search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery theft"

    • நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அண்ணா பேருந்து நிலையம் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரகுராஜன் மனைவி லட்சுமி (வயது 53). இவர் கணவரை பிரிந்து 20 ஆண்டுகளாக மகனுடன் வசித்து வருகிறார். இவரது மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை செய்து வருகிறார்.

    லட்சுமி களிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதற்காக வீட்டில் இருந்து தினமும் காலையில் பள்ளிக்கு ஷேர் ஆட்டோ மற்றும் அரசு பேருந்தை பயன்படுத்தி வந்துள்ளார். தினமும் வீட்டிலிருந்து ஆட்டோ மூலம் சிவகங்கை நான்கு வழிச்சாலை சந்திப்பு வந்து அங்கிருந்து ஒரு ஆட்டோ அல்லது பஸ் மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து கிளம்பிய லட்சுமி ஆட்டோவில் விக்ரம் மருத்துவமனை சந்திப்பு அருகே வந்து அங்கிருந்து மற்றொரு ஆட்டோ மூலம் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள பள்ளியில் வேலை செய்யும் இரண்டு ஆசிரியைகள் உள்ளிட்ட நான்கு பேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர்.

    மற்ற இரண்டு ஆசிரியர்களும் அவர்களது பள்ளி அருகே இறங்கிக் கொள்ள ஆட்டோவில் லட்சுமி மற்றும் அவருடன் பயணி ஒருவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவிற்கு டீசல் போடுவதாக லட்சுமியிடம் கூறிய ஆட்டோ டிரைவர் பெட்ரோல் நிலையம் செல்வதற்கு பதிலாக வேறொரு பாதையில் ஆட்டோவை ஓட்டியுள்ளார். ஏன் என்று கேட்ட லட்சுமியிடம் இது தான் குறுக்கு வழி என்று கூறிய ஆட்டோ டிரைவர் மறைவான காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

    அப்போது ஆட்டோவில் இருந்த இளைஞர் மற்றும் ஆட்டோ டிரைவரும் சேர்ந்து தலைமை ஆசிரியை லட்சுமியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்தனர். அவர் காதில் அணிந்திருந்த தோடு மாட்டலை கழட்டி தருமாறும் தராவிட்டால் காதை அறுத்து விடுவோம் என்று கூறியதாலும் உயிருக்கு பயந்த அவர் காது கழுத்தில் அணிந்திருந்த 9½ பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர்.

    ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய லட்சுமி அங்கிருந்து தப்பி அந்த வழியாக வந்தவர்களின் உதவியுடன் கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நகைக்காக பட்டப்பகலில் தலைமை ஆசிரியை வெட்டி நகையை பறித்து சென்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் பொது போக்குவரத்தை தவிர்த்து பெரும்பாலும் ஷேர் ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர். சாலை விதிகளை சில ஆட்டோக்கள் மதிக்காமலும் சாலை விதிகளை மீறுவதாலும் அதிக நபர்களை ஆட்டோவில் ஏற்றி செல்வதாகவும் பல்வேறு விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆட்டோவில் பள்ளி தலைமை ஆசிரியைக்கு நடந்த சம்பவம் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

    • மூதாட்டி மெகருன்னிசா கூச்சலிடவே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அந்த பெண்ணை பிடித்து தர்ம அடி கெடுத்தனர்.
    • கழுத்து அறுக்கப்பட்ட தால் காயம் அடைந்த மெகருன்னிசாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி சவுந்தர் நகரை சேர்ந்தவர் நசீர் (வயது 45), மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக உள்ளார்.

    இவரது தாய் மெகருன்னிசா (73). இவர் மேல் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், மெகருனிஷாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டார்.

    தண்ணீர் எடுக்க உள்ளே சென்றபோது, அவரை பின் தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற அந்தப் பெண், கத்தியால் மெகருன்னிசாவின் கழுத்தை அறுத்தார். பின்னர் அவர் அணிந்திருந்த தோடு சங்கிலியை பறித்தார்.

    இதையடுத்து, மூதாட்டி மெகருன்னிசா கூச்சலிடவே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அந்த பெண்ணை பிடித்து தர்ம அடி கெடுத்தனர்.

    பின்னர் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் லைன்மேடு தர்மலிங்கம் முதல் கிராஸ் பகுதியை சேர்ந்த பாஷா என்பவரது மனைவி ஜன்மா (32) என்பதும், ஆடம்பர வாழ்க்கை ஆசைப்பட்டு கத்தியால் குத்தியதும் தெரிய வந்தது.

    தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கழுத்து அறுக்கப்பட்ட தால் காயம் அடைந்த மெகருன்னிசாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை மாயமானது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே கூக்கால் கிராமத்தை சேர்ந்த வர் பார்த்திபன் (வயது35). விவசாயி. இவர் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். இவரது மனைவி அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார்.

    அப்போது இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகையை திருடிக் கொண்டு தப்பி ஓடினர். வீடு திரும்பிய அவரது மனைவி பொரு ட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை மாயமானது தெரிய வந்தது.

