search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Training"

    • ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
    • குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும்.

    தங்களுடைய குழந்தைகளின் வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். இதன் காரணமாக தங்களின் பொருளாதார நிலையைத் தாண்டியும் செலவு செய்து குழந்தைகளை படிக்க வைப்பார்கள். ஆனால் குழந்தைகளின் ஆளுமைத் திறனை வளர்க்க, ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும். விளையாட்டு, கைவினை மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பிற செயல்பாடுகளிலும் அவர்களுக்குப் போதுமான பயிற்சிகளை வழங்க வேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் சமூகத் திறன்களை மேம்படுத்த முடியும்.

    தன்னம்பிக்கை, குழு மனப்பான்மை விடாமுயற்சி, தலைமைத்துவம், விட்டுக் கொடுத்தல், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் போன்ற பண்புகளை வளர்க்க முடியும். ஏட்டுப்பாடங்களால் கற்றுக்கொடுக்க முடியாத வாழ்க்கை பாடங்களை, பல்வேறு கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

    அந்த வகையில் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்று நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டவையே ஆய கலைகள்' நடனம், இசைக்கருவி மீட்டுதல், ஒப்பனை செய்தல், ஓவியம் வரைதல், சிற்பம் செதுக்குதல் என இதில் 64 வகையான கலைகள் உள்ளன. அவற்றில் இந்த கால வாழ்க்கை முறைக்கு தகுந்த சில கலைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பயனுள்ளதாக அமையும். அதைப் பற்றிய தகவல்கள் இதோ....

     பூ தொடுத்தல்:மலர் அலங்காரம், மலர் வடிவமைப்பு, மலர் ஓவியம் மற்றும் பூக்களால் சிற்பம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களுக்கு அடிப்படையாக இருப்பது பூத்தொடுத்தல் அல்லது பூக்கட்டுதல் ஒன்று போல உள்ள பூக்களை தேர்ந்தெடுத்து, வரிசையாக வைத்து அவற்றை மாலையாக கட்டும் செயலில், வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விஷயங்கள் உள்ளன. இதன்மூலம் கண்களுக்கும். கைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படும்.

     ஓவியம் வரைதல்:

    குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும். ஒருங்கிணைப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் ஓவியக்கலை பயன்படுகிறது. குழந்தைகள் சுதந்திரமாக சவால்களை எதிர்கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்கவும், தங்களது செயல்பாடுகளை மதிப்பீடு செய்யவும் ஓவியக்கலையின் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

    உதாரணத்துக்கு, ஓர் ஓவியத்துக்கு எந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தெந்த நிறங்களை எவ்வாறு கலக்க வேண்டும். ஓவியத்தில் ஏற்படும் பிழைகளை எவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என்பனவற்றை குழந்தைகள் சிந்திப்பார்கள். இது அவர்கள் வாழ்க்கையிலும் பிரச்சினைகளுக்குரிய தீர்வை கண்டறிய உதவும்.

    மண்பாண்டங்கள் செய்தல்:

    களிமண்ணைக் கொண்டு பல்வேறு பொருட்களை வடிவமைக்கும் கலையானது, குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும். களிமண்ணை பக்குவமாக கையாளும் போதுதான் அதைக் கொண்டு பொருட்களை வடிவமைக்க முடியும். மனதையும், உடலையும் சமநிலையில் வைத்து சிந்திக்க இந்தக் கலை கற்றுக்கொடுக்கிறது. குழந்தைகளின் மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் களிமண்ணுக்கு உண்டு.

    மண்பாண்டங்கள் செய்வதற்கு கற்றுக்கொடுக்கும் வகுப்புகளில் கலந்துகொள்ளும் குழந்தைகள், மிகவும் அமைதியாக வடிவங்களை உருவாக்கிக் கொண்டு இருப்பதை கவனிக்க முடியும். அதேநேரம் அவர்களின் ஆற்றலும், செயலும் வேகமாக இருக்கும். இவ்வாறு சமைத்தல், தையல் நீச்சல், இல்லத்தை தூய்மையாக வைத்திருத்தல் என ஒவ்வொரு கலையும் குழந்தைகளின் ஆளுமைத்திறனை வளர்ப்பதற்கு உதவுகின்றன.

