search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "snowfall"

    • நடைபயிற்சி செல்பவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் என பலரும் அவதிப்பட்டனர்.
    • கும்மிடிப்பூண்டியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று (சனி) அதிகாலை முதல் கடுமையான பனி பொழிவு காரணமாக சாலையில் எதிரே நடந்து செல்பவர்களை கூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது.

    மேக மூட்டம் போல பனியானது சாலைகளை முழுமையாக ஆக்கிரமித்து பனி பிரதேசத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இந்த பனி பொழிவானது, காலை 8 மணியை கடந்தும் சற்றும் குறையவில்லை. இதனால் நடைபயிற்சி செல்பவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் என பலரும் அவதிப்பட்டனர்.

    கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையான சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன. பெரும்பாலான வாகனங்கள் பனி பொழிவு காரணமாக விபத்தை தவிர்க்கும் பொருட்டு சர்வீஸ் சாலையில் சென்றதால் போக்குவரத்தில் கடும் சிரமம் ஏற்பட்டது.

    இது தவிர கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திலும் கடும் பனி பொழிவு காரணமாக புறநகர் ரெயில் பயணிகள் ரெயில்களின் வருகையை கூட தெளிவாக காண முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது விரைவு ரெயில்கள் அப்பகுதியில் செல்கின்றதா? என்பதை கூட அறிய முடியாத நிலை நீடித்தது. கடந்த சில நாட்ளை விட இன்றைய தினம் பனிபொழிவு அதிகமாக காணப்பட்டதால் கும்மிடிப்பூண்டியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    • தற்போது நீர்ப்பனியாக மாறி சாரல் மழைபோல பொழிந்து வருகிறது.
    • புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போல காணப்படுகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-வது வாரத்துக்கு மேல் நீர்ப்பனி கொட்ட தொடங்கும். பின்னர் நவம்பர் மாதம் 2-வது வாரத்துக்கு மேல் உறைபனிக்காலம் ஆரம்பமாகி விடும்.

    இந்த நேரங்களில் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிர் மிகவும் அதிகமாக காணப்படும்.

    அதன்படி இந்தாண்டு வழக்கம்போல நவம்பர் மாதம் தொடங்கிய நீர்ப்பனி, கடந்த மாதம் இறுதி வாரம் முதல் உறைபனியாக கொட்ட தொடங்கியது. இது தற்போது நீர்ப்பனியாக மாறி சாரல் மழைபோல பொழிந்து வருகிறது.

    இதன்காரணமாக ஊட்டியில் அதிகாலை நேரங்களில் புல்வெளிகள், தேயிலை தோட்டம் மற்றும் மலர்ச்செடிகள் கண்ணாடி இழை போல காட்சியளிக்கிறது. மேலும் தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, காமராஜர் சாகர் அணை, சூட்டிங்மட்டம், குதிரைப்பந்தய மைதானம், லவ்டேல் ஆகிய பகுதிகளில் உள்ள புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போல காணப்படுகின்றன.

    தொடர்ந்து தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்ச்செடிகள் மற்றும் அலங்கார செடிகள் பனியில் பாதிக்காமல் இருப்பதற்காக, அங்கு கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாப்பு அரண் அமைக்கும் பணியில் தோட்டக்கலை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பனி அதிகமாக கொட்டி வருவதால், அங்கு பயிரிடப்பட்டு உள்ள தேயிலை செடிகள் மற்றும் மலைக்காய்கறி சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் ஊட்டியில் பனி கொட்டுவதால் அங்கு வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகளை அணிந்து வலம் வருகின்றனர்.

    • கடும் குளிர் காரணமாக அதிகாலை நடைபயிற்சி செல்வோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
    • சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுவதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    பெரும்பாறை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. தற்போது சராசரியாக 7 டிகிரி செல்சியஸ் முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை நிலவுகிறது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். கடும் பனியால் பயிர்களும் பாதிப்படைவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர். நகர் பகுதி மட்டுமின்றி மலை கிராமங்களிலும் பனி வாட்டி வருகிறது.

    கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பூலத்தூர், மங்களம்கொம்பு, கும்பரையூர், மஞ்சள்பரப்பு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், ஆடலூர், பாச்சலூர், பன்றிமலை போன்ற பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெயிலுக்கு ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் காலை 10 மணிக்கு மேல் தான் வெயில் வருகிறது. பெரும்பாலான நேரங்களில் அதுவும் வருவதில்லை. அதே போல் மாலை 4 மணிக்கு மேல் குளிர் அதிகரிக்க தொடங்கி விடுகிறது. கடும் குளிர் காரணமாக அதிகாலை நடைபயிற்சி செல்வோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

    மொத்தத்தில் வாட்டி எடுத்து வரும் கடும் குளிர் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி வருகிறது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுவதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    • பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது.
    • புறநகர் ரெயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழக பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனிடையே, சென்னையில் ராயபுரம், பிராட்வே, எழும்பூர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது. மேலும் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகனங்களை வாகன ஓட்டிகள் இயக்கினர்.

    மேலும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சென்னைக்கு வர வேண்டிய ரெயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சேரன் விரைவு ரெயில், நெல்லை விரைவு ரெயில், முத்துநகர் விரைவு ரெயில் உள்ளிட்ட பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. இதனிடையே, புறநகர் ரெயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    • நேற்று முதல் பெய்து வரும் மழையினாலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.
    • திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசு விவசாயிகளின் சிரமங்களைப் போக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    2025-ம் ஆண்டு துவக்கத்திலிருந்தே தமிழகம் முழுவதும் கடும் பனி பெய்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்களில் உள்ள நெய் மணிகள் ஈரப்பதம் அதிகரித்து கனம் தாங்காமல் சாய்ந்து விட்டன.

    இந்நிலையில், நேற்று முதல் 3-4 நாட்கள் வரை மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து, நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் பாயலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழைப் பொழிவின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

    ஏற்கெனவே, பனிப்பொழிவின் காரணமாக நெல்மணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் பெய்து வரும் மழையினாலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.

    மேலும், அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படாததால், வெட்ட வெளியில் இருக்கும் நெல் மூட்டைகள் பனிப்பொழிவு மற்றும் மழையினால் நனைந்து அதிக ஈரப்பதம் உள்ளதாக இருக்கின்றன.

    எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வலியுறுத்துகிறேன்.

    சம்பா பயிரிட்ட விவசாயிகள் பனிப்பொழிவு மற்றும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் சூழ்நிலையில் திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசு விவசாயிகளின் சிரமங்களைப் போக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    உடனடியாக வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை நேரடியாக அனுப்பி, பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை கணக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாமிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கவும், பயிர்க் காப்பீடு மூலம் உரிய இழப்பீடு வாங்கித்தரவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நெல்மணிகளை காய வைக்கும் 'டிரையர்' வண்டிகளை அனுப்பி நெல்மணிகளின் ஈரப்பதத்தை குறைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    தற்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யும் நிலையில், பனி மற்றும் மழையினால் ஈரப்பதம் அதிகமாகியுள்ளதை கணக்கில் கொண்டு 22 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல்லையும் கொள்முதல் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனவே, உடனடியாக பனிப்பொழிவு மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புத்தாண்டில் கூட ஜம்மு & காஷ்மீரின் எல்லையில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் தியாகம் அசாத்தியமானது.

    இந்தியாவில் உள்ள அனைவரும் இன்று 2025 ஆம் ஆண்டு பிறந்ததை கொண்டாடி கொண்டிருக்கும் நேரத்தில் ஜம்மு & காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சுடும் வெப்பத்திலும் கடும் குளிருக்கும் நடுவிலும் எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் தியாகம் அசாத்தியமானது. ராஜஸ்தானின் கோடை வெப்பம் முதல் லடாக், ஜம்மு & காஷ்மீர், இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய இடங்களின் கடும் குளிரும் ராணுவ வீரர்கள் தங்களது பணியில் உறுதியாக இருந்தனர்.

    இந்நிலையில், கடுமையான பனிப்பொழிவிற்கு இடையே இந்திய ராணுவத்தினர் எல்லையை பாதுகாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

    • இரவில் பனிக்கட்டியான சாலையில் டிரக் சரியத் தொடங்குகிறது
    • ரிசார்ட்டில் சிக்கிய சுமார் 5,000 சுற்றுலா பயணிகளை போலீசார் நேற்று மீட்டுள்ளனர்.

