search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதை பொருள் பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை படத்தில் காணலாம்.

    வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதை பொருள் பறிமுதல்

    • வாலிபர் கைது
    • ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா சிக்கியது

    ஆரணி:

    ஆரணி அருகே களம்பூர் பகுதியில் குட்கா ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டன.

    இதன் எதிரொலியால் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் களம்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையில் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது களம்பூர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் குட்கா போன்ற போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு வரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×