    • தென்னை சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
    • இதில் பங்கேற்கும் விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் டாக்டர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    நாமக்கல் மோகனூர் சாலை, கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை காலை, 10 மணிக்கு, தென்னை சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில், மண் பரிசோதனையின் முக்கியத்துவம், தென்னை நாற்றாங்கால் பராமரிப்பு, குறுகிய காலத்தில் வளரும் தென்னையின் வகைகள், லாபகரமான முறையில் தென்னை வளர்ப்பு, தென்னை ஊட்டச்சத்து, நீர், களை மற்றும் பூச்சி மேலாண் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

    இதில் பங்கேற்கும் விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள வரும் விவசாயிகள் கட்டாயம் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எண்ணும் எழுத்தும் திட்டமானது 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலை தாலுகாவில் திருமூர்த்திநகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், உடுமலை வட்டார வள மையம் ஆகியோரது ஒருங்கிணைப்பில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தளி ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. 2022 -ம் கல்வி ஆண்டில் கொரோனா பேரிடரால் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்யும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டமானது தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    செயல்பாடுகளின் மூலமாக பாட கருத்தினை கற்பித்து கற்றல் விளைவினை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சி கையேடும், மாணவர்களுக்கு பயிற்சி நூல்களும் வழங்கப்பட்டு எண்ணும் எழுத்தும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சட்டமன்ற கூட்டத் தொடரில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் எண்ணும் எழுத்தும் திட்டமானது 2023-2024 -ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்காக 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. உடுமலையில் நடைபெற்ற பயிற்சியை உடுமலை வட்டார கல்வி அலுவலர்கள் சரவணகுமார், ஆறுமுகம், மனோகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து ஆங்கிலம், தமிழ் பாடத்திற்கு நடைபெற்ற பயிற்சியை சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவி பேராசிரியர் ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி ஆசிரியர்களிடம் எடுத்து உரைத்தார். திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், முதுநிலை விரிவுரையாளர்கள் பாபி இந்திரா, சுப்பிரமணியம் பயிற்சியைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்கள்.

    இறுதியாக வட்டார வளமைய ஆசிரியர் ராம் பிரசாத் நன்றி கூறினார். வட்டார ஆசிரியர்கள் ஜனகம், ஜெயந்தி, ரேணுகாதேவி, புஷ்பம், சரஸ்வதி, செந்தில் நாயகி, கிருஷ்ணகுமார், சத்யராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் செய்து இருந்தனர்.

    • சென்னை மேக்மிலன் நிறுவன உறுப்பினர் செல்வகுமார் பயிற்சி அளித்தார்.
    • கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி. எஸ். ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை மேக்மிலன் நிறுவன உறுப்பினர் செல்வகுமார் பயிற்சி அளித்தார்.

    இதில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்றனர். பாலர் கல்வி, தொடக்க கல்வி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை கல்வி என்ற அடிப்படையில் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது.

    மேலும் வருகிற கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக எந்தெந்த நூல்களை பயன்படுத்தலாம் என்றும், அவர்களின் கையெழுத்து சீர்பெற கையெழுத்து பயிற்சி ஏடுகளை தொடக்கக் கல்வி நிலையிலேயே அறிமுகப்படுத்தி இந்த பயிற்சிகள் தொடர்ந்து அளிப்பது குறித்தும் கலந்தாய்வு செய்தனர். இக்கூட்டம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பள்ளியின் முதல்வரிடம் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    • 3-வது தளத்தில் இருந்து போலீஸ் கமிஷனர் கயிறு கட்டி இறங்கினார்
    • அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும் 30 போலீசார் தேர்வு செய்யப்பட்டனர்.

