என் மலர்
நீங்கள் தேடியது "Dengue fever"
- டெங்கு வைரஸ், ஏடிஸ் (Aedes) எனும் கொசு வகை மூலம் பரவுகிறது
- குணமடைந்தவர்களுக்கு மீண்டும் இந்நோய் வந்தால் உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கும்
பருவநிலை மாற்றங்களினால் பல நாடுகளில் அதிக வெப்பம் மற்றும் சீரற்ற மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இது கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமான சூழ்நிலை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அதிக வெப்பம் மற்றும் அதிக மழைப்பொழிவு தோன்றும் நாடுகளில், கொசுக்களின் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது.
டெங்கு வைரஸ், ஏடிஸ் (Aedes) எனும் கொசு வகை மூலம் பரவுகிறது.
1960களிலிருந்தே இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம், ஒவ்வொரு வருடமும் டெங்கு காய்ச்சலில் மக்களை இழந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூலையிலிருந்து செப்டம்பர் மாதம் வரை இந்த காய்ச்சலில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அந்நாட்டில் அதிகமாக இருக்கும். 2000 தொடக்கத்திலிருந்து டெங்கு பரவலும் உயிரிழப்புக்களும் அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. சமீப சில வருடங்களாக குளிர் காலங்களிலும் அந்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அந்நாட்டு பொது சுகாதார இயக்குனரகம், இவ்வருடம் ஒரு லட்சம் பேருக்கும் மேல் அங்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 1006 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. உயிரிழந்தவர்களில் 112 பேர் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என்பதும் பிறந்த குழந்தைகளும் அதில் அடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு முறை டெங்கு காய்ச்சல் வந்து சிகிச்சை பெற்று குணமானவர்களுக்கு மீண்டும் இக்காய்ச்சல் வந்தால் உயிரிழக்கும் அபாயம் அதிகம் என வங்காள தேச இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
வங்காள தேசத்தில், சென்ற வருடம், ஆண்டு முழுவதிற்குமான எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சலுக்கு 281 பேர் பலியாகியிருந்தனர். இவ்வருடம் முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே உயிர் பலி ஆயிரத்தை தாண்டி விட்டது.
அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள டெங்கு வார்டுகள் நிரம்பி வழிகிறது. வார்டுகளில் கொசு வலைகளுக்கு அடியில் காய்ச்சலுடன் இருக்கும் நோயாளிகளும், அவர்களுக்கு அருகே கவலையுடன் நிற்கும் உறவினர்களையும் காண்பது நாளுக்கு நாள் அதிகரிப்பதால் வங்காள தேச அரசாங்கம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக போராடி வருகிறது.
- திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு, வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை எதிர்கொள்ள தமிழக அரசு துரிதமான நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பரிசோதனைக்கு 3 இடங்களில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம், ஓ.ஆர்.எஸ். கரைசல் தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு தேவையான சத்தான உணவு வழங்கப்படுகிறது. இதில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கொசு கடிக்க கூடாது என்பதற்காக படுக்கையை சுற்றி கொசு வலை அமைக்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் காய்ச்சலுக்காக 23 புற நோயாளிகள் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். அதேபோல் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 52 பேர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 6 பேர் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பொது மக்கள் நல்ல தண்ணீரை மூடி வைக்க வேண்டும்.
- சென்னையில் கை புகை தெளிப்பான், வாகன தெளிப்பான் மூலமாக கொசுவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
சென்னை:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்சனும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அபிநிதி என்ற சிறுமியும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருக்கிறார்கள். டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு தினமும் 30 பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று விடுமுறை தினம் என்பதால் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்து கொள்வதற்காக மக்கள் குவிந்தனர். காய்ச்சலுடன் முகாமுக்கு வந்திருந்த பலருக்கு அது தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
காய்ச்சல் அதிகமாக இருப்பவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சுகாதார துணை ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.
அதுபோன்ற நபர்களுக்கு எந்த மாதிரியான காய்ச்சல் உள்ளது என்று பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னையில் இன்று 45 இடங்களில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்ற காய்ச்சல் முகாமை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
2 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அந்த பகுதியைச் சேர்ந்த மீனவ மக்களும் அந்த வழியாக சென்ற பொதுமக்களும் காய்ச்சல் முகாமில் பங்கேற்று பயன் அடைந்தனர்.
சளித்தொல்லை, இருமலால் பாதிக்கப்பட்டு இருந்த நபர்களும் வந்து சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது.
