என் மலர்
நீங்கள் தேடியது "ராணுவ வீரர்கள்"
- பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 16 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்துடன் புகுந்து அதனை வெடிக்கச் செய்தான்.
இதில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 10 ராணுவ வீரர்களும், 10 அப்பாவி மக்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலில் அங்கிருந்த 6 வீடுகள் சேதமடைந்தன. இதில் 6 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
- ஷர்வன் சிங் என்ற சிறுவன் ராணுவ வீரர்களுக்கு தண்ணீர், லஸ்ஸி உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளான்.
- சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டிய மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் பாராட்டினார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது ராணுவ வீரர்களின் தாகம் தீர்த்த 10 வயது சிறுவனுக்கு பரிசளித்த ராணுவம்
ஆபரேஷன் சிந்தூரின்போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுவனான ஷர்வன் சிங், ராணுவ வீரர்களுக்கு தண்ணீர், பால், லஸ்ஸி உள்ளிட்டவற்றை வழங்கி தாகம் தீர்த்துள்ளான்.
இதனால் பெரோஸ்பூரைச் சேர்ந்த ஷர்வன் சிங்கை நேரில் அழைத்துப் பாராட்டிய மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் சிறுவனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
இதன் பிறகு பேசிய சிறுவன், "வளர்ந்த பிறகு நானும் ஒரு ராணுவ வீரனாக வேண்டும்" என்று நெகிழ்ச்சிப் பொங்க கூறுகிறார்
- ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
- நான் என்னுடய X வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன்.
ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாட்டை கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து வரும் என்னுடைய உயிரினும் மேலான ராணுவ வீரர்களை நான் என்றும் வணங்குபவன் அவர்களின் தியாகத்தை வணங்குபவன் .
என்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க.வின் பேரணி குறித்து கேட்டபோது அது நாடகம் அவர்கள் மத்திய அரசையும் பாராட்டாமல் நாடகம் போடுகிறார்கள் என்று சொல்லியதை தி.மு.க தொலைக்காட்சிகள் என்னுடைய பேச்சை திரித்து போட்டுவிட்டார்கள் .
நான் என்னுடய எக்ஸ் வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன்.
ஆனாலும் இராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருக்கு மேயானால் அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய குடும்பம் முன்னால் இன்னால் இராணுவ வீரர்களின் குடும்பம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்!!!!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? என செல்லூர் ராஜு சர்ச்சை பேச்சு
- போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக நேற்று அறிவித்தது. நாளை சண்டை நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இந்நிலையில், பிரதமர் மோடிக்குதான் திமுகவினர் நன்றி கூற வேண்டும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்" செல்லூர் ராஜு தெரிவித்தார்.
ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? என்று செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராணுவ வீரர்கள் தொடர்பாக சர்ச்சையாக பேசியது தொடர்பாக செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "செய்தியாளர்கள் சந்திப்பில் இரவு பகல் பார்க்காமல் நாட்டுக்காக பாடுபடும் நம்ம இராணுவ வீரர்களை மதிக்காமல் பேசியதாக வந்துள்ள செய்திகள் தவறு ,எங்க பொதுச் செயலாளர் அண்ணன் EPS பாராட்டியுள்ளார் , எங்க குடும்பமே முன்னால் இராணுவ வீரர்களை கொண்டது இன்று நேற்று நாளை எப்பொழுது மதிக்கிரேன் !!!" என்று பதிவிட்டுள்ளார்.
- ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது.
- திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இந்நிலையில், பிரதமர் மோடிக்குதான் திமுகவினர் நன்றி கூற வேண்டும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "2 நாட்கள் தூங்காமல் கண்விழித்து ராணுவ நடவடிக்கைகளை பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார். இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்கு இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும். அதற்கு பதிலாக ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக கூறுகிறது. .
ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்" செல்லூர் ராஜு தெரிவித்தார்.
ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? என்று செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- பாஜக நிர்வாகி ரவீந்தர் ரெய்னா ராணுவ வீரர்களை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
- பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாஜக நிர்வாகி ரவீந்தர் ரெய்னா ராணுவ வீரர்களை வைத்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஷ்மீரின் பனி நிறைந்த பகுதியில் ராணுவ வீரர்களுடன் பாஜக நிர்வாகி ரவீந்தர் ரெய்னா ரீல்ஸ் வீடியோ எடுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
ராணுவ வீரர்களை வைத்து பாஜக நிர்வாகி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பதிவில், "காஷ்மீரில், பயங்கரவாதிகள் நமது 28 மக்களை கொன்றனர். இந்த துயர சம்பவத்தால் முழு தேசமும் வேதனையும் துக்கமும் அடைந்துள்ளது. ஆனால், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான ரவீந்தர் ரெய்னா வீடியோக்களை உருவாக்குவதில் மும்முரமாக இருக்கிறார்.
இந்த துயர சம்பவத்திற்காக ரவீந்தர் ரெய்னா வருத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்கு பதிலாக, அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். சமூக ஊடகங்களில் தனது பிம்பத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்" என்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு அவரது எக்ஸ் பதிவில் விளக்கம் அளித்த ரவீந்தர் ரெய்னா, "மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக குப்வாராவில் வீரர்களுடன் நெருக்கமாக பணியாற்றியதாகவும், துணிச்சலான வீரர்களின் உதவியுடன் தான் பாதுகாப்பான இடத்தை அடைந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- பட்ரேரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டது.
- அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனம் சாலையை விட்டு விலகி 700 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில் மூன்று வீரர்கள் பலியாகினர்.
இன்று காலை 11.30 மணியளவில் பட்ரேரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணுவம், காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்திலிருந்து 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
பலியானவர்கள் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்டனர்.
- புர்கினா பாசோ-நைஜர் எல்லைப் பகுதியில் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
- இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 54 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புர்கினா பாசோ-நைஜர் எல்லைப் பகுதியில் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமீன் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. 70 ராணுவ வீரர்களை கொன்றதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.
மாலியை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, சமீபத்தில் தனது செயல்பாடுகளை பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
வடக்கு பெனினில் கிளர்ச்சியாளர்கள் செயல்படத் தொடங்கியதிலிருந்து இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
- ஹிஸ்புல்லாவினர் சிரியாவிற்குள் நுழைந்து மூன்று ராணுவ வீரர்களைக் கடத்தினர்.
- மக்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் இணையத்திலும் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது.
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாவினர் கடந்த சனிக்கிழமை சிரியாவிற்குள் நுழைந்து மூன்று ராணுவ வீரர்களைக் கடத்தி லெபனான் எல்லையில் அவர்களைக் கொன்றதாக சிரிய இடைக்கால அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது.
ஆனால் ஹிஸ்புல்லா தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டது. இதற்கிடையே இந்த சம்பவத்தால் லெபனான் - சிரியா இல்லையில் தற்போது மோதல் வெடித்தது.
எல்லையில் சிரிய வீரர்களைக் கொன்ற ஹிஸ்புல்லா கூட்டங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக சிரிய ராணுவம் வட்டாரங்ககள் தெரிவிக்கின்றன.

எல்லையில் உள்ள சிரிய கிராமமான ஹெர்மல் மீது பீரங்கிகள் மூலம் ஷெல் தாக்குதல் நடந்துள்ளது. இதில் இருந்து மக்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் இணையத்திலும் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது.
பதிலாக வடகிழக்கு லெபனானில் உள்ள எல்லை நகரமான அல்-காசர் மீது சிரியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லெபனானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூத்த ஹிஸ்புல்லா சட்டமன்ற உறுப்பினர் ஹுசைன் ஹாஜ் ஹசன் பேட்டி ஒன்றில், சிரியாவை சேர்ந்த போராளிகள் லெபனான் எல்லைக்குள் நுழைந்து அங்குள்ள எல்லை கிராமங்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.