    கோவை,

    மர்ம நபர்களால் யாராவது கடத்தப்பட்டா லோ, தீவிரவாதிகளால் மால்கள், ஓட்டல்களில் பிணைக்கைதியாக அடைக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, சம்பவ இடத்துக்கு சென்று, பாதிக்கப்பட்டோரை மீட்க சிறப்பு பயிற்சிகள் தேவைப்படுகின்றது.

    இந்த பயிற்சியை, கோவை மாநகர போலீசாருக்கு அளிக்க கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும் 30 போலீசார் தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களுக்கு எஸ்.டி.எப். குழுவினர் பயிற்சி அளித்தனர். அவர்கள் போலீசாருக்கு அடுக்குமாடி கட்டிடங்களில் கயிற்றின் மூலம் மேலே ஏறுவது, , அங்கிருந்து கயிற்றின் மூலம் விரைவாக கீழே இறங்குவது, ஆட்களை மீட்டு கொண்டு வருதல், பிணைக்கைதியாக பிடிபட்டவர்களை மீட்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    மேலும் துப்பாக்கிகளை கையாளுவது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. அதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் பயிற்சி பெற்ற போலீசார், தாங்கள் கற்றுக்கொண்ட திறமைகளை வெளிப்ப டுத்தினர்.

    அதனை போலீஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் அடுக்கு மாடி கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து கயிறு மூலம் கீழே இறங்கி போலீசாரை உற்சாகப்படுத்தினார்.

    இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, கயிறு மூலம் அடுக்கு மாடி கட்டிடங்களில் ஏறி, இறங்கும் பயிற்சி, போலீசில் சேர்ந்தபோது அளிக்கப்பட்டது. அதை வெளிப்படுத்தும் வாய்ப்பாக, கோவையில் நடந்த இந்த பயிற்சி அமைந்தது என்றார்.

    நிகழ்ச்சியின் முடிவில் போலீஸ் கமிஷனர் பயிற்சி பெற்ற போலீசார் மற்றும் எஸ்.டி.எப்., குழுவினருக்கு நினைவு பரிசினை வழங்கினார். 

    • மீனவ இளைஞர்களுக்கு இலவச சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
    • தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும்.

    ராமநாதபுரம்

    தமிழக கடலோர குழும ஆய்வாளர் கனகராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தவும், அவர்களை இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பல் படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும் இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேர்ப்பதற்கு ஏதுவாக (வழிகாட்டுதல்) இலவச சிறப்புப்பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப் படும் என்று முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவித்தார்.

    அதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரையிலான காலத் தில் நடத்தி முடிக்கப்பட்டது.

    2-வது அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு நடப்பாண்டில் பிப்ரவரி-2023 மாத பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளது.அதன்படி கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்படவுள்ள 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியுள்ள மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவே ற்கப்படுகின்றன.

    மேற்படி விண்ணப்ப படிவங்களை சம்மந்தப் பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவல கங்களிலிருந்தும், கடலோர பாதுகாப்பு குழும ஆய்வா ளர் அலுவலகங்களிலிருந்தும், மேலும் மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், ரேசன் கடைகள் ஆகிய இடங்களி லிருந்தும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். https://drive.google.com/drive/folders/1I8xcdsoXM9RH-O--ySMT2wJCoEXtWskh?usp=sharing என்ற இணையதள முக வரியிலிருந்து பதி விறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    மேற்படி பயிற்சி வகுப்புகள் 2023 பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து 3 மாத காலத்திற்கு கடலூர், ராம நாதபுரம் மற்றும் கன்னியா குமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து கடலோர மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகாமையிலுள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவர். தேர்வு செய்யப்படும் பயிற்சி யாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் தலா ரூபாய் ஆயிரம் வீதம், பயிற்சிக்கால ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.