லேசான காய்ச்சலுடன் வந்தவர்களிடம், 2 அல்லது 3 நாட்கள் வரையில் காய்ச்சல் நீடித்தால் அதன் பின்னரும் காத்திருக்க வேண்டாம். தாமதமின்றி காய்ச்சல் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்று முகாமுக்கு வந்தவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. அப்போதுதான் அது சாதாரண காய்ச்சலா? இல்லை டெங்கு உள்ளிட்ட வேறு வகையான காய்ச்சலா? என்பதை கண்டறிய முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களின் உற்பத்தி குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் காய்ச்சல் முகாம்களில் உரிய விளக்கம் அளித்து செயல்முறை விளக்கத்தை செய்து காட்டும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
வீடுகளில் உள்ள தண்ணீர் பாத்திரங்களை நன்றாக மூடி வைக்க வேண்டும் என்றும், மொட்டை மாடிகள் மற்றும் வீடுகளை சுற்றி உள்ள பகுதிகளில் டயர்கள், தேங்காய் சிரட்டைகள் மற்றும் மழைநீர் தேங்கும் வகையிலான பொருட்கள் கிடந்தால் அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போதுதான் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். இதுதொடர்பான துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. காய்ச்சல் முகாமை தொடங்கி வைத்த பின்னர் மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தலா 3 இடங்கள் வீதம் 45 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ஜனவரி முதல் செப்டம்பர் வரை 3962 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. சென்னையில் இதுவரை 145 பேருக்கு டெங்கு பாதித்து சிகிச்சை பெற்று உள்ளனர், தற்போது 75 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
பொது மக்கள் நல்ல தண்ணீரை மூடி வைக்க வேண்டும். சென்னையில் கை புகை தெளிப்பான், வாகன தெளிப்பான் மூலமாக கொசுவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடையே காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- மாணவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும் பட்சத்தில் அதற்கான சிகிச்சையை வழங்க வேண்டும்.
சென்னை:
அனைத்து மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 1-ந்தேதி முதல் (நாளை) ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.
குறிப்பாக, காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட கிராமங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் இந்த காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடையே காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும் பட்சத்தில் அதற்கான சிகிச்சையை வழங்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக டெங்கு பாதிப்பை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பொது சுகாதாரத்துறை உத்தரவுவிட்டுள்ளது.
அதன்படி, டெங்கு பாதிப்பை கண்காணிக்க 2 இணை இயக்குனர்களும், 7 கூடுதல் இயக்குனர்கள் என மொத்தம் 9 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 45 சுகாதார மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அதிகாரிக்கும் 4 முதல் 5 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- கொசு உற்பத்திக்கு வித்திடும் வகையில் தண்ணீரை அப்புறப்படுத்தாத நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
- சென்னையில், ராஜீவ்காந்தி, ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல, கொசு உற்பத்திக்கு வித்திடும் வகையில் தண்ணீரை அப்புறப்படுத்தாத நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னையில், ராஜீவ்காந்தி, ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. நாள்தோறும் 20 முதல் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் 600-ஐ தாண்டி பதிவாகி உள்ளது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் 866 பேருக்கும், பிப்ரவரி மாதம் 641 பேருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறையின் தீவிர நடவடிக்கைகள் மூலம் டெங்கு பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு குறைந்த அளவில் பதிவாகியது.
அதன்படி, மார்ச் மாதம் 512 பேரும், ஏப்ரல் மாதம் 302 பேரும், மே மாதம் 271 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். பின்னர், இது சற்று அதிகரிக்க தொடங்கி ஜூன் மாதத்தில் 364 பேரும், ஜூலை மாதத்தில் 353 பேரும் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல ஆகஸ்டு மாதத்தில் 535 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து டெங்கு பாதிப்பு கணிசமாக அதிகரித்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் இம்மாதம் 610 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், கடந்த 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ஒரு வாரத்தில் மட்டும் 227 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
நடப்பாண்டில் நேற்று வரை டெங்கு பாதிப்பு 4 ஆயிரத்து 454 ஆக பதிவாகியுள்ளது. டெங்கு பாதிப்புக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டங்களில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், சுழற்சி முறையில் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடவும் அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய தலைவர்உறுதி கூறினார்.
- துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டைச்சாமி நன்றியுரை வழங்கினார்.
தேவகோட்டை
தேவகோட்டை ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் பிர்லாகணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராஜாத்தி நடராஜன். ஆணையாளர் பாலகிருஷ் ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் புவனேசுவரன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் ஒன்றிய தலைவர் பேசுகையில், பொது நிதியிலிருந்து ரூ.4.87 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் 37 ஊராட்சிகளில் நடைபெற்று வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டுமெனஅதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
பல்வேறு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டைச்சாமி நன்றியுரை வழங்கினார்.
- டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.
பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருவேற்காடு நகர் மன்ற தலைவர் மூர்த்தி ஆலோசனையின்படி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா மேற்பார்வையில் துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் ஊழியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா கூறும்போது, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுப்புழு ஆதாரங்களை அழிப்பதற்காக நகராட்சியில் இருந்து 105 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். நூம்பல் பகுதியில் தனியார் தொழிற்சாலை மற்றும் தனியார் பள்ளியில் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததால் ஒரே நாளில் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றார்.
- ஜனவரி மாதம் 866 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலையில் படிப்படியாக குறைந்தது.
- டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் பரவலாக மழை பெய்வதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மழைநீர் தேங்குவதில் இருந்து கொசுக்கள் உற்பத்தி ஆகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கடந்த மாதத்தில் இருந்து படிப்படியாக டெங்கு பாதிப்பு உயர்ந்து வருகிறது. சென்னையில் காய்ச்சலால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஸ்டான்லி, ராஜீவ்காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், கே.கே.நகர் அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு பாதித்து சிகிச்சை பெறுவோர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி தமிழக பொதுசுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதார பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஆனாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 21-ந்தேதி 31 பேரும், 22-ந்தேதி 45 பேரும், 23-ந்தேதி 30 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டனர்.
இதுவே 24-ந் தேதி 28 ஆகவும், 25-ந் தேதி 15 ஆகவும் குறைந்த நிலையில் நேற்று முன்தினம் 41 ஆகவும் நேற்று 37 பேரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி முதல் இந்த மாதம் வரை 4454 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
ஜனவரி மாதம் 866 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலையில் படிப்படியாக குறைந்தது. மீண்டும் ஆகஸ்டில் பாதிப்பு 535 ஆக அதிகரித்தது. இந்த மாதத்தில் இதுவரையில் 610 பேருக்கு டெங்கு பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது.
டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் 4 அல்லது 5 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இணை இயக்குனர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த துணை இயக்குனர்கள் மற்றும் துறை சார்ந்த பணியாளர்களுடன் இணைந்து கொசு ஒழிப்பு பணிகளையும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை கண்டறிந்து அவற்றை அகற்றவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, டெங்கு பாசிட்டிவ் கேஸ் தினமும் 20 முதல் 30 வரை வருகிறது. கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்துள்ளது.
சென்னை, நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து உள்ளது. அங்கு தீவிர கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
- மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் டெங்கு காய்ச்சல் வார்டில் சேர்க்கப்பட்டு தனி கவனம் செலுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு ஒரு பெண் குழந்தை உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி:
தமிழகம் முழுவதும் பருவ நிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற நோய் தொல்லைகளால் அவதிப்பட்டு வந்தனர். மேலும் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தனர்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கொசுப்புழுக்களை அழிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக சிறப்பு டெங்கு காய்ச்சல் வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டும், மேலும் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் 60 படுகைகள் கொண்ட வார்டுகளும் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் டெங்கு காய்ச்சல் வார்டில் சேர்க்கப்பட்டு தனி கவனம் செலுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (45) மற்றும் சுமித்ரா(35) ஆகிய தம்பதியினருக்கு பிரித்திகா (15), தாரணி (13), யோகலட்சுமி (7), அபிநிதி(4), புருஷோத்தமன் 8 மாத கைக்குழந்தை என 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநிதி, புருஷோத்தமன் ஆகிய 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கடந்த 23-ந் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்ததினர்.
இந்நிலையில் யோகலட்சுமி மட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து தற்போது பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகிய 2 குழந்தைகளும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26-ந் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் புருஷோத்தமன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அப்போது அங்கு இருந்த சிறுமியின் பெற்றோர் அபிநிதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து டாக்டர்கள் சிறுமியின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.
திருப்பத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு ஒரு பெண் குழந்தை உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமியின் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் டெங்கு தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- டெங்கு காய்ச்சல் பாதிப்பு யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்தல் வேண்டும்.
- தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புடன் ஒருவர் அனுமதியானால் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
திருப்பூர்,செப்.26-
டெங்கு காய்ச்சல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விடும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகராட்சி, நகராட்சி அளவில், ஏற்கனவே வகைப்படுத்தப்பட்ட தொற்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஹாட்ஸ்பாட் ஆக கண்டறிந்து அப்பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து, காய்ச்சல் பாதித்தவர் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். செல்போன் குழுக்கள் மூலம் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புடன் ஒருவர் அனுமதியானால் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தெரியப்படுத்தாத மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.