்த காலகட்டங்களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நீராவி இயந்திரம் மற்றும் கடிதத்துக்கு உட்புறமாகக் குழாய்கள் போன்ற கண்டுபிடிப்புகள் பூச்சிகள் மேலும் பயணிக்கவும், உட்புறமாக வசதியாக வாழவும் உதவியது. கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவற்றின் பரவலை ஆராய்வது உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

- உலகை ஆட்டிப்படைகத் தொடங்கியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த தனது அச்சத்தை எலான் மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார்.
- கணினி மற்றும் ரோபோக்கள் உங்களை விட எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ய முடிந்தால், உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதா?
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், X (ட்விட்டர்) இன் உரிமையாளரும் உலக பணக்காரர்களில் ஒருவருமாகிய எலான் மஸ்க், தற்போது உலகை ஆட்டிப்படைகத் தொடங்கியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று (மே 23) பாரிஸில் நடந்த விவா டெக் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியில் வெப்கேம் மூலம் பேசிய மஸ்க், செயற்கை நுண்ணறிவின் காரணமாக வருங்காலங்களில் நம்மில் யாருக்கும் வேலை இருக்காது என்றும் ஏஐ தொழில்நுட்பமே தனது மிகப்பெரிய பயம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பொழுதுபோக்குக்காக வேண்டுமானால் ஏதெனும் ஒரு வேலையை நாம் செய்யலாம். மற்றபடி உங்களுக்குத் தேவையான பொருட்களையும் சேவைகளையும் ஏஐ தொழில்நுட்பமே ரோபோக்கள் தயாரித்து வழங்கிவிடும். பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பற்றாக்குறை இருக்காது. கடந்த சில ஆண்டுகளாக ஏஐ தொழில்நுட்பத்தின் திறன்கள் வேகமாக முன்னேறி வருகின்றன.

கணினி மற்றும் ரோபோக்கள் உங்களை விட எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ய முடிந்தால், உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதா? என்று கேள்வியெழுப்பிய அவர், சமூக ஊடகங்கள், மனித மூளையில் சுரக்கும் டோபோமைனை AI மூலம் அதிகப்படுத்தும் யுக்தியை கையாளத் தொடங்கியுள்ளன என்றும் இதிலிருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாக்க அவர்கள் அதிக நேரம் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். கடந்த காலங்களிலும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து எலான் மஸ்க் அச்சம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.
- கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியை கண்டது இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ். நானும் ரவுடி தான் திரைப்பட படப்பிடிப்பு பணிகளில் விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. நயன்தாரா சமீப காலமாக படத்தில் நடித்து கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்ட நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி இந்த புகைப்படங்கள் அனைத்தையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர்.
அதில் இரண்டு குழந்தைகளுடன் படகில் போவது, அவரது மகன்கள் இருவரும் ட்ரவுசர்கள் அணிந்து மிகவும் க்யூட்டாக இருக்கின்றனர். மேலும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் அதில் நயன் தாராவை தூக்கி விலையாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அப்பதிவில் வெட்டிங் ஆனிவர்சரி வாழ்த்து தெரிவித்து
'உன்னை திருமணம் செய்து கொண்டது என் வாழ்வில் நடந்த சிறந்த விஷயம் என் உயிர் உலகம் நீயே. லவ் யூ லாட்ஸ் என் தங்கமே. இன்னும் நிறைய வேடிக்கையான நேரங்கள், நினைவுகள் மற்றும் வெற்றிகரமான தருணங்களுக்கு நீண்ட தூரம் உன்னுடன் செல்ல வேண்டும். . எப்பொழுதும் எங்களுடன் நின்று நம்மைப் பாதுகாத்து, நமது பெரிய பெரிய லட்சியங்களை வெற்றிகொள்ளச் செய்ய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நமது உயிர் & உலகம் உடன்." என்று பதிவிட்டுள்ளார்.
சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நயன்தாரா நடித்து வருகிறார். அடுத்து மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 , டெஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
- நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.
நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.
அண்மையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.
இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தனது மகன்களுடன் விக்னேஷ் சிவன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நயன்தாரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கு தந்தையர் தினம் வாழ்த்துக்கள்" என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 10 மொழிகளில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படம் குறித்த முதல் ரிவியூவ் வெளியாகியுள்ளது.
- இந்த படத்தில் பணியாற்றியதை நான் பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். மாபெரும் பொருட் செலவில் பிரமாண்டமான முறையில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியான கங்குவா படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச் செய்தது.
இதற்கிடையில் ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸை ஒட்டி கங்குவா படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. 10 மொழிகளில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படம் குறித்த முதல் ரிவியூவ் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு முன்னதாக படத்தில் பணியாற்றியவர்களுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் படத்தில் பாடல் எழுதியுள்ள பாடலாசிரியர் விவேகா படம் பார்த்த அனுபவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியதாவது, 'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்... இந்த படத்தில் பணியாற்றியதை நான் பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