    இமாச்சல பிரதேசத்தில் தொடங்கியுள்ள கடுமையான பனிப்பொழிவு போக்குவரத்துகளைப் பாதித்து வருகிறது. ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்கள் வழுக்கும் மேற்பரப்பில் சறுக்குவதால் கட்டுப்பாட்டை இழந்து ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர்.

    இதுபோன்ற ஒரு சம்பவத்தில், மணாலி அருகே சோலாங் பள்ளத்தாக்கில் பனி மூடிய சாலையில் ஒரு சிறிய டிரக் கட்டுப்பாடில்லாமல் சறுக்கி பள்ளத்தாக்கில் கவிழும் வீடியோ வெளியாகி உள்ளது.

    இரவில் பனிக்கட்டியான சாலையில் டிரக் சரியத் தொடங்குகிறது. எனவே ஓட்டுநர் வாகனத்திலிருந்து வெளியே குதித்தார். மேலும் கீழே சரியும் தனது டிரக்கை கையால் நிறுத்த முயற்சித்தார்.

    ஆனால் தரை வழுக்களாக இருந்ததால் அவர் அதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. கடைசியில் டிரக் சறுக்கியவாரே சாலையை விட்டு விலகி, கீழே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது.

    இமாச்சலில் கடந்த டிசம்பர் 8 இல் முதல் பனிப்பொழிவு தொடங்கிய நிலையில் இந்த வாரம் இரண்டாம் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. மணாலியில் பனிப்பொழிவு காரணமாக சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதைக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    1,000 வாகனங்கள் மணிக்கணக்கில் சிக்கித் தவித்தன. மேலும் குலு [kullu] பகுதியில் ரிசார்ட்டில் சிக்கிய சுமார் 5,000 சுற்றுலா பயணிகளை போலீசார் நேற்று மீட்டுள்ளனர். இதற்கிடையே ஜம்மு காஷ்மீரிலும் நேற்றைய தினம் ஆண்டின் முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. 

    • காசிகுண்ட் நகரில் பனிப்பொழிவைத் தொடர்ந்து 2,000 வாகனங்ள் நெரிசலில் சிக்கின.
    • ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 80% விமானங்கள் ரத்து செய்யப்பட்டன

    ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு நேற்று [வெள்ளிக்கிழமை] தொடங்கியுள்ளது.

    காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது, இதில் தெற்கு காஷ்மீர் மற்றும் மத்திய காஷ்மீரின் சமவெளிகளில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது.

     

    தலைநகர் ஸ்ரீநகரில் சுமார் 8 [இன்ச்]அங்குல பனிப்பொழிவு பதிவாகியுள்ளது, கந்தர்பால் மற்றும் சோனாமார்க்-இல் 7-8 அங்குலங்கள் பதிவாகியுள்ளன. ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் உள்ள ஜோஜிலா ஆக்சிஸில் 15 அங்குல பனியும், அனந்த்நாக் மாவட்டத்தில் 17 அங்குலங்கள் வரை பனிப்பொழிவும் பதிவாகியுள்ளன.

    பஹல்காம், புல்வாமா, ஷோபியான் மற்றும் பிற பகுதிகளிலும் கணிசமான பனிப்பொழிவு பதிவாகி உள்ளது.

    பனிப்பொழிவு தொடர்ந்து பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. 

    அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காசிகுண்ட் நகரில் நேற்று பனிப்பொழிவைத் தொடர்ந்து சுமார் 2,000 வாகனங்ள் நெரிசலில் சிக்கின.

     

    போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை கடுமையான பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டது. ஸ்ரீநகர் வரும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது, இன்று [சனிக்கிழமை] சுமார் 80% விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

     

    இதற்கிடையே இமாச்சலப் பிரதேசத்தின் குலு[ Kullu] பகுதியில் உள்ள ஸ்கை ரிசார்ட்டான சோலாங் நாலாவில் பனிபொழிவால் சிக்கித் தவித்த சுமார் 5,000 சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் நேற்று மீட்கப்பட்டனர்.

    லாஹவுல்-ஸ்பிடி, சம்பா, காங்க்ரா, குலு, சிம்லா மற்றும் கின்னவுர் உள்ளிட்ட மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் நேற்று [வெள்ளிக்கிழமை] கடுமையான மழை மற்றும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

    • பிப்ரவரி மாதம் இறுதி வரையில் உறைபனி விழும்.
    • குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி 2 மாதங்கள் நீர்ப்பனி விழும். நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதி வரையில் உறைபனி விழும்.

