என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்டவாளத்தில் ஆண் பிணம்
- யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
வளத்தூர்- குடியாத்தம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் உஷாராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






