search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tysaiyanvilai"

    • குழந்தைகளுக்கு நடனம், நாடகம் ஆகியவற்றை ஆசிரியர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
    • நேருவின் பிறந்த நாள் குறித்து ஆசிரியர்கள் எடுத்து கூறினார்கள்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார்.

    குழந்தைகளுக்கு நடனம், நாடகம் ஆகியவற்றை ஆசிரியர்கள் தொகுத்து வழங்கினார்கள். குழந்தைகளுக்கு ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையின் முக்கியவத்துவம் குறித்து சிறு நாடகம் மூலம் அறிவுறுத்தப்பட்டது. நேருவின் பிறந்த நாள் குறித்து ஆசிரியர்கள் எடுத்து கூறினார்கள். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு ஒரு குடும்பத்தினர் இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தனர்.
    • செல்வக்கனி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கார்கள் மீது மோதியது.

    திசையன்விளை:

    குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு ஒரு குடும்பத்தினர் இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த கார் திசையன்விளை அருகே பெட்டைகுளம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, ரட்சகர் நகரில் இருந்து ஒரு கார் மெயின்ரோட்டில் ஏறியது.

    அப்போது அந்த 2 கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிய நிலையில், அந்த வழியாக உவரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் முதல்நிலை பெண் ஏட்டு செல்வக்கனி(வயது 33) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கார்கள் மீது மோதியது. இதில் செல்வக்கனி காயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
    • பெண்களுக்கான போட்டியில் வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி 2-ம் இடத்தை பிடித்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் தக்ஷன் சகோதயா குழுமத்தினர் ஒருங்கிணைந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான இறகு பந்து போட்டிகள் நடத்தியது. 14, 17, 19 வயதிற்கு உட்பட்டவர் பிரிவுகளின் கீழ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் அதிக புள்ளிகளை பெற்ற நாகர்கோவில் லிட்டில் சேம்பியன் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. நாகர்கோவில் ஆர்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளி 2-ம் இடத்தை பிடித்தது. பெண்களுக்கான போட்டியில் 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளி அதிக புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி அதிக புள்ளிகளுடன் 2-ம் இடத்தை பிடித்தது.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ், முதல்வர் பாத்திமா எலிசபெத் ஆகியோர் பாராட்டி கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

    • தேவர் உருவப்படத்துக்கு வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    திசையன்விளை:

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராதாபுரத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    விழாவில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், மணிகண்டன், ஒன்றிய அவைத்தலைவர் ராமையா, மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா,இராதாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் அரவிந்தன், ராதாபுரம் நீர்பயன்படுத்துவோர் சங்க தலைவர் அய்யப்பன், வர்த்தக அணி கலைவாணி முருகன், கிறிஸ்டோபர், ஊராட்சி மன்ற துணை தலைவர் சபாபதி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம் கிஷோர் பாண்டியன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், பொற்கிழி நடராஜன், சதீஷ், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சுயம்புலிங்கசுவாமி கோவில் முன்பு 108 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது
    • ராஜகோபுர பணி 32 அடி நிறைவடைந்த நிலையில் நேற்று காலை உத்திரம் அமைக்கும் பணி நடந்தது.

    திசையன்விளை:

    தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் பிரசித்தி பெற்றது திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் இங்கு சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.

    இக்கோவில் முன்பு 108 அடி உயரத்தில் 9 நிலைகொண்ட முழுவதும் கருங்கற்களால் ஆன ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    கோபுர நிலையில் 108 சிவதாண்டவத்தை நினைவுகூறும் வகையில், கோபுர நிலைகளில் 108 சிவதாண்டவ சிற்பங்கள் அழகிய கலை வேலைப் பாடுகளுடன் அமைக் கப்பட்டுள்ளது.

    ராஜகோபுர பணி 32 அடி நிறைவடைந்த நிலையில் நேற்று காலை உத்திரம் அமைக்கும் பணி நடந்தது. முன்னதாக கோ பூஜை நடந்தது.

    பின்பு கோபுர உத்தி ரத்திற்கு மாலை அணி வித்து மலர்தூவி பால், பன்னீர், தேன் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்பு 12 டன் எடை கொண்ட 10 கருங்கல் உத்திரங்களை கிரேன் மூலம் நிறுவும் பணி வானவேடிக்கை முழங்க நடந்தது.