    எனவே, பிளஸ்-2 வகுப்பு தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத் தொகையில் 50 சதவிகிதத்திற்கு மேலும் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவிகிதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது.
    • ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை தயார்படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மாநிலம் முழுவதும் விமரி

    சையாக கொண்டாடப்ப டுவது வழக்கம். பண்டிகை முதல் நாள் தொடங்கி 4 நாட்கள் அந்தந்த பகுதி

    களில் பல்வேறு போட்டிகள்

    நடத்தி பரிசுகள் வழங்கப்ப டும். இதில் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பரவலாக நடத்தப்பட்டு வருகிறது.

    வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில், நாமக்கல்

    அருகே உள்ள பொட்டி

    ரெட்டிபட்டி, அலங்கா நத்தம், ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. இதை அடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை தயார்படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக காளைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக நாமக்கல்லை சேர்ந்த காளை உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஆண்டு முழுவதும் பயிற்சி அளிப்போம். பொங்கல் பண்டிகை நேரத்தில் காளைகளுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படும். உடல் வலுவாக இருக்க நீச்சல் மற்றும் மண்ணை குத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பருத்திக்கொட்டை போன்ற ஊட்டச்சத்து மிகுந்த தீவனங்கள் ஆண்டு முழுவதும் காளைகளுக்கு வழங்கப்படும்.

    காளைகள் நாமக்கல் மட்டுமின்றி மதுரை அலங்கா நல்லூர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு, ஆணையம்பட்டி, தம்மம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி களுக்கும் அழைத்துச் சென்று

    பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது. இந்த ஆண்டும் மேலும் பல பரிசுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டியதுள்ளது.
    • சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டியதுள்ளது. ஏழை மாணவர்கள் தனியார் மையங்களில் பயில, போதுமான பொருளாதார வசதி இருப்பதில்லை.இவர்களுக்கு உதவும் வகையில், கல்வித்துறையும், பயிற்சிகள் அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் போட்டித்தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு, வாரத்தில் சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம் 412 பயற்சி மையங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், (அதிகபட்சம் 50 மாணவர்கள் ஒரு ஒன்றியத்துக்கு), பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், 10-ம்வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (ஒரு ஒன்றியத்துக்கு அதிகபட்சம், 20 மாணவர்கள்) தேர்வு செய்யப்படவுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது :- மாணவர்களில், ஓ.சி., மற்றும் ஓ.பி.சி., பிரிவை சார்ந்தவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களாக கொண்டு, பிளஸ் 2 வகுப்பில் 50 சதவீத மாணவர்களும், பிளஸ் 1 வகுப்பில், 20 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு கல்வித்துறை சார்பில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

    2017-18, 2018-19, 2019-20ம் கல்வியாண்டுகளில் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற பாட ஆசிரியர்கள் மைய ஒருங்கிணைப்பாளராக இருப்பர். இந்த வாய்ப்பை பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இந்த பயிற்சியின் வாயிலாக போட்டித்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்றனர்.  

    • திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பழமையான தமிழ் கல்வெட்டு படிக்க சிறப்பு பயிற்சி நடந்தது.
    • இதில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் 23 பேர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு பழமையான கல்வெட்டு களை படிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

    திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு தமிழி, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் படிக்க பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் 23 பேருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக கல்வெட்டுகள் காணப்படும் கோவிலான திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோவிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை நேரில் படித்து அறியும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இக்கோவிலில் மாறவர்மன் சுந்த ரபாண்டியன், மாறவர்மன் குலசேகர பாண்டியன் உள்ளிட்ட பிற்கால பாண்டியர்கள், விஜய நகர மன்னர் வீரகம்பண உடையார், நாயக்கர், மாவலி வாணாதிராயர், சேதுபதி மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளை மாணவர்கள் படித்து எழுதிப் பார்த்தனர். இங்குள்ள ஒரு பாண்டியர் கல்வெட்டில் இப்பகுதியில் உள்ள பல ஊர்களின் பெயர்கள் காணப்படுவது மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பயிற்சியை மன்றச் செயலர் ராஜகுரு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.

