search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Male corpse"

    • மோரூர் பிட் 1 கிராமம் அரசன் காட்டில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான புளியமர தோட்டம் உள்ளது.
    • இந்த தோட்டத்தில் உடல் முழுவதும் அழுகி சிதைந்த நிலையில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆண் பிணம் கிடந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் பிட் 1 கிராமம் அரசன் காட்டில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான புளியமர தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று இந்த தோட்டத்தில் உடல் முழுவதும் அழுகி சிதைந்த நிலையில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆண் பிணம் கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு சங்ககிரி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன் பேரில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த கிடந்த ஆணின் வலது கையில் சுமன் என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டு உள்ளது. அவர் பச்சை நிறத்தில் வெள்ளை நிற கட்டம் போட்ட முழு கை சட்டையும், அடர் நீல நிற ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்துள்ளார். மேலும் இவர் இறந்து சுமார் 3 முதல் 5 வாரம் இருக்காலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? எப்படி இறந்தார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கந்தர்வக்கோட்டை அருகேமுந்திரி காட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
    • கந்த ர்வகோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

     கந்தர்வகோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மஞ்ச பேட்டை கிராமத்தில் அற்புதபுரம் பெரியசாமிக்கு சொந்தமான முந்திரி காட்டில் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் விரைந்து சென்ற கந்தர்வ கோட்டை போலீ சார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக மஞ்ச ப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் கருப்பையன் கொடுத்த புகாரின் பேரில் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்றும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கந்த ர்வகோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • தளவாய் பாளையம் அருகே புது ஆற்றில் 35 மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ஆற்றில் மிதந்த உடலை கைபற்றிபிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை காவல் சரகம், தளவாய் பாளையம் அருகே புது ஆற்றில் 35 மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் மிதந்த உடலை கைபற்றிபிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் முடி வெட்டி முகவரம் செய்திருந்த நிலையில் இருந்தார்.

    இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் காணப்படவில்லை உடலில் காயம் எதுவும் இல்லாததால் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கி இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் இறநதவரின் உடல் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத ஆண் சடலங்கள் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக திடீர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இறந்தவர் மாநிறம், பிஸ்கட் கலர் கருப்பு கட்டம் போட்ட முழுக்கை சட்டையும் வெள்ளை கலர் வேஷ்டியும் அணிந்திருந்தார்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து திடீர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் மதுரை வடக்காவணி மூலவீதி பகுதியில் உடல் நலம் சரியில்லாமல் படுத்து கிடந்த வரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இறந்தவர் பெயர் வெங்கட்ராமன் (வயது 75), இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து திலதர் திடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே போல் மதுரை செனாய் நகர் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக மதிச்சியம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இறந்தவர் ரோஸ் கலர் அரக்கை சட்டையும், ப்ளூ கருப்பு கலர் கட்டப்பட்ட கைலியும் அணிந்திருந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென மாயமானார்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    பேரணாம்பட்டு அடுத்த மொரசப்பல்லியை சேர்ந்தவர் உமாபதி (வயது 55). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

    இவரது மனைவிகள் இருவரும் பிரிந்து சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில், கடந்த 7 மாதங் களாக குடியாத்தம் அருகே உள்ள பக்கிரிபல்லியில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். மேலும், இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று முன்தினம் இவர் திடீரென மாயமானார். இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் உமாபதி இறந்த நிலையில் பிணமாக மிதந்து கிடந்தார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உமாபதி உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வளத்தூர்- குடியாத்தம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் உஷாராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராம அலுவலர் மோகன் பிரபாகர் இது குறித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • அங்கு இறந்து கிடந்தவர் 65 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும், இறந்து சுமார் 20 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதும் தெரிகிறது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் அருணாச்சலபுரத்திற்கும்-கொம்புதுறைக்கும் இடையில் அடர்ந்த உடைமர காட்டுப்பகுதி உள்ளது. இங்கு அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக நேற்று தகவல் பரவியது.

    காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராம அலுவலர் மோகன் பிரபாகர் இது குறித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்தவர் 65 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும், இறந்து சுமார் 20 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதும் தெரிகிறது.

    மேலும் அரக்கு கலர் சட்டை அணிந்த நிலையிலும், அருகில் அவிழ்ந்த நிலையில் லுங்கியும் கிடந்தன. அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்?காட்டிற்குள் வந்து திசை தெரியாமல் தவித்து மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்கிற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • பச்சை நிற லூங்கி கட்டி இருந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடிக்கும் கண்ணமங்கலம் இடையில் நேற்று இரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்ததாக காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் காட்பாடி ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ெரயில் மோதி இறந்து கிடந்தவர் கட்டம் போட்ட சட்டையும் பச்சை நிறம் லூங்கி கட்டி இருந்தார்.

    இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இறந்தவர் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அடுக்க ம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் மீட்கப்பட்டது.
    • வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 6-வது பிளாட்பாரம் அருகே 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் இறந்து கிடந்தார். அவர் கருப்பு, வெள்ளை கோடு போட்ட டி-சர்ட் அணிந்திருந்தார். இதேபோல் மாட்டுத்தாவணி டவுன் பஸ் நிறுத்தம் அருகே 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். வெள்ளை சட்டை அணிந்திருந்தார். இவர்களை பற்றி விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி ேபாலீசார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்த நிலையில் கிடந்தார்.
    • அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில், கடந்த 4-ந் தேதி மாலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்த நிலையில் கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் கிடைத்தன.
    • இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தோட்டிலோவன்பட்டி பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக கஞ்சம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கணபதிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தபோது உடலில் காயங்களுடன் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. இதையடுத்து சாத்தூர் தாலுகா போலீசில் கணபதி புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு நிலத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்த அந்த நிலத்தின் உரிமையாளர் இ.முத்துலிங்காபுரம் கிராம நிர்வாக அதிகாரி மணிமேகலாவுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கிராம உதவியாளர் மாரீஸ்வரியுடன் சம்பவ இடத்திற்கு சென்று மணிமேகலா விசாரித்தார். அதில் இறந்தவர் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
    • மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் முருகன் கோவில் தெப்பகுளத்தில் ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை இன்று காலை அங்கு குளிக்க சென்றவர்கள் பார்த்து வள்ளியூர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் குளத்தில் மிதந்து கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    அதனை போலீசார் கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த வாலிபர் யார்? குளத்தில் குளிக்க வந்த இடத்தில் மூழ்கி பலியானாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×