என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "methamphetamine"

    • படகில் இருந்தவர்கள் ஏராளமான மூட்டைகளை கடலுக்குள் தள்ளி விட்டு தப்பி ஓட்டம்.
    • பெரும்பாலானவை மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருட்கள்.

    அகமதாபாத்:

    குஜராத் கடலோர பகுதியில் கடலோர பாதுகாப்பு படை வீரர்களும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் ஒருங்கிணைந்து ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கமாகும்.

    நேற்று அவர்கள் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது அரபிக் கடல் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து கப்பலில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடலோர காவல் படையினரும், தீவிரவாத தடுப்பு படையினரும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும் படி வந்த ஒரு படகை நிறுத்த உத்தரவிட்டனர்.

    ஆனால் அந்த படகு நிற்காமல் தப்பிச் சென்றது. அந்த படகில் இருந்தவர்கள் ஏராளமான மூட்டைகளை கடலுக்குள் தள்ளி விட்டு விட்டு படகை வேகமாக செலுத்தி தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து கடலோர காவல் படையினர் அந்த கடல் பகுதியில் குதித்து ஆய்வு செய்தனர். அப்போது பல மூட்டைகள் கிடைத்தன. அவற்றை கப்பலுக்கு கொண்டு வந்து பார்த்த போது மூட்டைக்குள் போதைப் பொருள் பொட் டலங்கள் இருப்பது தெரிய வந்தது.

    300 கிலோ அளவுக்கு அந்தப் போதைப் பொருட்கள் இருந்தன. அதில் பெரும்பாலானவை மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருட்கள் என்று தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1,800 கோடி என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

    பாகிஸ்தான் போதைப் பொருள் வியாபாரிகள் இவற்றை இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விற்ப தற்காக படகில் கடத்திக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    • ஏற்கனவே 2 முறை போதைப் பொருட்களை கடத்தி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
    • பிடிப்பட்ட நபர்கள் ஜாபர் சாதிக்குடன் அரசியல் ரீதியான தொடர்பில் இருந்தார்களா?

    சென்னை:

    சென்னையில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் போதைப் பொருட்கள், கடத்தலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு மெத்தா பெட்டமைன் போதைப் பொருட்களை கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசூல் ரகுமான், இப்ராகிம் மற்றும் சென்னையை சேர்ந்த மன்சூர் ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, 70 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'மெத்தாம்பெட்டமைன்' போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.

    சென்னை அருகே செங்குன்றம் பகுதியில், குடோன் ஒன்றில் போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த 7 கிலோ மதிப்பிலான மெத்தா பெட்டமைன் போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். போலீசார் அதன் பின்னணிகளை பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இதில் கைதான இப்ராகிம் தி.மு.க. பிரமுகர் என்பது தெரிய வந்துள்ளது.

    இவர் அந்த கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ளார். இந்த கும்பல் ஏற்கனவே 2 முறை போதைப் பொருட்களை கடத்தி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கடத்தப்படும் போதைப் பொருட்களை இங்கிருந்து பஸ் மற்றும் கார்களில் ராமநாதபுரத்துக்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து கடல் வழியாக படகில் இலங்கைக்கு கடத்தியதையும் கண்டுபிடித்துள்ளனர்.

    டெல்லியிலிருந்து போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் இருந்து மெத்தா பொட்டமைன் போதைப் பொருள்தான் சிக்கியது என்றும் இதையடுத்து சென்னையில் தற்போது பிடிபட்டுள்ள 3 பேருக்கும், ஜாபர்சாதிக்குக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிப்பட்ட நபர்கள் ஜாபர் சாதிக்குடன் அரசியல் ரீதியான தொடர்பில் இருந்தார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து.
    • 700 கிலோ கடத்தல் மெத்தபெட்டமைனை கைப்பற்றியுள்ளன.

    குஜராத்தில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து, 700 கிலோவுக்கும் அதிகமான மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த பாதுகாப்பு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "போதையில்லா பாரதத்திற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையைப் பின்பற்றி, இன்று நமது ஏஜென்சிகள் ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து, குஜராத்தில் சுமார் 700 கிலோ கடத்தல் மெத்தபெட்டமைனை கைப்பற்றியுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

     


    உளவுத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட தகவலின் பேரில், சாகர் மந்தன் 4 என்ற பெயரில் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தேடுதல் வேட்டையின் போது, சந்தேகத்திற்குரிய வகையில் படகு ஒன்று கடற்படையால் அடையாளம் காணப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டது.

    அதன்பிறகு அந்த படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 700 கிலோ மெத்தாம்பெட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டு, கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையை தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய கடற்படை மற்றும் குஜராத் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு படை ஆகியவை இணைந்து மேற்கொண்டன.

    • பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
    • பயன்படுத்தும் அளவை பொறுத்து மணிக்கணக்கில் போதையில் மிதக்க முடியும்.

    இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் போதைப் பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    சிகரெட், மது ஆகிய போதை பழக்கங்களையெல்லாம் தாண்டி கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் சமீபகாலமாக புதிதாக மெத்தபெட்டலைன் போதைப் பொருளின் பழக்கம் இளம் தலைமுறையினரை அதிகம் தொற்றிக் கொண்டுள்ளது.


    பவுடர் வடிவிலான இந்த போதைப் பொருள் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டு கல்லூரி மாணவர்கள், படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோரிடையே விற்பனை செய்வது அதிகரித்துள்ள நிலையில் சென்யைில் வாலிபர்கள் சிலர் அதனை தாங்களாகவே தயாரித்திருப்பதும் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து மட்டுமின்றி பெங்களூரில் இருந்தும் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் அதிக அளவில் கடத்தி வரப்படுவதும் தெரிய வந்துள்ளது.

    உப்பு போன்ற தோற்றத்தில் இருக்கும் மெத்த பெட்டமனை வாலிபர்களும், இளம்பெண்களும் நுகர்ந்து போதை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதனை சூடுபடுத்தி புகையாக மாற்றி போதை ஏற்படுத்திக் கொள்பவர்களும் உண்டு.

    பயன்படுத்தும் அளவை பொறுத்து மணிக்கணக்கில் போதையில் மிதக்க முடியும் என்பதால் இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் அதன் பயன்பாடு பரவலாகவே இருந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சில ரசாயனங்களை கொண்டு எளிதாக தயாரித்து விடக்கூடிய போதைப் பொருளாக இருப்பதால் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


    கஞ்சா போன்று பயிரிட்டு வளர்க்க வேண்டியது இல்லை. நினைத்த நேரத்தில் தயாரித்து விடலாம் என்பதே இதன் புழக்கம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

    தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மீனா என்ற நடிகை போதைப் பொருள் விற்ற வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவரை போன்று கடந்த 3 மாதங்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மெத்தபெட்டமைன் போதைப் பொருள் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சித் தகவலையும் போலீசார் வெளியட்டுள்ளனர்.

    பாலியல் அழகிகளை அழைத்துச் சென்று அங்கு உல்லாசமாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் மெத்தபெட்டமின் போதைப் பொருளை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. இதனை பயன்படுத்தி இருப்பவர்களை எளிதாக கண்டு பிடிக்க முடியாது.

    கண்களை கூர்ந்து நோக்கினால் ஓரளவுக்கு கண்டு பிடிக்க முடியும். மற்றபடி அதனை பயன்படுத்தி இருப்பவர்கள் போதையில் மிதந்தாலும் வெளியில் தெரியாது.

    ஆனால் அவர்கள் உள்ளுக்குள் முழு போதையை உணர்ந்து கொண்டிருப்பார்கள். இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த போதிலும் பல இளைஞர்கள் அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் போதையின் பாதையில் பயணிப்பதாக தெரிவித்துள்ள போலீசார் இதனை கட்டுப்படுத்த பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் போதைப் பொருட்களின் பயன்பாடு குறித்து எடுத்துக் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மெத்தபெட்டமின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 2 போலீசாரும் சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பின்னணி பற்றி விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் செக்ஸ் உணர்வை தூண்டும் வகையிலும் மெத்தபெட்டமின் போதைப் பொருள் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

    இதன் காரணமாகவே இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை மெத்தபெட்டமின் போதைப் பொருள் கட்டிப்போட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் இருந்து அவர்களை விடுவிக்க தேவையான கூடுதல் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    சென்னை மாநகர போலீசாரும் அது போன்று அதிரடி காட்டி வந்த போதிலும் மெத்தபெட்டமினை கட்டுப்படுத்துவது போலீசுக்கு பெரிய சவாலாகவே மாறிப்போய் உள்ளது.

    • போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் போலீசார்கள் மீதும் கடும் நடவடிக்கை.
    • போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை அடியோடு ஒழிப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து தனிப்படை போலீசார்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் போதை பொருள் விற்றது தொடர்பாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றிய சமீர், ஆனந்த், ஜேம்ஸ் ஆகிய 3 போலீசார்களை கடந்த சிலநாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இதில் ஜேம்ஸ் என்பவர் தி.நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றியவர் ஆவார்.

    போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் போலீசார்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த அருண்பாண்டியன் என்ற போலீஸ்காரரும் நேற்று போதைப்பொருள் விற்ற வழக்கில் சிக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சமீபத்தில் காரில் போதைப்பொருள் கடத்தி வந்தது தொடர்பாக பெரம்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம், அசாம் மாநிலத்தை சேர்ந்த பாத்திமா பேகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸ்காரர் அருண்பாண்டியன் தங்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப் பொருளை விற்றதாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து தான் அருண்பாண்பாண்டியன் சிக்கி உள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல்வேறு தகவல்கள் வெளியானது.

    அருண் பாண்டியன் வண்ணாரப்பேட்டை போலீஸ்நிலையத்தில் கோர்ட்டு வழக்குகள் தொடர்பான பணிகளை கவனித்து வந்தார்.

