என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    2025 REWIND: அமரிக்கா முதல் ஈரான் வரை..  உலக நாடுகளை உலுக்கிய அரசியல் படுகொலைகள்!
    X

    2025 REWIND: அமரிக்கா முதல் ஈரான் வரை.. உலக நாடுகளை உலுக்கிய அரசியல் படுகொலைகள்!

    • உட்டா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

    2025-ஆம் ஆண்டு உலக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படுகொலைகளால் நிரம்பி உள்ளது.

    சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவிய இந்தக் கொலைகள் குறித்த செய்திகள், உலகில் அரசியல் வன்முறையின் ஒரு புதிய, ஆபத்தான சகாப்தத்தை உணர்த்துகின்றன. அவ்வாறாக இந்தாண்டு நடந்த 5 அரசியல் படுகொலைகளை இங்கு காண்போம்.

    அமெரிக்கா:

    குறிப்பாக உலக வல்லரசான அமெரிக்காவில் நிகழ்ந்த இரு முக்கிய கொலைகள், நாட்டில் உச்சக்கட்டத்தை அடைந்த சித்தாந்தப் பிளவை அம்பலப்படுத்தின.

    சார்லி கிர்க் கொலை: செப்டம்பர் மாதம், டிரம்ப் உடைய தீவிர ஆதரவாளரான பிரபல பழமைவாத அரசியல் ஆர்வலரும் 'டேர்னிங் பாயின்ட் USA' அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.


    31 வயதே ஆன இவரது மரணம், வலதுசாரி மற்றும் இடதுசாரி சித்தாந்தங்களுக்கிடையில் வளர்ந்து வரும் வெறுப்பைக் குறிக்கும் ஒரு அரசியல் நிகழ்வாக மாறியது.

    மெலிசா ஹார்ட்மேன் படுகொலை: மினசோட்டா மாநிலத்தின் ஹவுஸ் சபாநாயகர் எமரிடா மெலிசா ஹார்ட்மேன், ஜூன் மாதம் தனது கணவருடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.


    ஜனநாயக கட்சி வட்டாரங்களில் செல்வாக்கு மிக்க நபராக இருந்த இவரது மரணம், உள்ளூர் அரசியலை உலுக்கியதுடன், அரசியல் தலைவர்களின் பாதுகாப்புக் குறித்து தேசிய அளவில் விவாதத்தை எழுப்பியது.

    கொலம்பியா:

    கொலம்பியா நாட்டில், 2026 அதிபர் தேர்தல் வேட்பாளரும் செனட்டருமான மிகைல் உரைபே டர்பே-இன் மரணம் வளர்ந்து வரும் வன்முறை அரசியலின் மற்றொரு சான்று.


    ஜூன் மாதம் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சுடப்பட்ட மிகைல், ஆகஸ்ட் மாதத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு, கொலம்பியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் களத்தையே அடியோடு மாற்றி அமைத்தது.

    ஈரான்:

    ஜனவரி மாதம், ஈரானின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அலி ரஸினி மற்றும் முகமது மோகிசே ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.


    அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து வந்த இவர்களின் படுகொலை அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    உக்ரைன்:

    உக்ரைனிய பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபிய், ஆகஸ்ட் மாதம் லிவிவ் நகரில் கூரியர் வேடமிட்ட ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏற்கனவே ரஷியாவுடன் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இந்த அரசியல் கொலை மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.


    2025-இல் நிகழ்ந்த இந்த ஆறு படுகொலைகளும் சில நாடுகளின் சம்பவங்கள் என்ற எல்லைகளைத் தாண்டி, சித்தாந்தங்களுக்கிடையே வளர்த்து வரும் வெறுப்பு மற்றும் மோதலை எடுத்துக் காட்டுகிறது.

    இவை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு தீவிர எச்சரிக்கை மணியை ஒலிப்பதாக அமைந்துள்ளது.

    Next Story
    ×