search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traders House"

    • திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை கீழத்தெருவை சேர்ந்தவர் சரவணன். பால் வியாபாரி.
    • பின்னர் அன்று இரவில் வீடு திரும்பிய அவர்கள் சுமார் 15 பவுன் நகைகளை வீட்டின் பீரோவில் இருந்த ரகசிய பகுதியில் வைத்து பூட்டி உள்ளனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை கீழத்தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 45). பால் வியாபாரி.

    நகை மாயம்

    அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளனர். இதற்கான கன்னிபூஜை கடந்த 21-ந்தேதி நடந்துள்ளது. அதில் பங்கேற்பதற்காக சரவணன் குடும்பத்தால் நகைகள் அணிந்து சென்றுள்ளனர்.

    பின்னர் அன்று இரவில் வீடு திரும்பிய அவர்கள் சுமார் 15 பவுன் நகைகளை வீட்டின் பீரோவில் இருந்த ரகசிய பகுதியில் வைத்து பூட்டி உள்ளனர். இந்நிலையில் நேற்று அந்த நகைகளை பார்த்தபோது அவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் திசையன்விளை போலீசில் புகார் அளித்தனர்.

    விசாரணை

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை வைக்கப்பட்டு இருந்த பீரோவில் வேறு எந்த பொருட்களும் திருடப்படவில்லை.

    எனவே அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்பவர்கள், நகை வைக்கப்படும் இடத்தை அறிந்தவர்கள் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×