search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VSR Jagathees"

    • க. உவரியில் புகழ்பெற்ற சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது.
    • இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை, ஜூன். 4-

    க. உவரியில் புகழ்பெற்ற சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்தார். பக்தர்களுக்கு உணவுகளை வழங்கி இந்த சிறப்பு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரிவர உள்ளனவா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் ராஜன், கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் வாழவந்த கணபதி பாலசுப்ரமணியம், எழில் ஜோசப், புளியடி குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு விருந்தினராக அம்பை ஒன்றிய சேர்மன் பரணிசேகர் கலந்து கொண்டார்.
    • தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் எடுத்து கூறினார்.

    திசையன்விளை:

    தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைமையிலான 2 ஆண்டு கால ஆட்சி முடிவடைந்து மூன்றாம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின் படி, தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சியின் ஈடில்லா ஆட்சி தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக ராதாபுரம் கிழக்கு ஒன்றியத்தில் க.புதூர் பஞ்சாயத்தில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபிந்தர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தலைமை கழக பேச்சாளரும், அம்பை ஒன்றிய பெருந்தலைவர் பரணிசேகர் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் கலந்து கொண்டு பேசுகையில், தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை எடுத்து கூறினார்.மேலும் அரசு எவ்வாறு அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது.இலவச மகளிர் திட்டம் மற்றும் அரசு அமைந்த பிறகு பகுதிகளில் நடைபெற்ற, நடந்து முடிந்த மற்றும் நடக்க உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எடுத்து கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் அருண் தவசு, ஒன்றிய கவுன்சிலர் நட ராஜன், இசக்கி பாபு, பிரேமா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் நாகமணி மார்த்தாண்டம் அமைச்சியார், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் கெனி ஸ்டன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முரு கன், ஊராட்சி மன்ற தலை வர்கள் ராதிகா சரவண குமார், பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், சாந்தா மகேஷ்வரன், மணி கண்டன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், நடேஷ் அரவிந்த், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜ சேகர், பொற்கி ழி நடராஜன், முன்னாள் ஊராட்சி செயலாளர் ராம கிருஷ்ணன், ராம் கிஷோர் பாண்டியன், சங்கர், எழில் ஜோசப், டெ ன்னிஸ், காமில், சாகுல், கோகுல், சுடலை மணி, முத்தையா, ஸ்டா ன்லி, சுபாஷ், சுரேஷ், முத்து, ராஜா, வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இடையன்குடி எலைசா கால்டுவெல் கிரிக்கெட் கிளப் சார்பாக 13-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
    • உடன்குடி தேரியூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பரிசுத்தொகை ரூ.20,013, சுழற்கோப்பையினையும், வழங்கினார்.

    திசையன்விளை:

    கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இடையன்குடி எலைசா கால்டுவெல் கிரிக்கெட் கிளப் சார்பாக 13-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 32- க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.இந்த போட்டி 6 நாட்களாக நடைபெற்றது. இந்த கிரிக்கெட் தொடரின் பரிசளிப்பு விழாவிற்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமை தாங்கினார்.

    விழாவிற்கு இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் ஜேகர், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற உடன்குடி தேரியூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பரிசுத்தொகை ரூ.20,013, சுழற்கோப்பையினையும், 2-ம் பரிசை எம்.எம். அணிக்கு ரூ.15,013, சுழற்கோப்பையும் வழங்கினார். 3-வது பரிசை ஐ- மேக்ஸ் ஸ்போர்ட் கிளப் அணிக்கு ரூ.10,013 பரிசுத் தொகையும், சுழற்கோப்பையும், ராதா புரம் ஊராட்சி மன்ற கூட்ட மைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் இடையங்குடி ஜெபகுமார், ராம் கிஷோர் பாண்டியன், சங்கர்,எழில் ஜோசப், குமார், முத்தையா,சுகுமார் ஜெபதுரை,சுகிர்தராஜ், பவுல், ரமேஷ், தேவ அலெக்ஸ் அருள், சாம், ரமேஷ், கணிபாய், அமுதன், ஜெபகுமர், ராஜா, சுஜா, வினோகார், ரூபன் மற்றும் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ராதாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள இடிந்தகரை மற்றும் கூத்தன்குழி ஆகிய பஞ்சாயத்துகளில் சுமார் ரூ.65 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
    • பல்வேறு நிதிகளின் கீழ் இடிந்தகரையில் சிமெண்ட் சாலை, மீன் வலை கூடம், மீன் விற்பனை நிலையம், அங்கன்வாடி மையம், விஜயாபதி பஞ்சாயத்து குறிஞ்சிகுளத்தில் பேருந்து நிறுத்தத்திற்கும், கூத்தன்குழியில் வண்ண கற்கள் பதிக்கும் பணிக்கும், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள இடிந்தகரை மற்றும் கூத்தன்குழி ஆகிய பஞ்சாயத்துகளில் சுமார் ரூ.65 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    பல்வேறு நிதிகளின் கீழ் இடிந்தகரையில் சிமெண்ட் சாலை, மீன் வலை கூடம், மீன் விற்பனை நிலையம், அங்கன்வாடி மையம், விஜயாபதி பஞ்சாயத்து குறிஞ்சிகுளத்தில் பேருந்து நிறுத்தத்திற்கும், கூத்தன்குழியில் வண்ண கற்கள் பதிக்கும் பணிக்கும், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜா, மவுலின், படையப்பா முருகன், இசக்கி பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் சகாயராஜ், வளர்மதி, முருகேசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சூசை அந்தோணி, மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ், சரவணகுமார், சந்தியாகு, ராஜேஷ், வளன், பாப்டிஸ், ரீகன், யேசுதாஸ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், சங்கர், எழில் ஜோசப், குமார், காமில், முத்தையா, டென்னிஸ், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×