    இது குறித்து கொடை க்கானல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பால்ஜெயசீலன் தலைமை யிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

    • 14 பவுன் தங்க நகையை பையில் வைத்திருந்ததை நோட்டமிட்டவர் அதனை திருடிச்சென்றது தெரியவந்தது.
    • போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிராக்களை காட்சிகளை வைத்து திருடிய தேடி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    கோவை மாவட்டம் இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மனைவி அனிதா (வயது 37). இவர்கள் ஒட்டன்சத்திரத்தில் நடந்த உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ்நிலையம் வந்தனர்.

    அப்போது அனிதா தான் கழுத்தில் அணிந்திருந்த 14 பவுன் தங்க நகையை கழற்றி அதை ஒரு பையில் சுற்றி கட்டைப்பையில் வைத்துக் கொண்டார்.

    பஸ்சில் ஒரு வேளை தூங்கி விட்டால் நகை தொலைந்து விடும் என்ற அச்சத்தில் அவர் இவ்வாறு வைத்துள்ளார். ஆனால் இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பையில் இருந்த 14 பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர். பஸ்சுக்கு காத்திருந்த அவர்கள் சிறிது நேரம் கழித்து பையில் சோதனையிட்டபோது நகை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்தில் தொடர்ந்து செல்போன், மோட்டார் சைக்கிள், பயணிகளின் பணம் திருடப்பட்டு வருகிறது.

    ஆனால் கொள்ளையர்கள் பிடிபடாமல் உள்ளனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சத்துடனேயே கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அழகப்பபுரத்தில் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் காலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக பூசாரி சுந்தரமூர்த்தி வந்தார்
    • அப்போது கோவில் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கோவில் நடை திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    திசையன்விளை:

    திசையன்வினை அருகே உள்ள அழகப்பபுரத்தில் வட பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக சுந்தரமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கோவில் நடை திறந்துகிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க பொட்டு செயின், தங்ககாசு, தங்ககம்மல், வெள்ளி கிரிடம் ஆகியவை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா முத்துசாமி திசையன்விளை போலீசில் புகார் செய்தார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து நகை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • மில் தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை போனது
    • புகாரின் பேரில் கைரேசை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் என்.எஸ்.நகர் போஸ்டல் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    இதனால் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று தனது தாயாரை சந்தித்துவிட்டு பின்னர் இரவு வேலைக்கு மணிகண்டன் சென்றுவிட்டார்.

    இன்று காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. இைத பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேசை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

    புகார் அளித்த மணிகண்டன் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே அவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    கோவை

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னே கவுண்ட ன்புதூரை சேர்ந்தவர் மாமணி (வயது 32).

    இவர் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாமணி தனது வீட்டை பூட்டி விட்டு சீரியம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு தூக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுைழந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த ஆரம், செயின், கம்மல், மோதிரம், வளையல் உள்பட 19 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் மாமணியின், வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தின் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் தனது வீட்டிற்கு விரைந்து சென்றார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து மாமணி அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து அன்னூர் போலீசார் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 19 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    • கோவிலில் வரதராஜபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.
    • நான்கே முக்கால் பவுன் நகையையும், வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளி பாளையத்தில் ஸ்ரீஏகசக்தி ரங்கநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரதராஜபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று பூஜைகள் முடிந்து அவர் கோவிலை பூட்டி விட்டுச் சென்றனர். நள்ளிரவில் கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த அம்மனுக்கு அணிவிக்கப்படும் கம்மல், மூக்குத்தி, நெக்லஸ் உள்ளிட்ட நான்கே முக்கால் பவுன் நகையையும், வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். தப்பிச்செல்லும் போது அவர்கள் கோவிலில் இருந்து கியாஸ் சிலிண்டரையும் எடுத்துச் சென்றனர்.

    இதுகுறித்து சிங்கா நல்லூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் கண்காணிப்பு காமிரா எதுவும் உள்ளதா என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். 

    • அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், டாலர், மோதிரம் உள்பட 44½ பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
    • கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நான்சிகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி சந்திரா (வயது 40). ரியல் எஸ்டேட் அதிபர்.

    கடந்த 10-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான பழனிக்கு சென்றார். அங்கு வைத்து சந்திரா அவரது மகளுக்கு புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நடத்தினார்.

    இந்தநிலையில் 11-ந் தேதி இரவு இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், டாலர், மோதிரம் உள்பட 44½ பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சந்திராவுக்கு தகவல் தெரி வித்தார். அவர் உடனடியாக தனது வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து வடக்கிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 44½ பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள். 

