என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு இந்த ஆண்டு 20 ஆயிரமாக உயரும்- சுகாதாரத்துறை எச்சரிக்கை
    X

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு இந்த ஆண்டு 20 ஆயிரமாக உயரும்- சுகாதாரத்துறை எச்சரிக்கை

    • சாதாரண மருந்துகள் எடுத்து 24 மணி நேரத்துக்குள் குறையாவிட்டால் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும்.
    • நோய் தாக்கியவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் திவலைகள் மூலம் காய்ச்சல் பரவும்.

    சென்னை:

    பருவ கால மாற்றத்தால் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு பகுதியில் காய்ச்சல் பரவுவது வழக்கமாகி விட்டது. கேரளாவில் ஜூன், ஜூலை மாதங்களில் பரவலாக காணப்படுகிறது.

    சென்னையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக அளவில் பரவுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நீடித்தது. இந்த ஆண்டும் காய்ச்சல் மற்றும் சுவாச சம்பந்தமான வைரஸ் தொற்றுக்கள் பரவி வருகின்றன. சாதாரண சளி, காய்ச்சல், இருமல் என்ற அறிகுறிகளுடன் வரும் பலருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    இன்புளூயன்சா வகை காய்ச்சல் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வரும் நிலையில் டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தினசரி 60 முதல் 70 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக சுகாதாரத்துறை கூறுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதுவரை 7 பேர் உயிரிழந்து உள்ளார்கள்.

    வரும் காலங்களில் டெங்கு காய்ச்சல் இன்னும் அதிகரிக்கும் என்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்று கணித்து உள்ளார்கள்.

    இன்புளூயன்சா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், உடல்வலி, சோர்வு காணப்படும்.

    சாதாரண மருந்துகள் எடுத்து 24 மணி நேரத்துக்குள் குறையாவிட்டால் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும். நோய் தாக்கியவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் திவலைகள் மூலம் காய்ச்சல் பரவும். எனவே தும்மும் போதும், இருமும் போதும் வாய், மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். திரவ நிலை உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். மேலும் வீட்டில் உள்ள 'பிரிட்ஜ்' பின்பக்கம் தண்ணீர் வடிந்து தேங்கக்கூடிய தொட்டியை வாரத்தில் ஒரு முறையாவது தூய்மை செய்ய வேண்டும்.

    மொட்டை மாடியில் மழைநீர் தேங்கக் கூடிய வகையிலான பொருள்கள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். அப்போதுதான் 'ஏடிஸ்' கொசு பரவலைத் தடுக்க முடியும். 'ஏடிஸ்' வகை கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பது மக்களிடையே உள்ள பொறுப்பு என்று சுகாதாரத்துறை கூறி உள்ளது.

    Next Story
    ×