search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Academic"

    • சதக் பொறியியல் கல்லூரியில் பிளஸ்-2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
    • பிளஸ்-2 தேர்வு என்பது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமையக்கூடியது.

    கீழக்கரை

    கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பிளஸ்-2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முஹம்மது செரீப் தலைமையில் நடந்தது. சதக் அறக்கட்டளை கல்லூ ரிகளின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி. விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

    துணை முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் சந்திரன் கலந்து கொண்டு ''பிளஸ்-2 தேர்வு என்பது உங்கள் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமையக்கூடியது. மாணவர்கள் உயர்கல்வியைக் கற்று வீட்டிற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பயன்படும் வகையில் பல துறைகளில் சாதித்து நாட்டை வல்லரசு நாடாக மாற்றவதற்கு ஒவ்வொரு மாணவரும் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்'' என்று அறிவுரை கூறினார்.

    முன்னதாக புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு–பள்ளிகளின் மாணவ-மாணவிகள் சுமார் 2, 300 பேர் கலந்து கொண்டனர்.கல்லூரியின் தலைமை திட்டமிடல் அதிகாரி திராவிடச்செல்வி நன்றி கூறினார்.

    • தனி வகுப்பறை ஒதுக்கப்பட்டுள்ளது.
    • ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பயிற்சி வகுப்பை நடத்த பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    உடுமலை :

    அரசு பள்ளிகளில் ' கல்வியில் பின்தங்கிய மாணவர்களைக்கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கல்வி மற்றும் பயிற்சி வகுப்பை நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.அந்த வரிசையில், உடுமலை கல்வி மாவட்ட அரசுப்பள்ளிகளில் இதற்கென, தனி வகுப்பறை ஒதுக்கப்பட்டு 1 முதல் 8 வரையிலான வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு எழுதவும், படிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    குறிப்பாக அவர்களுக்கு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முழுமையாக வாசிக்கவும், எழுதவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல அடிப்படை கணிதம் குறித்தும் பயிற்றுவிக்கப்படுகிறது.இதற்கென, ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பயிற்சி வகுப்பை நடத்த பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பயிற்சி வகுப்பின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டும் வருகிறது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- மாணவர்கள் சிலர் வாசிக்கவும், எழுதவும் தெரியாமல் உள்ளனர். கூட்டல், கழித்தல் என கணிதத்தின் அடிப்படை கற்றலிலும் மிகவும் பின்தங்கி உள்ளனர்.இவர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பு அவசியமாக உள்ளது.அதன்பேரில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளில் கற்றல் திறனில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு தனி வகுப்பறை ஒதுக்கி அடிப்படை பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

    இந்த பயிற்சி வகுப்பின் செயல்பாடு, மாணவர்களின் கற்றல் திறனை கண்டறிய பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.அதன்படி உடுமலை கல்வி மாவட்டத்தில் தலைமையாசிரியர்கள் மாரியப்பன், ஆர்.பழனிசாமி, கே.பழனிசாமி, உமா, அழகுமலைக்கண்ணன், இந்துமதி, முருகன், நாகேஸ்வரி, ஆசிரியர்கள் வெண்ணிலா, மாலா, லலிதாம்பாள், கிருஷ்ணவேணி, திருநீலகண்டன், எம்.கல்பனா, வி.கல்பனா ஆகியோர் ஆய்வு நடத்துகின்றனர் என்றனர். 

    ×