search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: உடன்குடி தேரியூர் அணிக்கு முதல் பரிசு
    X

    வெற்றி பெற்ற ஒரு அணிக்கு பரிசு தொகை, சுழற்கோப்பையை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் வழங்கிய போது எடுத்த படம்

    மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: உடன்குடி தேரியூர் அணிக்கு முதல் பரிசு

    • கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இடையன்குடி எலைசா கால்டுவெல் கிரிக்கெட் கிளப் சார்பாக 13-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
    • உடன்குடி தேரியூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பரிசுத்தொகை ரூ.20,013, சுழற்கோப்பையினையும், வழங்கினார்.

    திசையன்விளை:

    கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இடையன்குடி எலைசா கால்டுவெல் கிரிக்கெட் கிளப் சார்பாக 13-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 32- க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.இந்த போட்டி 6 நாட்களாக நடைபெற்றது. இந்த கிரிக்கெட் தொடரின் பரிசளிப்பு விழாவிற்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமை தாங்கினார்.

    விழாவிற்கு இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் ஜேகர், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற உடன்குடி தேரியூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பரிசுத்தொகை ரூ.20,013, சுழற்கோப்பையினையும், 2-ம் பரிசை எம்.எம். அணிக்கு ரூ.15,013, சுழற்கோப்பையும் வழங்கினார். 3-வது பரிசை ஐ- மேக்ஸ் ஸ்போர்ட் கிளப் அணிக்கு ரூ.10,013 பரிசுத் தொகையும், சுழற்கோப்பையும், ராதா புரம் ஊராட்சி மன்ற கூட்ட மைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் இடையங்குடி ஜெபகுமார், ராம் கிஷோர் பாண்டியன், சங்கர்,எழில் ஜோசப், குமார், முத்தையா,சுகுமார் ஜெபதுரை,சுகிர்தராஜ், பவுல், ரமேஷ், தேவ அலெக்ஸ் அருள், சாம், ரமேஷ், கணிபாய், அமுதன், ஜெபகுமர், ராஜா, சுஜா, வினோகார், ரூபன் மற்றும் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×