சேலத்தில் ஒருவருக்கு கொரோனா

மாவட்ட நிர்வாகம் சார்பில், நடமாடும் வாகன பரிசோதனை மற்றும் கண்காணித்தல், தகுந்த சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்பட்டோர் எணிக்கை 1 ஆக குறைந்துள்ளது.
சேலத்தில் ஒருவருக்கு கொரோனா
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா முதல் அலை, 2-வது அலையின்போது ெதாற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு நட வடிக்கைகளை கடை பிடித்தனர்.

மேலும் மாவட்ட நிர்வா கம் சார்பில், நடமாடும் வாகன பரிசோதனை மற்றும் கண்காணித்தல், தகுந்த சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பரவல் முற்றிலும் தடுக்கப்பட்டது. மீண்டும் இந்நோய் தலை தூக்காமல் இருக்க சுகாதார துறை சார்பில் பொதுமக்க ளுக்கு அவ்வபோது பல்வேறு அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா சற்று தலை தூக்கியது. சேலத்தில், தின மும் 20, 25 வீதம் என பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சிகிச்சை, பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்பட்டோர் எணிக்கை 1 ஆக குறைந்துள்ளது. அதுபோல் ஆஸ்பத்திரியில் இருந்து ஒருவர் குணமாகி வீடு திரும்பி உள்ளார். தற்போது 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com