என் மலர்
உள்ளூர் செய்திகள்

திசையன்விளை- கோட்டைகருங்குளம், நாங்குநேரி பகுதிகளில் நாளை மின்தடை
- திசையன்விளை, நாங்குநேரி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- கோவநேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் தடைப்படும்.
வள்ளியூர்:
வள்ளியூர் செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட திசையன்விளை, கோட்டைகருங்குளம் மற்றும் நாங்குநேரி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இதனால் திசையன்விளை துணைமின் நிலையத்திற்குட்பட்ட திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, கோட்டைகருங்குளம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவம்பலாபுரம், நான்குநேரி துணைமின் நிலையத்திற்குட்பட்ட நாங்குநேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி மற்றும் பக்கத்து கிராமங்களில் மின் வினியோகம் தடைப்படும்.
மேலும் மின்விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையினை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