    கடந்த 2022-ம் ஆண்டு பாலசுப்பிரமணியன் மீது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப் பொருள் வழக்கு உள்ளது. இதுதொடர்பாக பாலசுப்பிரமணியம் கோர்ட்டுக்கு வந்து சென்றபோதுதான் போலீஸ்காரர் அருண் பாண்டியனுடன் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நெருக்கும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட மெத்தப்பட்டமைன் போதைப்பொருளை போலீஸ்காரர் அருண் பாண்டியன் அதிகாரிகளுக்கு தெரியாமல் பாலசுப்பிரமணியனுக்கு விற்றது தெரிந்தது.

    இதுவரை சுமார் 2 கிலோ மெத்தப்பட்டமைனை விற்று ரூ.16 லட்சம் வரை பணம் பெற்று இருப்பது தெரியவந்தது.

    இந்த போதைப்பொருள் விற்பனை தொடர்பாக சாய்தீன் அசாம், முசாபீர் ஆகிய மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாதவரத்தில் பிடிபட்ட போதைப்பொருள் கும்பலிடம் இருந்து 5 நாட்டுத்துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலோடு தொடர்பு வைத்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சென்னையில் போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனையை தடுக்க தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கைது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதவரத்தில் ரூ.16 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்ப்டடனர். இவர்கள் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்பனை செய்ததாகவும் தெரிய வந்தது.

    இந்நிலையில் மாதவரத்தில் பிடிபட்ட போதைப்பொருள் கும்பலிடம் இருந்து 5 நாட்டுத்துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி 5 நாட்டு துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள், 4 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

    இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலோடு தொடர்பு வைத்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    போதைப்பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த பெரும்பாக்கம் ராஜா, சத்யசீலன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

    போதைப்பொருள் விற்பனை மட்டுமின்றி ஆயுதங்கள் விற்பனையிலும் ஈடுபட்டார்களா? எங்கிருந்து துப்பாக்கி வாங்கினர் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோதனையின் போது மெத்தபெட்டமைன் நிரப்பிய 21 ஊசிகள் இருந்தது.
    • கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருக்கும் சிலர் போதை ஊசி மூலம் மெத்தபெட்டமைன் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வடக்கு போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சோதனை நடத்தினர். அதில் ஒரு அறையில் 5 பேர் தங்கி இருந்தனர். அவர்களிடம் போலீசாா் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    மேலும் அவர்கள் தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தியபோது மெத்தபெட்டமைன் நிரப்பிய 21 சிரஞ்சுகள் (ஊசிகள்) இருந்தது தெரியவந்தது.

    மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருப்பூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(வயது 43), மதுரை சி.எம்.ஆர்.ரோடு பகுதியை சேர்ந்த அசோக்(32), திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த ராஜவேலு(29), திருப்பூர் வீரபாண்டி பிாிவு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(23), தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(27) என்பதும் இவர்கள் விலை உயர்ந்த மெத்தபெட்டமைன் என்ற போதை பொருளை வாங்கி வந்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 21 சிரஞ்சுகள் மற்றும் 5 கிராம் மெத்தபெட்டமைனையும் பறிமுதல் செய்தனர்.

    விலை உயர்ந்த இந்த போதை பொருள் இவர்களுக்கு எங்கு இருந்து கிடைத்தது, போதை பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் யார்-யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பால்தேஜ் சிங்கின் பெயர் அடிபட்டது.
    • ஒருவருக்கு உடனடி ஆற்றல், உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

    1984 இல் பிரதமர் அலுவலக வளாகத்தில் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங்.

    இதில் சத்வத் சிங்கின் மருமகன் பால்தேஜ் சிங்கிற்கு (32) நியூசிலாந்து நாட்டில் தற்போது 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்தில் 2023 இல் மெத்தபெட்டமைன் உட்கொண்டதால் 21 வயது இளைஞர் ஒருவர் இறந்தார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பால்தேஜ் சிங்கின் பெயர் அடிபட்டது.

    இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் பால்தேஜ் சிங் 700 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டார். மேலும் மெத்தபெட்டமைன் கடத்தல் நெட்வொர்க்கிற்கு அவர் மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

    இந்நிலையில் இதுதொடர்பாக நடந்து வந்த விசாரணை முடிவடைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

     

    மெத்தபெட்டமைன் என்றால் என்ன? 

    இது "மெத்" அல்லது "படிக மெத்" என்றும் அழைக்கப்படுகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) பாதித்து மூளையில் டோபமைனின் அளவை அதிகரித்து, ஒருவருக்கு உடனடி ஆற்றல், உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

    இது பழக்கமாக மாறி ஆபத்து விளைவிக்கக்கூடியது. இதன் பயன்பாடு, மனநல கோளாறுகள், இதயப் பிரச்சினைகள், தூக்கக் கலக்கம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி மரணத்துக்கு வழிவகுக்கும்.    

    ×