    விழாவில் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன், பேராசிரியை நிர்மலா ராதாகிருஷ்ணன், ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன், துணைத்தலைவர் ்கனக லிங்கம், செயலாளர் வெள்ளையா நாடார், பொருளாளர் சுடலை மூர்த்தி, ராஜ கோபுரகமிட்டி உறுப்பினர் ராஜாமணி, தேர் திருப்பணி குழு செயலாளர் தர்மலிங்க உடையார், ஆடிட்டர் ஜீவரத்தினம், ஸ்தபதி சந்தானகிருஷ்ணன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • வரதராஜனுக்கு இன்று அதிகாலை வயிற்றுவலி அதிகமாக இருந்துள்ளது.
    • வாழ்க்கையில் வெறுப்படைந்த வரதராஜன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திசையன்விளை:

    திசையன்விளை மணவிவிளை யாதவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 33). தொழிலாளி. இவருக்கு சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு இருந்துள்ளது.

    இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணம் ஆகவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை வயிற்றுவலி அதிகமாக இருந்துள்ளது. திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

    எனினும் வயிற்றுவலி குணம் ஆகவில்லை இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் இன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயதசமியை முன்னிட்டு வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் 2 நாட்கள் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
    • வி.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு நேற்றும், இன்றும் 2 நாட்கள் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மாணவர் சேர்க்கையின் போது குழந்தைகளை நெல்மணி யில் 'அ'கரம் எழுத வைத்து குழந்தைகள் தங்கள் கற்றல் திறனில் முதல் படியை வி.எஸ்.ஆர். பள்ளியில் எடுத்து வைத்தனர். இதனை புகைப்படம் எடுத்து பெற்றோரிடம் கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றும், அதிக மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு 2023-24 - ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் பிரி.கே.ஜி.யில் மற்றொரு பிரிவு தொடங்கப் பட்டுள்ளது என்றும் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.

    சரஸ்வதி பூஜை விஜயதசமி விழா

    வி.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் முன்னிலை வகித்தார். இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் குத்து விளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவில் பள்ளியின் முதல்வர் அன்னத்தங்கம் மற்றும் ஆசிரிய -ஆசிரியை கள் கலந்து கொண்டனர்.

    சரஸ்வதி பூஜை அன்று மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட மாண வர்களின் விரலை பிடித்து நெல்மணியில் எழுத ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தனர்.

    மாணவர்கள் ஆர்வமு டன் பங்கேற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசு கொடுக்கப்பட்டது. இன்றும் சிறப்பு மாணவர் சேர்க்கை பிரி.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை நடை பெறுகிறது. 

    • கூட்டத்தில் சுரேஷ் மனோகரன் கலந்து கொண்டு பாகமுக வர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
    • நாடும் நமதே, நாற்பதும் நமதே என்பதை உறுதி படுத்தும் வகையில் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும்.

    திசையன்விளை:

    ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாகமுகவர்கள் ஆலோ சனை கூட்டம் திசையன் விளை வி.எஸ்.ஆர். மாலில் அமைந்துள்ள கெட்டி மேளம் மகாலில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக் குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரு மான சுரேஷ் மனோகரன் கலந்து கொண்டு பாகமுக வர்களுக்கு ஆலோசனை களை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பேசுகை யில், வருகிற பாராளு மன்ற தேர்தலில் தலைமை கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதே பாகமுகவர்களின் முக்கிய நோக்கமாக கருத்தில் கொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.

    தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி தி.மு.க. வெற்றி பெற பணி களை மேற்கோள்வதோடு நாடும் நமதே, நாற்பதும் நமதே என்பதை உறுதி படுத்தும் வகை யில் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் நாகமணி மார்த்தாண்டம், அமைச்சியார, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜான்சன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட பொறியா ளர் அணி துணை அமைப்பா ளர் கோகுல், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமை ப்பாளர் நெல்சன், நவ்வலடி சரவணகுமார், மாவட்ட பிரதிநிதிகள் ராஜன், வேலப்பன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, அல்போன்ஸ், அந்தோணி, முன்னாள் ஊராட்சி செயலாளர்கள் பால்ராஜ், சொக்கலிங்கம், முன்னாள் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங் கிணைப்பாளர் எஸ்தாக் கேனிஸ்டன், செயற்குழு உறுப்பினர் ராம் கிஷோர் பாண்டியன், பொற்கிழி நடராஜன், திராவிடமணி, ஜோசப், மாவட்ட நெசவா ளர் அணி துணை அமைப் பாளர் ஞானராஜ், ஹேர்மஸ், சார்லஸ், ரமேஷ், காந்தி, முத்து, எழில் ஜோசப், புளியடி குமார், முத்து, ராஜா, சாகுல் ஹமீது, முத்தையா, வடிவேல், பாகா முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • சுயம்புலிங்கசுவாமி கோவில் கடற்கரையில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நாட்டுநல பணி திட்ட மாணவ -மாணவிகள் பனைவிதைகளை விதைத்தனர்.