லெபனானின் அல்-காசர் எல்லைக் கிராமத்தில் நிலைகொண்டுள்ள, சிரிய இராணுவத்திற்கும், முன்னாள் சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்துடைய ஆதரவு குழுக்களுக்கும், ஆயுதமேந்திய லெபனான் ஷியா குழுக்களுக்கும் இடையேய சமீப காலமாக வன்முறை அதிகரித்த வண்ணம் உள்ளது. சிரியாவும், லெபனானும் எல்லையில் தங்கள் படையினரை அதிகம் நிலைநிறுத்தி வருகின்றன.
இதற்கிடைய சிரியாவின் லடாகியாவில் உள்ள ஒரு ஆயுதப் பிரிவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சிரியாவின் சிவில் பாதுகாப்புத் துறை அறிவித்தது. நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உலோகத் துகள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெடிப்புவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- 214 பேரும் தூக்கிலிடப்பட்டதாக பிஎல்ஏ கிளர்ச்சி படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
- 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பாகிஸ்தான் ராணும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடத்தல் விவகாரத்தில், பணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட ராணுவ வீரர்கள் 214 பேரும் தூக்கிலிடப்பட்டதாக பிஎல்ஏ கிளர்ச்சி படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஜீயாந்த் பலோச் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, கிளர்ச்சிப்படை மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை வெளியிடுவதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
354 பணைய கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பாகிஸ்தான் ராணும் தெரிவித்துள்ளது.
மேலும், கிளர்ச்சி படையால் வேறு எந்த பணைய கைதிகளும் கொல்லப்பட்டதற்கோ, அழைத்து செல்லப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
- ராணுவ வீரர் நல சங்க கூட்டம் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கத்தில் நடந்தது.
- அனைத்துபோட்டித் தேர்விற்கான பயிற்சிகள்வழங்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
உடுமலை:
ராணுவ வீரர் நல சங்க கூட்டம் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கத்தில் நடந்தது. கோவை மாநகர மண்டல தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில்முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் ஈ சி எச். சேவையில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு முறையான சேவைகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யவும் தனித்தனியே இயங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் ராணுவ வீரர் சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பு செய்வது, யூனிபார்ம் சர்வீஸ்களுக்கான உடல் தகுதி தேர்விற்கும், எழுத்து தேர்விற்கும்பயிற்சிகள் கொடுத்தல், முன்னாள் ராணுவ வீரர்களின் ஆவணங்களில் உள்ள பதிவுகளை பென்ஷன் பெறுவதற்கு தகுதி உடையதாக திருத்திக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தல், கடற்படை, விமானப்படை உட்பட போலீஸ் மற்றும் ராணுவத்திற்கு நடத்தப்படும் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பதவிக்கான அனைத்து வகையான அனைத்துபோட்டித் தேர்விற்கான பயிற்சிகள்வழங்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் கோவை மாநகர மண்டல தலைவர் ராமநாதன் மற்றும் உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் ,செயலாளர் சக்தி ,பொருளாளர்சிவக்குமார், துணைத்தலைவர் கோவிந்தராஜலு, பிளைட் லெப்டினென்ட் தங்கவேல் நாயப் சுபேதார்நடராஜ் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
- எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
- 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பி னர் அரசுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் உகாண்டா நாட்டை சேர்ந்த அமைதி படையும் சோமாலியாவில் தீவிர வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள புலமாரரில் உள்ள பாதுகாப்பு படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 54 உகாண்டா வீரர்கள் பலியானார்கள்.
இது தொடர்பாக உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி கூறும்போது, சோமாலியாவில் உள்ள ராணுவ தளத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 54 உகாண்டா அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்தனர். எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றனர்.
இதற்கிடையே ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தியதாகவும், 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.