search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spread"

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் சேலத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.
    • போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் துணை மேயர் சாரதா தேவி, கமிஷனர் (பொறுப்பு) அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் கவுன்சிலர் இமயவரம்பன் பேசுகையில் பட்டியலின மக்களுக்கு திருமணம் நடத்த சேலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேயர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    அந்த மண்டபத்தின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் சேலத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.

    அதற்கு பதிலளித்து மேயர் ராமச்சந்திரன் பேசுகையில் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கவுன்சிலர் திருஞானம் பேசுகையில் எனது வார்டில் மழை நீர் அதிக அளவில் தேங்குகிறது. மேலும் அம்மாபேட்டையில் இருந்து டவுன் வரை சாலையோர கடைகள் அதிக அளவில் உள்ளன. இதனால் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் மூர்த்தி பேசுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடிகள் வெகு தூரத்தில் உள்ளன. இதனால் அந்தந்த பகுதி மக்களுக்கு அருகிலேயே வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் சையத் மூசா பேசுகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். இதற்கு சாக்கடை நீரும், மழை நீரும் அதிகளவில் தேங்குவது தான் காரணம். அதனை சீரமைக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் பி.எல்.பழனிச்சாமி பேசுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட மணியனூர் பகுதியில் சுடுகாடு தண்ணீர் மற்றும் கழிவறை தண்ணீர் அதிக அளவில் தேங்குகிறது. இதனால் மக்கள் தவித்து வருகிறார்கள். நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் விபத்தும் அடிக்கடி நடக்கிறது, சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனையும் சீரமைக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் ஏ.எஸ்.சரவணன் பேசுகையில் களரம்பட்டி 4-வது தெருவில் சாலை, சாக்கடை வசதி, பாலப்பணி செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 45-வது கோட்டத்தில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். 56-வது வார்டு கலைஞர் நகரில் 4-வது வார்டு மற்றும் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். 60 வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும். அப்போது தான் சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக திகழும் என்றார்.

    கவுன்சிலர் கோபால் பேசுகையில் அம்பாள் ஏரி ரோடு கடந்த 1 1/2 ஆண்டாக மிக மோசமான நிலையில் உள்ளது. தாதகாப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் தண்ணீர் வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குடி தண்ணீர் வசதி வழிப்பாதைகள் அமைக்க வேண்டும் என்றார்.

    இதை தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

    • சோதனை சாவடி பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருக்கக்கூடிய பகுதியாகும்.
    • ஆண் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடி கொண்டிருந்தது.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்து வரட்டுப்பள்ளம் அணை உள்ளது.

    இந்த அணையின் அருகே உள்ள ேசாதனை சாவடி பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருக்கக்கூடிய பகுதியாகும். இந்த பகுதியில் மயில்கள் அதிக அளவில் உள்ளது. அவ்வப்போது மயில்கள் அந்த பகுதியில் உள்ள விலை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும் சேதப்படுத்தியும் வருகிறது.

    இந்த நிலையில் மாலை நேரத்தில் ஆண் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடி கொண்டிருந்தது. இதனை அந்தப் பகுதியில் சென்றவர்கள் பார்த்து ரசித்தனர்.

    மேலும் தங்களது செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தனர். மயில் தோகை விரித்து ஆடினால் மழை வரும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். அதே போல் மயில் ேதாகை விரித்து ஆடியதும் அந்தப் பகுதியில் சிறிது நேரம் மழையும் தூறியது.

    • மாவட்ட நிர்வாகம் சார்பில், நடமாடும் வாகன பரிசோதனை மற்றும் கண்காணித்தல், தகுந்த சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்பட்டோர் எணிக்கை 1 ஆக குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா முதல் அலை, 2-வது அலையின்போது ெதாற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு நட வடிக்கைகளை கடை பிடித்தனர்.