    திசையன்விளை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி சார்பில் உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் கடற்கரையில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மேஜர்ராஜன் தலைமை தாங்கினார். உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், கல்லூரி தமிழ் துறை தலைவர் நிர்மலா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நாட்டுநல பணி திட்ட மாணவ -மாணவிகள் பனைவிதைகளை விதைத்தனர். இதில் நாட்டு நலப்பணி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலபணி திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளியப்பன் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • துரைகுடியிருப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
    • 5 லட்சம் மதிப்பீட்டில் தலா 2 பேவர் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் அமைக்கப்பட உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    பேவர் பிளாக் சாலை

    அதன்படி பரமேஸ்வரபுரம் பஞ்சாயத்து முத்தாரம்மன் கோவில் தெருவில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைக்கு அடிக்கல், சமூகரெங்கபுரம் பஞ்சாயத்தில் ரூ. 4.60 லட்சம் மதிப்பீட்டில் பேவர் சாலை பணி, துரைகுடியிருப்பில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க

    தொட்டிக்கும், 5 லட்சம் மதிப்பீட்டில் தலா 2 பேவர் பிளாக் சாலைக்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள மின்மாற்றியினை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்ததோடு, விஜயாபதி பஞ்சாயத்து தோமையார்புரம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியினையும் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஒன்றிய

    கவுன்சிலர்கள் படையப்பா முருகன், இசக்கி பாபு, ஆவுடை பாலன், ஊராட்சிமன்ற தலைவர்கள் அந்தோனி அருள், இந்திரா மின்னல், மணிகண்டன், ராதாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் அரவிந்தன், கஸ்தூரிரெங்க புரம் பாலன், நவ்வலடி சரவண குமார், உறுமன்குளம் பொன் இசக்கி பாண்டியன், சிதம்பரபுரம் முருகன், ஒன்றிய அவைத்தலைவர் ராமையா, மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், வேலப்பன், ஒன்றிய துணை செயலாளர் செழியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், கல்கண்டு, கல்யாணி, சமுகை கருணை ராஜ், முருகேஷ், ரீகன், எழில் ஜோசப், முத்தையா, முத்து மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஷ் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தார்.
    • மாணவர்கள் இணைந்து களிமண்ணாலான விநாயகர் சிலையை செய்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஷ் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் பங்கேற்று பூஜையை வழிநடத்தினார்.

    மாணவர்கள் இணைந்து களிமண்ணாலான விநாயகர் சிலையை செய்தனர். விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, பொரி, பழங்கள் ஆகியவற்றை படைத்து வழிபட்டனர். விநாயகர் சிலையின் முன்பு ஆசிரியர்கள் மலர்களால் கோலமிட்டனர். அருகம்புல், எருக்கலையால் தொடுத்த மாலைகளை விநாயகருக்கு அணிவித்தனர். விநாய கருக்கு பூஜை செய்து வழிபட்ட பின்னர் அனை வருக்கும் பொரி, கொழுக்கட்டை வழங்கினர். விழா வில் ஆசிரியர்கள், அலு வலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அண்ணா சிலைக்கு மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ராதாபுரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சமூகரெங்க புரத்தில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அண்ணா உருவபடத்திற்கு மாலை அணிவித்து கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ஜெபஸ்டின் ஆனந்த், மாவட்ட அறங்கா வல் குழு உறுப்பினர் முரளி, மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஒன்றிய கவுன்சிலர் இசக்கி பாபு, படையப்பா முருகன், பரிமளம், ஞானசர்மிளா கெனிஸ்டன், ஊராட்சி தலை வர்கள் அந்தோனி அருள், முருகேசன், மணி கண்டன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், வேலப்பன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, நவ்வலடி சரவணகுமார், ராதாபுரம் கூட்டுறவு சங்கத்தலைவர் அரவிந்தன், சிதம்பரபுரம் முருகன், மாவட்ட சிறுபா ன்மை அணி மூர்த்தி, கருனை ராஜ், தக்காளி குமார், கல்கண்டு, சார்லஸ் பெஸ்கி, திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமை ப்பாளர் நெல்சன், புளியடி குமார், எழில் ஜோசப், காமில், சாகுல் ஹமீது, முத்து, முத்தையா உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×