search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical teams"

    • புதிய செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு மாநில குழு ஆய்வு நடத்தி ஒப்புதல் வழங்கி வந்தது.
    • மாவட்ட மருத்துவக்குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 18 செயற்கை கருத்தரித்தல் மையங்கள் அமைக்க ஒப்புதல் கேட்டு, பல்வேறு தனியார் மருத்துவமனை நிர்வாகங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் தொழில்நுட்ப ரீதியான மருத்துவ வசதிகள் உள்ளதா, உள்கட்டமைப்பு நிலவரம் குறித்து, மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி, தேசிய மருத்துவம் மற்றும் சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, மூத்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீ வித்யா தலைமையிலான மாவட்ட மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர்.

    குழு அதிகாரிகள் கூறுகையில், புதிய செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு மாநில குழு ஆய்வு நடத்தி ஒப்புதல் வழங்கி வந்தது. தற்போது நடைமுறை மாற்றப்பட்டு மாவட்ட மருத்துவக்குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பித்துள்ள மருத்துவமனைகளில் ஆய்வு நடக்கிறது என்றனர்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
    • 13 ஊராட்சி ஒன்றியங்களில் மருத்துவ குழுவினர் காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் முகாம் நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் :

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. கொசு ஒழிப்பு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 39 மருத்துவ குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் முகாம் நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை மாவட்டத்தில் பெரிய அளவில் டெங்கு பாதிப்பு இல்லை. ஒருசிலர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி அவர்கள் குணமடைந்து விட்டனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறையினர் தீவிர காய்ச்சல் கண்டறியும் முகாம்களை மேற்கொண்டு வருவதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    ×