    ரெயில்வே ஊழியரின் மனைவியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பொன்மலைப்பட்டி:

    திருச்சி பொன்மலை தங்கேஸ்வரிநகரை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ அல்மேரா. ரெயில்வே ஊழியரான இவருடைய மனைவி அனிதா மரியா (வயது 40). இவர் நேற்று காலை வீட்டில் இருந்து மொபட்டில் டி.வி.எஸ்.டோல்கேட் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அதில் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர், திடீரென அனிதாமரியா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். ஆனால் அதற்குள் வாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இது பற்றி பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொன்மலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து வாலிபர்கள் தப்பி சென்ற பகுதியில் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, 2 பேரும் யார்?. எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்ற னர்.

    * திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை மத்திய பஸ் நிலையத்துக்கு வந்த ஒரு பஸ்சில் 50 வயது மதிக்கத்தக்க நபர் பயணம் செய்து வந்தார். மத்திய பஸ் நிலையம் வந்ததும் அந்த நபர் பஸ்சில் இருந்து கீழே இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட அந்த பகுதியினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    *தமிழ்நாடு திருநங்கை நலவாரிய அலுவல் சாரா மாநில உறுப்பினர் கஜோல் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “கடந்த 13-ந் தேதி எங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரி ஒருவரை சந்தித்து மனு அளித்தபோது, அவர் என்னை தகாத வார்த்தையால் திட்டி பேசினார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஆகவே அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

    *திருச்சி புத்தூர் குளத்துமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). போலீஸ் காரரான இவர் தொட்டியம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய வீட்டின் அருகே வசித்து வருபவர் கார்த்திக்(27), எலக்ட்ரீசியன். இவர் தனது மோட்டார் சைக்கிளை மணிகண்டன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாராம். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் புத்தூர் மந்தை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    * திருச்சி கோட்டை பகுதியில் உள்ள இ.பி.ரோடு தேவதானத்தில் ஒரு தனியார் தண்ணீர் கம்பெனி அருகே முட்புதருக் குள் கேட்பாரற்ற நிலையில் 10 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. இதை அறிந்த கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாகனங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 
    காரைக்குடி அருகே பெண் அதிகாரி வீட்டில் 13 பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திரிபுரசுந்தரி (வயது 44). இவர் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்குவதற்கு முன்பு தனது நகைகளை கழற்றி மேஜையின் மீது வைத்து விட்டு அயர்ந்து தூங்கிவிட்டார்.

    காலையில் எழுந்து பார்த்த போது மேஜை மீது வைத்திருந்த 13 பவுன் நகைகளை காணவில்லை இரவில் யாரோ ஜன்னல் வழியாக அதனை திருடி சென்றிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திரிபுரசுந்தரி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 
    பரமத்தி வேலூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி பகுதிகளில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 38½ பவுன் நகைகளை மீட்டனர்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவுப்படி, பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி மேற்பார்வையில், பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி, நல்லூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை கண்டுபிடிப்பதற்காக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் வேலகவுண்டம்பட்டி இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மரவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் பரமத்தி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதையடுத்து அவர்களை பிடித்து தீவிர விசாரணை மேற் கொண்டனர்.

    இதில் அவர்கள் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மகன் அசோக் (வயது20), அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் தினகரன் (23), பொன்னையன் மகன் பாரதிராஜா (28) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி நல்லூர் பகுதியில் செக்குபட்டி சாலையில் மொபட்டில் சென்ற வளர்மதி என்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலியையும், பரமத்தி அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் மொபட்டில் சென்ற சுகந்தி என்ற பெண்ணிடம் 8½ பவுன் தாலிக்கொடியையும், கடந்த ஏப்ரல் மாதம் கரூர் மாவட்டம் ஏம்பூர் பெட்ரோல் பங்க் அருகே மொபட்டில் சென்ற ஒரு பெண்ணிடம் 7½ பவுன் தாலிக்கொடியையும், கரூர் மாவட்டம் குட்டக்காடு அருகே மொபட்டில் சென்ற ஒரு பெண்ணிடம் 6 பவுன் தாலிக்கொடியையும், கடந்த 4-ம் தேதி பரமத்தி அருகே காரைக்கால் பிரிவு சாலையில் மொபட்டில் சென்ற கணவன், மனைவியை கத்தியை காட்டி மிரட்டி 7½ பவுன் தாலிக்கொடி ஆகியவற்றை பறித்துச்சென்றதும் தெரிய வந்தது.

    இதேபோல நேற்று வேலகவுண்டம்பட்டி இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் மணியனூர் பிரிவு சாலை அருகே வாகன சோதணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திண்டுக்கல் போஜனம்பட்டி வடமதுரை பகுதியைச் சேர்ந்த தாசப்பன் மகன் செக்குராஜா (42), அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் சுந்தர்ராஜன் (25) என்பதும், இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் 11-ம் நல்லூர் செம்மண்குழிகாடு அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடியையும், கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி நல்லூர் அருகே செக்குபட்டி சாலையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து பரமத்தி, நல்லூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி பகுதியில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட அசோக், தினகரன், பாரதிராஜா, செக்குராஜா மற்றும் சுந்தர்ராஜன் ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 38½ பவுன் நகைகளையும் மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் கைதான 5 பேரையும் போலீசார் சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
    ×