    • தனி வகுப்பறை ஒதுக்கப்பட்டுள்ளது.
    • ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பயிற்சி வகுப்பை நடத்த பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    உடுமலை :

    அரசு பள்ளிகளில் ' கல்வியில் பின்தங்கிய மாணவர்களைக்கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கல்வி மற்றும் பயிற்சி வகுப்பை நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.அந்த வரிசையில், உடுமலை கல்வி மாவட்ட அரசுப்பள்ளிகளில் இதற்கென, தனி வகுப்பறை ஒதுக்கப்பட்டு 1 முதல் 8 வரையிலான வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு எழுதவும், படிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    குறிப்பாக அவர்களுக்கு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முழுமையாக வாசிக்கவும், எழுதவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல அடிப்படை கணிதம் குறித்தும் பயிற்றுவிக்கப்படுகிறது.இதற்கென, ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பயிற்சி வகுப்பை நடத்த பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பயிற்சி வகுப்பின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டும் வருகிறது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- மாணவர்கள் சிலர் வாசிக்கவும், எழுதவும் தெரியாமல் உள்ளனர். கூட்டல், கழித்தல் என கணிதத்தின் அடிப்படை கற்றலிலும் மிகவும் பின்தங்கி உள்ளனர்.இவர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பு அவசியமாக உள்ளது.அதன்பேரில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளில் கற்றல் திறனில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு தனி வகுப்பறை ஒதுக்கி அடிப்படை பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

    இந்த பயிற்சி வகுப்பின் செயல்பாடு, மாணவர்களின் கற்றல் திறனை கண்டறிய பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.அதன்படி உடுமலை கல்வி மாவட்டத்தில் தலைமையாசிரியர்கள் மாரியப்பன், ஆர்.பழனிசாமி, கே.பழனிசாமி, உமா, அழகுமலைக்கண்ணன், இந்துமதி, முருகன், நாகேஸ்வரி, ஆசிரியர்கள் வெண்ணிலா, மாலா, லலிதாம்பாள், கிருஷ்ணவேணி, திருநீலகண்டன், எம்.கல்பனா, வி.கல்பனா ஆகியோர் ஆய்வு நடத்துகின்றனர் என்றனர். 

    • கால்நடைகளுக்கு குறைந்த செலவில் தீவனம் தயாரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • அட்மாதிட்ட பணியாளர்கள் தனலட்சுமி, கெத்சியாள் டயானா உள்ளிட்டோர், அட்மா திட்ட பணிகள் குறித்து விளக்கினர்.

    திருப்பூர்,

    கலைஞரின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தில், திருப்பூர் மேற்குபதி, கணக்கம்பாளையம் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு குறைந்த செலவில் தீவனம் தயாரிப்பது குறித்து, தொரவலூர் கால்நடை டாக்டர் நந்தகுமார் விளக்கினார்.தேனி வளர்ப்பு குறித்து தேனி வளர்ப்பு நிலைய பயிற்சியாளர் பார்த்திபன் விளக்கினார். விவசாயிகள், தொழில்நுட்பங்களை கடைபிடித்து, கூடுதல் வருமானம் பெறுமாறு வேளாண்துறை - அட்மா திட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.துணை வேளாண் அலுவலர்கள் ஈஸ்வரமூர்த்தி, உதவி வேளாண் அலுவலர்கள் சரவணன், சந்தியா, உதவி தோட்டக்கலை அலுவலர் சுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அட்மாதிட்ட பணியாளர்கள் தனலட்சுமி, கெத்சியாள் டயானா உள்ளிட்டோர், அட்மா திட்ட பணிகள் குறித்து விளக்கினர்.

    ×