search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Celebrity"

    • எபிக், ஆக்‌ஷன் மற்றும் ஃபேண்டசி கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர் ராஜமௌலி
    • ராஜமௌலி இதில் குழந்தைப் போன்று முக பாவனைக் கொடுத்து மிக அழகாக ஆடியுள்ளார்.

    இந்திய சினிமாவை அடுத்தக்கட்டதிற்கு எடுத்துச் சென்ற பெருமை இயக்குனர் ராஜமௌலிக்கு உண்டு. எபிக், ஆக்ஷன் மற்றும் ஃபேண்டசி கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர் ராஜமௌலி. 2009 ஆம் ஆண்டு வெளியான 'மாவீரன்' அதைத் தொடர்ந்து 'நான் ஈ' படத்தை இயக்கினார்.

    'பாகுபலி' மற்றும் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் ராஜமௌலி அவரின் மனைவி ரமாவுடன் நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

    அதில் தெலுங்கு பாடலான 'அந்தமைன்னா பிரேமரனி' பாட்டிற்கு நடனமாடியுள்ளனர். அவர்களின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கு பயிற்சி செய்த வீடியோவாகும் இது. ராஜமௌலி இதில் குழந்தைப் போன்று முக பாவனைக் கொடுத்து மிக அழகாக ஆடியுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சமீப காலமாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வந்தது
    • மேலை நாடுகளில் ப்ரி நப்ஷல் ஒப்பந்தம் என்பது பரவலான ஒன்று

    அமெரிக்காவை சேர்ந்தவர் 41 வயதாகும் பிரபல பாடகியான ப்ரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears). 1990களில் இருந்தே 'பாப் இசையின் ராணி' என வர்ணிக்கப்படும் இவரது இசைக்கு உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    இவரும் ஸாம் அஸ்கரி (Sam Asghari) எனும் நடிகரும் 5 வருட காலம் ஒருவரையொருவர் விரும்பி வந்தனர். பிறகு 2022ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சமீப காலமாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வந்தது.

    இந்நிலையில் தங்களுக்கிடையே 'தீர்க்க முடியாத' கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளதாகவும், அதனால் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் அஸ்கரி தெரிவித்தார். இதனை தொடர்ந்து இருவரும் கடந்த ஜூலை 28 முதல் பிரிந்து விட்டதாக அறிவித்து, அஸ்கரி நேற்று விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

    மேலும் ஈட்டு தொகையையும், வழக்கறிஞர் கட்டணத்தையும் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் தான் தர வேண்டும் என்று தனது மனுவில் கோரியுள்ளார்.

    விவாகரத்து கோரும் தம்பதியினருக்கு சொத்து பிரிவினை செய்யும் போது சிக்கல்கள் ஏற்படுவதனால், விவாகரத்து கிடைக்கும் காலம் நீள்வதும், இதனால் அவர்களின் எதிர்கால திட்டங்கள் தாமதமடைவதும் நடந்து வந்தது. இதனை தவிர்க்க திருமணத்திற்கு பிறகு ஒருவேளை விவாகரத்து ஏற்பட்டால், அதற்கு பிறகு பிரித்து கொள்ள வேண்டிய சொத்துக்கள் மற்றும் தங்கள் முன்னாள் மணத்துணை குறித்து எப்போதும் வெளியில் கருத்து கூறாமல் இருப்பது உள்ளிட்ட பல அம்சங்களை இணைத்து மேலை நாடுகளில் திருமணத்திற்கு முன்பாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.

    'ப்ரி நப்ஷல் ஒப்பந்தம்' (pre-nuptial agreement) எனும் இதனை ப்ரிட்னி வலுவாக செய்திருப்பதாகவும் அதனால் விவாகரத்திற்கு பிறகும் தனது சொத்துக்களை காப்பாற்றி கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ப்ரிட்னி ஸ்பியர்ஸின் சொத்து மதிப்பு சுமார் ரூ.498 கோடி ($60 million) ஆகும்.

    பிரபலமானவர்களின் விவாகரத்து வழக்குகளை நடத்தும் லாரா வாஸ்ஸரை தனது தரப்பு வழக்கறிஞராக ப்ரிட்னி நியமித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரிட்னியின் புகைப்படங்களில் அவர் திருமண மோதிரத்தை அணியாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

    அவரது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை எவ்வாறு அவர் அமைத்து கொள்ள போகிறார் என்பதை அறிந்து கொள்ள அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

    • அங்க முத்து (வயது 80). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி மேனாவுடன் வசித்து வருகிறார்.
    • அதிகாலை 2 மணிக்கு புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.92 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்க வல்லி அருகே உள்ள நடுவ லூரை சேர்ந்தவர் அங்க முத்து (வயது 80). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி மேனாவுடன் வசித்து வருகிறார்.

    இவரது வீட்டில் கடந்த 1-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.92 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்ற னர். இதுகுறித்து கெங்க வல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில் ஆத்தூர் அருகே உள்ள அம்மா பா ளையத்தை சேர்ந்த வெங்க டேஷ் (29), கொள்ளை யடித்தது தெரிய வந்தது. அவரிடம் நகைகளை மீட்டு தொடர்ந்து விசாரித்தனர்.

    இதில், அவர் மீது சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், புதுக் கோட்டை, திருச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட் டங்களில் 65 திருட்டு வழக் குகள் இருப்பது தெரியவந் தது. இதையடுத்து வெங்க டேசை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×