    ஆனால் இந்த முறை கடந்த ஜூன் மாதம் முதல் கடந்த வாரம் வரை மிதமான மழை காணப்ப ட்டது. இதனால் பனியின் தாக்கம் மிகவும் குறைந்தது டன், நீர்பனி விழுவதும் தாமதமாகி வந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நீலகிரியில் நீர்பனி கொட்டி தொடங்கியது. ஒருவார காலமாக நீர்பனி கொட்டி வருகிறது.

    நீர்பனி கொட்டி வரக்கூடிய அதே வேளையில் கடந்த 2 தினங்களாக ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உறைபனி கொட்டியது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ், தலைகுந்தா, பைக்காரா, கிளன் மார்கன், சூட்டிங் மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி கொட்டியது. அங்குள்ள புல் மைதானங்கள் அனைத்தும் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல் காட்சியளித்தது.

    செடி, கொடிகள், இரு சக்கர வாகனங்கள், கார்கள் என அனைத்து வாகனங்களிலும் உறைபனி படர்ந்து காணப்பட்டது. வாகனத்தின் உரிமையாளர்கள் வண்டியின் மீது படர்ந்திருந்த உறைபனியை அகற்றி தங்களது வாகனத்தை இயக்கினர்.

    உறைபனி கொட்டும் அதே வேளையில் கடும் குளிரும் நிலவியது. குளி ரில் இருந்து தப்பிக்க மக்கள் தங்கள் வீடுகள் முன்பும், வாகன ஓட்டுநர்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.

    அத்தியவாசிய தேவைகளுக்காகவும், தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்களும் சுவட்டர் அணிந்தபடி சென்றனர். கடும் குளிரால் முதியவர்கள், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

    கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்றும் ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உறைபனி காணப்பட்டது.

    பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும் நிழல் தரும் இடங்களுக்கு சென்றால் குளிர் அதிகமாக இருக்கிறது.

    பைக்காரா, கிளன்மார்கன், தொட்ட பெட்டா போன்ற பகுதிக ளில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. பனிப்பொழிவு அதிகரித்து ள்ள நிலையில் அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டி வதைக்கிறது.

    ஊட்டியில் நேற்று நகர பகுதியில் அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 3.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. புறநகர் பகுதிகளில் 1 டிகிரி செல்சி யஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

    • மணாலி அருகே ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை இடையே சுமார் 1000 வாகனங்கள் சிக்கிக் கொண்டது
    • தலைநகர் சிம்லா முற்றிலும் பனியால் மூடப்பட்டதுபோல் காட்சியளிக்கிறது.

    இமாச்சல பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக மணாலி அருகே ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை இடையே சுமார் 1000 வாகனங்கள் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரமாக நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். பனிப்பொழிவுக்கு மத்தியில் போக்குவரத்து நெரிசலை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்கால நாட்களில் பனி படர்ந்த மலைகளைக் காண சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி இப்பகுதிக்கு வந்து செல்வார்கள். அதன்படி பனி படர்ந்த மலைப்பகுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடச் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இந்த வருடமும் அலைமோதியது.

    இந்த சூழலில் பனிப்பொழிவு அதிகரிப்பால் பல்வேறு இடங்களிலிருந்து வந்த 700 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிக்கல்கள் இருந்தபோதிலும் அதிக பனிப்பொழிவு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தலைநகர் சிம்லா முற்றிலும் பனியால் மூடப்பட்டதுபோல் காட்சியளிக்கிறது. இந்த வருடத்தின் முதல் பனிப்பொழிவானது டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கியிருந்த நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து தற்போது ஏற்பட்டுள்ள மிகையான பனிப்பொழிவு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

    • ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு கடுமையான பனிப்பொழிவு ஆரம்பமாகி உள்ளது.
    • இந்த ஆண்டு ஆரம்ப கால பனிப்பொழிவு வெப்பநிலை வியத்தக அளவில் வீழ்ச்சியடைய செய்துள்ளது.

