search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "army soldier"

    • மணிப்பூரில் விடுமுறையில் ராணுவ வீரர் வீட்டுக்கு வந்தார்.
    • அவரை துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் வசித்து வந்தவர் செர்தோ தங்தங் கோம். ராணுவத்தில் வீரராக பணியாற்றிய இவர் விடுமுறையில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

    இந்நிலையில், ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் நேற்று காலை 10 மணியளவில் கோமை கடத்திச் சென்றனர். அப்போது, அவரது 10 வயது மகன் இதனைப் பார்த்துள்ளான்.

    இதுதொடர்பாக கோமின் மகன் போலீசாரிடம் கூறுகையில், 3 பேர் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் இருவரும் வீட்டின் முகப்பு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த மர்ம நபர்கள் கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து கோமின் தலையில் வைத்து, வெள்ளை நிற வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றனர் என தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, கோமின் உடல் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் மோங்ஜாம் பகுதியில் இருந்து கிழக்கே உள்ள குனிங்தெக் என்ற கிராமத்தில் இருந்து இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலை சகோதரர் மற்றும் உறவினர் அடையாளம் காட்டினர். அவரது தலையில் துப்பாக்கி குண்டு காயம் ஒன்று காணப்பட்டது.

    ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்படும் என ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • செல்வகுமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
    • கால் தடுக்கி விழுந்ததில் செல்வக்குமாருக்கு பின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டை பெத்தேல்நகர் காலனி குடியிருப்பை சேர்ந்தவர் இசக்கிதுரை. இவரது மகன் செல்வகுமார் (வயது28). ராணுவ வீரரான இவர் அசாமில் பணிபுரிந்து வந்தார்.

    தவறி விழுந்து சாவு

    இவருக்கு திருமணமான நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. தற்போது செல்வகுமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    நேற்று இரவு செல்வகுமார், வீட்டின் படிக்கட்டில் கால் தடுக்கி விழுந்துள்ளார். இதில் செல்வக்குமாருக்கு பின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் தனது தாயாரிடம் நலமாக இருப்பதாக கூறிவிட்டு தனது அறைக்குள் சென்று கட்டிலில் படுத்து உள்ளார். இதன் பின்னர் செல்வகுமாரை அவரது தாய் சாப்பிடுவதற்காக கூப்பிட்ட போது அவர் எழுந்திருக்கவில்லை. அங்கு சென்று பார்த்த போது அவர் மயக்க நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சரக்கு வேன் மோதி ராணுவ வீரர் பரிதாப இறந்தார்.
    • மகன் கண் முன்னே பலியான சம்பவம் திருமங்கலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது42). இவர் டேராடூனில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், சஞ்சய் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சஞ்சய் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    தர்மலிங்கம் விடுமுறை கிடைக்கும் போது ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துச்செல்வார். அதேபோல் கடந்த 17-ந் தேதி விடுமுறை எடுத்துகொண்டு சொந்த ஊருக்கு வந்தார்.

    அவரது தாய் திருமங்கலம் அருகே உள்ள கல்லனை கிராமத்தில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக தர்மலிங்கம் நேற்று இரவு தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    விடத்தக்குளம்-எட்டுநாழி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது அவர்களது மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வேகமாக வந்த மினி சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தர்மலிங்கம் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அவரது மகன் சஞ்சய்க்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து தர்மலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரர், விபத்தில் சிக்கி மகன் கண் முன்னே பலியான சம்பவம் திருமங்கலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருமண ஆசைகாட்டி நர்சை பாலியல் பலாத்காரம் செய்ததாக ராணுவ வீரர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் செல்லம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவரது மகள் அன்புச்செல்வி (வயது19). நர்சிங் பயிற்சி முடித்துள்ள இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் அன்புச் செல்வி ஒரு புகார் கொடுத்தார்.

    அதில் தங்கள் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மாரீஷ் வரன் (24) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தோம்.

    அப்போது திருமண ஆசைகாட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பமானேன்.

    இதுபற்றி மாரீஷ்வரனிடம் கூறி தற்போது திருமணம் செய்யக்கேட்டபோது மறுத்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியை கொன்ற ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராமலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). இவர் மேற்கு வங்காளத்தில் ராணுவத்தில் புணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த முருகலெட்சுமி (வயது 34) என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு பிரேம்நாத் (14), ஹரிபிரசாத் (10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கண்ணன் தனது குடும்பத்தினருடன் ஆண்டிப்பட்டி பாலாஜி நகரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் முருகலெட்சுமி குன்னூர் அருகே ஆற்றுப்பாலத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகலெட்சுமியின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது கணவர் கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார்.

    பின்னர் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது மனைவிக்கும் வேறு ஒரு வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது. இது குறித்து எனக்கு தெரியவரவே நான் என் மனைவியை கண்டித்தேன். ஆனால் அவர்கள் கள்ளத் தொடர்பு நீடித்து வந்தது.

    மேலும் அந்த வாலிபரை 2-வது திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் முருகலெட்சுமி வசித்து வந்தார். எனது மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை எனது பெயரில் மாற்ற முயன்றேன். இதற்காக முருகலெட்சுமியிடம் கேட்ட போது அவர் மறுத்து விட்டார்.

    நேற்று முன்தினம் எனது மகன்களின் பள்ளி சான்றிதழ்களை வாங்குவதற்காக முருகலெட்சுமி அவர்கள் படித்த பள்ளிக்கு வந்திருந்தார். இதை அறிந்த நான் அங்கு சென்று முருகலெட்சுமியை நைசாக பேசி சமாதானம் செய்து ஆட்டோவில் அழைத்து வந்தேன். பின்னர் ராமலிங்காபுரத்தில் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

    அதன் பிறகு எனது தந்தை சாமிக்கண்ணு, தாய் ராஜம்மாள் ஆகியோர் உதவியுடன் முருகலெட்சுமியின் உடலை ஆற்றில் வீசி விட்டேன்.

    இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து போலீசார் மனைவியை கொலை செய்த கண்ணன் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்தனர்.

    வெளிநாட்டினர் ஊடுருவலை தடுக்க மெக்சிகோ எல்லையில் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். #Trump #MexicoBorder
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவி சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    பெரும்பாலான வெளிநாட்டினர் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவுகின்றனர்.

    அதை தடுக்க மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக எல்லை நெடுகிலும் ராணுவத்தை நிறுத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி கடந்த 31-ந்தேதி (புதன்கிழமை) 5200 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எல்லையில் மேலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட உள்ளனர்.

    மொத்தம் 15 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டு அவர்கள் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே 5200 வீரர்கள் அனுப்பப்பட்ட நிலையில் மேலும் 8 ஆயிரம் வீரர்கள் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மெக்சிகோ எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அவர்கள் அங்கு பணியில் இருக்கும் சுங்க இலாகா மற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு துணையாக செயல்படுவார்கள். இவர்கள் தவிர மீதமுள்ளவர்கள் படிப்படியாக அனுப்பப்படுவார்கள் என ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    இது ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களை விட அதிகம் என்றும் அரசியல் லாபத்துக்காக டிரம்ப் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதை ராணுவ மந்திரி ஜிம் மாத்தீஸ் மறுத்துள்ளார். #Trump #MexicoBorder
    ராணுவ வீரர் வீட்டில் செல்போன் திருடிய மர்ம நபரை பொதுமக்கள் பிடித்து நெட்டப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை நெட்டப்பாக்கத்தை அடுத்த கல்மண்டபம் பி.எஸ்.என்.எல். வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). இவர் சென்னை ஆவடியில் ராணுவ தளவாடம் தயாரிக்கும் தொழிற்சாலையில் துணை ராணுவ வீரராக உள்ளார்.

    ராஜேந்திரன் தனது வீட்டின் அருகில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று இவர் பழைய வீட்டில் விலை உயர்ந்த செல்போனை வைத்திருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த செல்போனை திருடிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

    அப்போது அக்கம் பக்கத்தினர் அந்த நபரை பிடித்து நெட்டப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் செல்போனை திருடிய வாலிபரிடம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர் வில்லியனூரை அடுத்த உறுவையாறை சேர்ந்த முருகன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி ராணுவ வீரர் பலியானார். #ArmySoldier #Killed #LanmineExplosion
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே குலாப்போஸ்ட் என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் உள்ள சாலையில் ராணுவ வீரர்கள் சென்றபோது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் அவர்களது கால்கள் பட்டதும், அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதில் 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கு உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒருவர் பலியானார். மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்ணிவெடி தாக்குதலில் பலியான ராணுவ வீரர் பெயர் தல்பிர்சிங் என்பது பின்னர் தெரியவந்தது. #ArmySoldier #Killed #LanmineExplosion 
    களியக்காவிளையில் இன்று கத்தியை காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    களியக்காவிளை:

    களியக்காவிளையை அடுத்த மெதுகும்பல் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்தள்ள அவர் இன்று காலை பொருட்கள் வாங்க களியக்காவிளைக்கு சென்றார். அங்குள்ள பஜாரில் ஒரு கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    இதற்கு கடையின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து கடை வியாபாரியை மிரட்டினார்.

    இதில் பயந்து போன வியாபாரி அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் ராணுவ வீரரிடம் இருந்த கத்தியை பறிக்க முயன்றனர். அவர்களையும் ராணுவ வீரர் கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் ஒன்று சேர்ந்து ராணுவ வீரரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை களியக்காவிளை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ராணுவ வீரரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் கற்பழித்த பெண்ணையே ராணுவ வீரர் திருமணம் செய்து கொண்டார்.
    புவனேஸ்வரம்:

    இந்திய ராணுவம் பீகார் ரெஜிமன்ட் பிரிவில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருபவர் துலுபிரதான்.

    இவர், ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தார்.

    அங்குள்ள பெனா காபாரி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வந்தார்.

    அந்த பெண் கடந்த 15-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது துலுபிரதானும், அவரது நண்பர்களும் அந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக அவரை கற்பழித்தனர்.

    இது சம்பந்தமாக அவர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து துலுபிரதான் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே துலுபிரதான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும், அந்த வழக்கை வாபஸ் பெறும்படியும் கூறினார். இதை அந்த பெண் ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து அவர்களுக்கு உதயகிரியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. அதில், இரு வீட்டாரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். #Tamilnews

    கோவில் விழாவில் ராணுவ வீரர் மீது உருட் டுக்கட்டையால் தாக்கிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், சோழவந்தான் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் பாண்டிமாரி. இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 25). ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

    விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த முத்துப்பாண்டி சோழவந்தான் மாரியம்மன் கோவில் விழாவில் குடும்பத்துடன் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான் காரைக்கடை தெருவில் அக்னிசட்டி ஊர்வலத்தில் சென்றபோது சிலர் முத்துப்பாண்டியிடம் தகராறு செய்துள்ளனர். இதில் முத்தப்பாண்டிக்கு உருட்டுக்கட்டை அடி விழுந்தது.

    தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்ட முத்துப் பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை தாக்கிய மாரிக்கனி (20), ராம்குமார், மதி, தினேஷ், பிரபாகரன், அங்குச்சாமி, ஆலயமணி, கார்த்தி ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×