என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்- பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தல்
    X

    சென்னையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்- பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தல்

    • ஜனவரி முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 25 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.
    • ஒவ்வொரு வாரமும் 80 வீடுகள் என்ற அடிப்படையில் 2600 ஊழியர்கள் வீடு வீடாக சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    பருவகால மாற்றத்தின் போது டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இந்த ஆண்டு சென்னையில் கடந்த மாதம் வரை 1633 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்டு வரை சராசரி 200 பேருக்குள் இருந்த பாதிப்பு செப்டம்பர் மாதம் 237 ஆக உயர்ந்தது. கடந்த மாதம் 600 ஆக உயர்ந்திருக்கிறது.

    கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும் போது டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2023-ம் ஆண்டு 2029 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அது 2024-ல் 1403 ஆக குறைந்தது. இந்த ஆண்டு சற்று உயர்ந்துள்ளது.

    ஜனவரி முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 25 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.

    டெங்கு பாதித்தவர்கள் பெரும்பாலும் விரைவாக குணம் அடைந்து விடுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    டெங்குவை பரப்பும் கொசுக்களை லார்வா பருவத்திலேயே அழிக்க அவை உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து மருந்துகள் தெளிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு வாரமும் 80 வீடுகள் என்ற அடிப்படையில் 2600 ஊழியர்கள் வீடு வீடாக சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வீடுகளில் தேங்காய் சிரட்டைகள், கழிவு பொருட்களில் தேங்கும் நல்ல தண்ணீரில்தான் இந்த கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே அந்த மாதிரி பொருட்களை அப்புறப்படுத்தி சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கும் படி சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது.

    Next Story
    ×