    ஜம்மு:

    குளிர்காலத்தையொட்டி வட மாநிலங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு கடுமையான பனிப்பொழிவு ஆரம்பமாகி உள்ளது. இந்த ஆண்டு ஆரம்ப கால பனிப்பொழிவு வெப்பநிலை வியத்தக அளவில் வீழ்ச்சியடைய செய்துள்ளது.

    இரவு நேர வெப்ப நிலை தொடர்ந்து 0 டிகிரி செல்சியஸ் மற்றும் மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்பு காஷ்மீர், ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட குளிர்ச்சியான வெப்ப நிலையுடன் இயல்பை விட அதிகமான மழை பொழிவுக்கான எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. 

    • ஏற்காட்டில் வழக்கத்தை விட கடும் குளிர் நிலவி வருகிறது.
    • வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சேலம்:

    தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தொடர்ந்து நேற்று டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்தது.அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே பனி மூட்டம் நிலவியதுடன் சாரல் மழையும் பெய்தது.

    குறிப்பாக ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் ஏற்காட்டில் வழக்கத்தை விட கடும் குளிர் நிலவி வருகிறது.


    ஏற்காட்டில் நேற்று பகல் தொடங்கிய மழை இரவு முழுவதும் சாரல் மழையாக நீடித்த நிலையில் இன்று காலையும் சாரல் மழையாக பெய்தது. ஏற்காடு பஸ் நிலையம் , ரவுண்டானா, அண்ணா பூங்கா, படகு இல்லம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் முதலே பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது.

    இரவு முழுவதும் விடிய விடிய சாரல் மழை பெய்த நிலையில் பனி பொழிவும் அதிக அளவில் உள்ளதால் கடும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.

    ஏற்காட்டில் நிலவி வரும் பனிமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக அதிக குளிர் வாட்டி வதைக்கிறது. மேலும் ஏற்காட்டில் பனி பொழிவு அதிக அளவில் உள்ளதால் அருகில் நிற்பவர்கள் கூட கண்ணுக்கு தெரியாத நிலை உள்ளது.

    மேலும் மலைப்பாதை யில் நிலவிவரும் பனிமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக வாகன ங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஊர்ந்த படி சென்று வருகின்றன. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்களின் இயல்பு வாாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.


    குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காபி தோட்ட தொழிலாளர்கள் வீட்டில் முடங்கி உள்ளதால் உள்ளூர் வாசிகளின் வருமானமும் பாதிக்கப்ப ட்டுள்ளது. குறிப்பாக காப்பி தோட்ட பணிகளும் முடங்கி உள்ளது. தொடர் மழை மற்றும் பனியால் மிளகு கொடிகள் அழுகும் நிலையில் உள்ளது.

    சேலம் மாநகரில் நேற்று மாலை பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால் சற்று தூரத்தில் எதிரே வரும் வாகனங்கள் கூட சரியாக தெரியாத நிலை இருந்தது. இதனால் 4 வழிச்சாலைகளில் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வாகனங்களும் சென்றன. மேலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததுடன் கடும் குளிர் நிலவியது.

    குறிப்பாக பாதசாரிகள், வாகன ஓட்டிகள் குளிரில் நடுங்கிய படி சென்றனர். மேலும் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு சென்று விட்டு நேற்று மாலை வீட்டிற்கு திரும்பியவர்கள் சிறு தூரலுடன் கடும் குளிர் நிலவியதால் கடும் அவதி அடைந்தனர்.

    இதே போல சேலம் மாநகரில் இன்று காலையும் பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை பனிப்பொழிவு இருந்தது. திருச்செங்கோடு, கொல்லிமலை மலை பகுதியில் பனிப்பொழிவுன் தாக்கம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சாரல் மழையும் பெய்து வருகிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி, திம்பம் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்த வழியாக வந்த செல்லும் வாகனங்கள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கின்றது.

    நாள் முழுவதும் நீடிக்கும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    நீலகிரி மாவட்டத்திலும் கடுமையான உறைபனி நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் புல்வெளிகளில் பனிபடர்ந்து காணப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் கம்பளி ஆடைகளை அணிந்தப்படி வெளியே வந்து செல்கின்றனர்.

    பனிப்பொழிவு அதிக அளவில் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகளும் அவதியடைந்து வருகின்றனர். இதே போல் கோவை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று காலையும் பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது.

    திருப்பூர் மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவியது. இன்றும் பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி சென்றது.

    இதேபோல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ×