கடலூர் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மேலும் 32 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.வெளி மாவட்டங்களில் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில்  மேலும் 32 பேருக்கு கொரோனா
Published on

கடலூர்: 

கொரோனாவின் தாக்கம் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதி முதல் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை மாவட்டத்தில் 75 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சையில் இருந்த 37 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை யில் கொரோனா பாதிப்பின் காரணமாக 221பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள னர். வெளி மாவட்ட ங்களில் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்றைய பாதிப்பில் 24 பேர் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com