    மேலும் மாவட்ட நிர்வா கம் சார்பில், நடமாடும் வாகன பரிசோதனை மற்றும் கண்காணித்தல், தகுந்த சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பரவல் முற்றிலும் தடுக்கப்பட்டது. மீண்டும் இந்நோய் தலை தூக்காமல் இருக்க சுகாதார துறை சார்பில் பொதுமக்க ளுக்கு அவ்வபோது பல்வேறு அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா சற்று தலை தூக்கியது. சேலத்தில், தின மும் 20, 25 வீதம் என பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சிகிச்சை, பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்பட்டோர் எணிக்கை 1 ஆக குறைந்துள்ளது. அதுபோல் ஆஸ்பத்திரியில் இருந்து ஒருவர் குணமாகி வீடு திரும்பி உள்ளார். தற்போது 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மேலும் 32 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • வெளி மாவட்டங்களில் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    கடலூர்: 

    கொரோனாவின் தாக்கம் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதி முதல் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை மாவட்டத்தில் 75 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சையில் இருந்த 37 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை யில் கொரோனா பாதிப்பின் காரணமாக 221பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள னர். வெளி மாவட்ட ங்களில் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்றைய பாதிப்பில் 24 பேர் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனாவால் ஒரே நாளில் 13 பேர் பாதிக்கப்பட்டனர்.
    • மகுடஞ்சாவடியில் 4 பேர் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் தற்போது வேகம் எடுத்துள்ளது.

    நேற்று முன்தினம் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது . இதில் சேலம் மாநகராட்சியில் மட்டும் 5 பேருக்கும், எடப்பாடி, நங்கவள்ளி, மேட்டூர் பகுதிகளில் தலா ஒருவருக்கும், மகுடஞ்சாவடியில் 4 பேர் உள்பட 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் இனி வரும் நாட்களில் மேலும் வேகமாக ெகாரேனா பரவ வாய்ப்பு உள்ளது. நேற்று 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மேலும் 39 பேர் ஆஸ்பத்திரிகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அதிகாரிகள் வலியுறுத்தல்

    இனி வரும் நாட்களில் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும கடை பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். 

    சென்னிமலை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத் துறையினர் கடந்த 3 நாட்களாக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட மேற்கு தலவுமலை, சல்லிமேடு, அம்மன்கோவில், கே.சி., வலசு சுற்றுவட்டார பகுதியில் திடீரென மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

    இதில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு கால் மூட்டுகள் வீங்கி அதிக வலி வருகிறது.

    இதனால் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத் துறையினர் கடந்த 3 நாட்களாக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தியும் கொசு மருந்தடித்தும் சாக்கடைகளை சுத்தப்படுத்தியும் வருகிறார்கள். இருந்தாலும் காய்ச்சல் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பரவி வருகிறது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாயம் மற்றும் நெசவு சார்ந்த கூலித் தொழிலாளர்கள். அவர்கள் காய்ச்சலால் சிகிச்சைக்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

    பாதிக்கப்பட்ட மக்கள் சென்னிமலை, அரச்சலூர், நத்தக்கடையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தஞ்சம் அடைகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு அதிக செலவு செய்வதாலும் வேலைக்கு செல்லாமல் முடக்கி விடுவதாலும் ஏழை கூலிகளும், நடுத்தர விவசாய மக்களும் பொருளாதர ரீதியாக பாதிப்படைகிறார்கள்.

    எனவே மாவட்ட சுகாதாரத்துறை காய்ச்சல் கட்டுப்படும் வரை இந்த பகுதிகளில் சிறப்பு சிகிச்சை முகாம் அமைத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பனிப்பொழிவு, பருவ நிலை மாற்றம் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்துள்ளது. #Fever
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவியது. இதில் பலர் பாதிக்கப்பட்டனர்.

    காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டனர். ஊருக்கு ஊர் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    இதனால் காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தெருவுக்கு தெரு கிளினிக்கில் தினமும் காலை, மாலை நேரங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் சிலருக்கு மூட்டு வலியுடன் காய்ச்சல் வருவதால் டெங்கு அறிகுறி இருப்பதாக கூறி ரத்த பரிசோதனை செய்து வருகின்றனர்.

    ராயப்பேட்டை, மயிலாப்பூர், மடிப்பாக்கம், பல்லாவரம், கோயம்பேடு, அமைந்தகரை, திருவொற்றியூர் உள்பட பல பகுதிகளில் காய்ச்சலால் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பனிப்பொழிவு, பருவ நிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காரணம் சொல்லப்படுகிறது.

    ஆனால் அரசு ஆஸ்பத்திரிகளில் விசாரித்ததில் காய்ச்சல் பாதித்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்தனர். #Fever
    சென்னையில் கொசு நோய் பரப்ப காரணமாக இருந்ததாக 605 இடங்களுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. #ChennaiCorporation #MosquitoDisease
    சென்னை:

    சென்னையில் கொசு நோய் பரப்ப காரணமாக இருந்ததாக 605 இடங்களுக்கு மாநகராட்சி ரூ.24 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், காலி இடங்களில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் கடந்த 3 மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 605 இடங்கள் கொசு நோய் பரப்ப காரணமாக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. காலி இடங்களில் கழிவு நீர் தேக்கம், கொசு உற்பத்தி, டெங்கு காய்ச்சல் நோய் பரப்ப காரணமாக இருந்தது கண்டறியப்பட்டது.

    கொசு, நோய் பரப்ப காரணமாக இருந்த 605 இடங்களுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.24.45 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள வார்டுகளில் 45 வாகனங்களில் கொசுமருந்து, புகையடித்து கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

    இது குறித்து மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சி மண்டல பகுதிகளில் உள்ள வார்டுகளில் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் ஆய்வு பணிகள் செய்து டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் தண்ணீர் தேங்கும் இடங்கள் தண்ணீர் தொட்டிகளில் கொசு முட்டைகள் உற்பத்தியாகாமல் தடுக்க மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. வீடுகள், தெருக்களில் கொசு மருந்து, புகை அடிக்கப்படுகிறது.



    அக்டோபர் மாதம் மட்டும் 325 இடங்கள் கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்தது கண்டறியப்பட்டு ரூ.12.34 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    அம்பத்தூர் பகுதியில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன. அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த தொழிற்சாலைக்கு தலா ரூ.10 ஆயிரம் முதல், 50 ஆயிரம் வரை அபராதம் மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டுள்ளது.

    காலி இடங்களில் பழைய டயர்கள், குப்பைகள், கழிவுகள் அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiCorporation #MosquitoDisease

    செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே நேற்று குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து பெண் அடித்து கொலை செய்யப்பட்டார்.



    இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தை கடத்தல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்தார்.

    போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வதந்தி பரப்புவது குறித்த கண்காணிக்க உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் செய்யாறு பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் பேசிய வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக்கிலும் வேகமாக பரவியது.

    அதில் பேசிய வாலிபர் எனது பெயர் வீரராகவன் (வயது35). செய்யாறு அருகே உள்ள புரிசை கிராமத்தில் இருந்து பேசுகிறேன்.

    செய்யாறு பக்கத்துல அதிகமா குழந்தைகளை கடத்துறாங்க இன்று இரவு பாராசூர் என்ற கிராமத்தில் 2 குழந்தைகளை தூக்கிட்டு போய்ட்டாங்க.

    ஏழியனூரில் வடமாநில கும்பல் 2 குழந்தைகளை கடத்திட்டாங்க. தாங்கல், உத்திரமேரூரில் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். அதனால உங்க குழந்தைளை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும்.

    செய்யாறு பக்கத்துல விநாயகபுரம் என்ற ஊரில் இந்திகாரனுங்க ஐஸ்பெட்டிக்குள் வைத்து குழந்தைகளை தூக்கி சென்றனர். பொதுமக்கள் துரத்தியதால் விட்டுட்டு ஓடிடாங்க.

    இதுவரை செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். அனைவரும் உஷாராக இருங்கள். வேலை முக்கியமில்லை. குழந்தைதான் முக்கியம்.

    குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்க. அனைவரும் உஷாராக இருங்கள். முடிந்த வரை இதனை சேர் செய்து எவ்வாளவு குழந்தைகளை காப்பாற்ற முடியுமோ காப்பாற்றுங்கள் நன்றி என கூறியபடி இந்த வீடியோ பதிவு நிறைவு பெறுகிறது.

    வீரராகவின் வீடியோ செய்யாறு பகுதியில் வேகமாக பரவியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    சமூக வலைதளங்களை கண்காணித்த அணக்காவூர் போலீசார் இந்த வீடியோவை கண்டு திடுக்கிட்டனர்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையிலான போலீசார் புரிசை கிராமத்திற்கு சென்று வீரராகவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


    ×