search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure of drugs"

    • நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பி க்கப்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்
    • நீதிமன்றத்தில் பிறப்பிக்கப் பட்ட வாரண்ட்டுகள் 17 நபர் வாரன்ட்டில் ஆஜர் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சிறப்பு அதிரடி வேட்டையில் மது, குட்கா, நீதிமன்றத்தால் பிடியானை பிரிக்கப்பட்ட குற்றவாளிகள், ரவுடிகள் நன்னடத்தை பிணை சான்று மற்றும் வழக்குகளின் தலைமறைவு எதிரிகள் இன்று மாவட்ட அளவில் சிறப்பு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பி க்கப்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப் பட்ட வாரண்ட்டுகள் 17 நபர் வாரன்ட்டில் ஆஜர் செய்யப்பட்டது. நன்னடத்தை பிணை சான்று பெற 40 பேருக்கு அழைப்பு விடுத்து இன்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ரவுடிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 வழக்குகள் பதியப்பட்டு 10 பேர் கைது. சாராய வழக்குகளில் 206 லிட்டர் பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

    • வாலிபர் கைது
    • ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா சிக்கியது

    ஆரணி:

    ஆரணி அருகே களம்பூர் பகுதியில் குட்கா ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டன.

    இதன் எதிரொலியால் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் களம்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையில் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது களம்பூர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் குட்கா போன்ற போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு வரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×