search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thisayanvilai"

    • கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.
    • டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியாற்றும் வகையில் பல்வேறு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ராதாபுரம் அருகே உள்ள பாப்பாங்குளத்தை சேர்ந்த ராஜ் என்பவரது மனைவி சுபத்ரா தேவி (வயது24) என்பவர் நேற்று முன்தினம் இரவில் பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.

    அப்போது அங்கு டாக்டர்கள், நர்சுகள் இரவு பணியில் இல்லை. இதனால் குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்த நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பிரசவ வலியால் துடித்த சுபத்ரா தேவிக்கு தானாகவே அழகான பெண் குழந்தை பிறந்தது.

    அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சுபத்ரா தேவி மற்றும் குழந்தை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    சுமார் 1 மணி நேரமாக பிரசவ வலியால் கர்ப்பிணி பெண் துடித்த நிலையில் டாக்டர்கள் இல்லாததால் உறவினர்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் திசையன்விளை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் நுழைவு வாயில் கதவை இழுத்து பூட்டினர். டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட யாரையும் ஆஸ்பத்திரிக்குள் அவர்கள் அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்த நிலையில் தகவல் அறிந்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிய ராஜ்குமார், உதய லட்சுமி ஆகியோர் வந்து பொது மக்களை சமாதானம் செய்தனர்.

    ஆனாலும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் தலைமையில் குழுவினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்களிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இல்லாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என்று பெயர் பலகை மட்டும் பெரிதாக வைத்துள்ளீர்கள். ஆனால் டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.

    மேலும் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வந்தாலும் கூட, அருகில் உள்ள சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கோ அல்லது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கோ தான் சிகிச்சை பெறுவதற்கு அனுப்பி வைக்கிறீர்கள். எனவே 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

    இதையடுத்து ஜனவரி மாதத்திற்குள் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் உறுதி அளித்தார்.

    இதையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • திசையன்விளை அருகே உள்ள இடைச்சி விளையைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மெரினா (வயது 52).
    • இடைச்சி விளையில் இருந்து திசையன்விளைக்கு பஸ்ஸில் ஏறி சென்ற மெரினா அங்கு இறங்கியதும் கைப்பையை பார்த்துள்ளார்.

    நெல்லை:

    திசையன்விளை அருகே உள்ள இடைச்சி விளையைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மெரினா (வயது 52). இவர் சம்பவத்தன்று திசையன்விளையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக ரூ.1.5 லட்சம் பணம் மற்றும் 2 கிராம் கம்மல் ஆகியவற்றை ஒரு கைப்பையில் வைத்துக் கொண்டு வங்கிக்கு புறப்பட்டார்.

    இடைச்சி விளையில் இருந்து திசையன் விளைக்கு பஸ்ஸில் ஏறி சென்ற மெரினா அங்கு இறங்கியதும் கைப்பையை பார்த்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த பணம் மற்றும் நகை திருட்டு போயிருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டியதை அறிந்த மெரினா இது தொடர்பாக திசையன்விளை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திசையன்விளை அருகே உள்ள உவரியை அடுத்த வெம்மனங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவருக்கு 5 பெண் குழந்தைகளும், இசக்கிமுத்து(வயது 14) என்ற மகனும் உள்ளனர்.
    • இசக்கிமுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தான்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள உவரியை அடுத்த வெம்மனங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவருக்கு 5 பெண் குழந்தைகளும், இசக்கிமுத்து(வயது 14) என்ற மகனும் உள்ளனர். இசக்கிமுத்து 7-ம் வகுப்பு வரை படித்துள்ளான். இவன் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தான். இதனை அந்த வழியாக சென்றவர்கள் அவனை மீட்டு திசையன்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சிறுவன் இசக்கிமுத்து பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். இசக்கிமுத்து தனது தந்தையிடம், புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நே ஷனல் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • விழாவையொட்டி ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடையில் வந்திருந்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நே ஷனல் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் வரவேற்றார். ஆசிரியர்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இரு அணிகளாக பிரிந்து மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டு கேரள பாரம்பரிய நடனம் ஆடினார்கள். ஓணம் பண்டிகையின் சிறப்புகளை உரையாகவும், விழாவினை கொண்டாடு வதற்கான காரணத்தை குறுநாடகமாகவும் தனது பேச்சாற்றல் மற்றும் நடிப்பாற்றல் மூலம் மாணவர்கள் வெளிப்படுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து மாணவிகளின் நடனம் நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குநர் சவுமியா ஜெகதீஸ் மற்றும் முதல்வர் எலிசபெத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் வணிகவியல் துறை நடத்திய ஆளுமைப்பண்பு வளர்த்தல் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினர் ஆளுமை பண்பு வளர்த்தல்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    திசையன்விளை:

    திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் வணிகவியல் துறை நடத்திய ஆளுமைப்பண்பு வளர்த்தல் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கி பேசினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் சண்முகம் வரவேற்று பேசினார். மேலும் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் யமுனா சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுக உரை ஆற்றினார்.

    சிறப்பு விருந்தினராக மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஜெயக்குமார் கலந்துகொண்டு 'ஆளுமை பண்பு வளர்த்தல்' என்னும் தலைப்பில் 'ஆளுமை பண்பே நம் ஒவ்வொருவரின் சிறந்த தலைமை பண்பு' என ஒளிப்பட காட்டியின் மூலம் பண்படுத்துதல், வளர்ச்சி, மனநிலை குறித்து வகுப்புகள் நடத்தி சிறப்புரையாற்றினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஒயிட்டன் சகாயராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் வணிகவியல் துறை பேராசிரியர்கள் இந்துமதி, உடற்கல்வி இயக்குனர் சந்திரசேகர், கணிதத்துறை உதவி பேராசிரியர் சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை 3-ம் ஆண்டு மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் செய்திருந்தனர்.

    • திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் மஞ்சள் பை விழிப்புணர்வு முகாம் நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமையில் நடந்தது.
    • முகாமில் அனைத்து வீடுகளுக்கும் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து வைப்பதற்கு வசதியாக குப்பை தொட்டிகள் மற்றும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது.

    திசையன்வினை:

    திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் மஞ்சள் பை விழிப்புணர்வு முகாம் நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்வரன் முன்னிலை வகித்தார். சரவணகுமார் வரவேற்று பேசினார்.

    முகாமில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து வைப்பதற்கு வசதியாக குப்பை தொட்டிகள் மற்றும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது. பஜாரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கை பயன்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

    முகாமில் வட்டார ஒருங்கிணைப்பாளர் இசைக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், பஞ்சாயத்து செயலர் பிரேமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

    திசையன்விளை:

    திசையன்விளை மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடந்தது. பின்பு நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமை தாங்கினார். தொழில் அதிபர் விஜயேஸ்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் பரிசு வழங்கி பாராட்டி பேசினார். மேலும் கல்வி ஊக்க தொகையாக ரூ. 15 ஆயிரம் வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • ராதாபுரம் கிழக்கு ஒன்றியம் நவ்வலடி பஞ்சாயத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • இதில் பெருவாரியான மக்கள் தங்களின் அடையாள அட்டையை கொடுத்து தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.

    திசையன்விளை:

    தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன் பகுதியாக ராதாபுரம் கிழக்கு ஒன்றியம் நவ்வலடி பஞ்சாயத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ராதாபுரம் தொகுதி பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாநில வர்த்தக அணி துணை செயலாளர் தாமரை பாரதி மற்றும் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெருவாரியான மக்கள் தங்களின் அடையாள அட்டையை கொடுத்து தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் நவ்வலடி ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா சரவணகுமார், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் இசக்கி பாபு, தகவல் தொழில்நுட்ப அணி ராதாபுரம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் கெனிஸ்டன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, நவ்வலடி கிளை செயலாளர் தில்லை ராஜா, நவ்வலடி சரவணகுமார், கஸ்தூரிரெங்கபுரம் பாலசுப்ரமணியம், ராதாபுரம் அரவிந்தன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ராம் கிஷோர் பாண்டியன், லிங்கதுரை, முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், பொற்கிழி நடராஜன், குமார், ஸ்டாலின், பிரின்ஸ், டென்னிஸ், முத்தையா, வடிவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் அமுதா கார்த்திகேயன் தலைமையில் திசையன்விளையில் தீப்பந்தபோராட்டம் நடந்தது.
    • பெண்கள் தீப்பந்தத்தை ஏந்தியபடி மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    திசையன்விளை:

    ராகுல் காந்தி எம்.பி.பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று இரவு நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் அமுதா கார்த்திகேயன் தலைமையில் திசையன்விளையில் பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு தீப்பந்தபோராட்டம் நடந்தது. பெண்கள் தீப்பந்தத்தை ஏந்தியபடி மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    மகாத்மா காந்தி வேஷம் அணிந்து வந்தவரிடம் மத்திய அரசுக்கு எதிரான மனுக்களை கொடுத்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய அணிசெயலாளர் விவேக் முருகன் கலந்துகொண்டு பேசினார் போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மருதூர் மணிமாறன், விஜயபெருமாள், எஸ்.ஜி.ராஜன் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் வேலம்மாள், விமலா, பிரியா, லீலாவதி, லதா, ஸ்ரீதேவி, ஜெயசுதா, ராஜேஷ்வரி உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்

    • மாணவர்களின் அறிவுத்திறனை சோதித்தறியும் விதமாக அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.
    • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முதல்வரை சந்தித்து மாணவர் சேர்க்கையை உறுதி செய்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நேற்று நடைபெற்றது. மாணவர்களின் அறிவுத்திறனை சோதித்தறியும் விதமாக அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., மாணவர்களுக்கு வடிவங்கள், நிறங்கள், எண்கள், தமிழ், ஆங்கில எழுத்து அட்டைகள், பழங்கள், காய்கறிகளின் மாதிரிகள் போன்றவற்றை கொண்டு அறிவுத்திறன் சோதித்து அறியப்பட்டது.

    யு.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புவாரியாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் உள்ளடக்கிய வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டு மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடப்பட்டது. தொடர்ந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முதல்வரை சந்தித்து மாணவர் சேர்க்கையை உறுதி செய்த பின்னர் மனநிறைவுடன் சென்றனர்.

    • திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். டிரைவர்.
    • இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்துள்ளது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். டிரைவர். இவரது மனைவி அம்மா பொண்ணு (வயது 32). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

    மாலையில் வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3500 திருட்டு போயிருந்தது. உடனே அவர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதய லெட்சுமி வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொரு த்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திசையன்விளை ஜெயராஜேஷ் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி முதலாம் ஆண்டு விழா மற்றும் ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 32-வது ஆண்டு விழா நடந்தது.
    • விழாவில் அரசு பொதுத்தேர்வில் முதல் இடம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

    திசையன்விளை:

    திசையன்விளை ஜெயராஜேஷ் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி முதலாம் ஆண்டு விழா மற்றும் ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 32-வது ஆண்டு விழா நடந்தது. டாக்டர் ஜெகன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ராஜேஷ்வரன், பள்ளி நிர்வாக இயக்குனர் டாக்டர் அஜய் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி முதல்வர் ராஜேஷ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் அரசு பொதுத்தேர்வில் முதல் இடம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளில் பல்வேறு வகையான கலைநிகழ்சிகள் நடந்தது. மாணவி கேத்ரின் ரெஜினா நன்றி கூறினார்.

    ×