search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Competitive Examination"

    • விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
    • தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2024-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஆசிரியர் உள்ளிட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, அப்பணிகளுக்கான ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் மாதம், போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் மாதம் ஆகியவை குறித்த விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் 10-ம் நாள் வெளியிடப்பட்டன.

    அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இது குறித்த அறிவிக்கையை எதிர்பார்த்து தகுதியுடைய தேர்வர்கள் காத்திருந்தனர்.

    ஆனால், பிப்ரவரி நிறைவடைந்து மார்ச் மாதத்தில் இரண்டாவது வாரமும் பிறந்துவிட்ட நிலையில் அறிவிக்கை வெளியாகாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தையும், வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. இதை உணர்ந்து அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கையை, மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்
    • தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு போட்டித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும், ஊக்கத் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பு போராடிய போது, அவற்றை நிறைவேற்றித் தருவதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தார் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

    தங்களது கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் முறையிட அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் பார்வை மாற்றுத் திறனாளிகள் கூறுகின்றனர். தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அவர்களுக்கு பணி நியம னங்கள் வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
    • விவரங்களுக்கு ஈரோடு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை, அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் மீனவ சமுதாயத்தை சார்ந்த 20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிக்களுக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பயிற்சியை நடத்தி வருகிறது. மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பபடிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, 18.11.2023 பிற்பகல் 5 மணிக்குள் ஈரோடு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் 7வது தளம், மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டட வளாகம், பெருந்துறை ரோடு, ஈரோடு 638011, தொலைபேசி எண்: 0424-2221912 மின்னஞசல் முகவரி: adferode2@gmail.com என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு ஈரோடு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • தமிழ்நாட்டில் நடைபெற்ற போட்டித் தேர்வில் வட இந்தியர்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
    • விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சுங்கத்துறையின் சென்னை அலுவலகத்தில் கடைநிலைப் பணிகளுக்கு 17 பேரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று நடைபெற்ற போட்டித் தேர்வில், அதிநவீன தகவல் தொடர்புக் கருவிகளை பயன்படுத்தி வெளியிலிருந்து விடைகளை கேட்டு எழுதியதாக 29 பேரும், ஆள் மாறாட்டம் செய்ததாக ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 30 பேரில் 26 பேர் அரியானாவையும், தலா இருவர் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற போட்டித் தேர்வில் வட இந்தியர்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

    தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகளுக்காக கடந்த காலங்களில் நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே நாட்றம்பள்ளி சாலையில் உள்ள யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.

    கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் பொது அறிவு, தமிழ் பாடம் ஆகிய பாடங்களை பயிற்சியில் கலந்துகொண்ட போட்டித் தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் பாடம் நடத்தினார்.

    மேலும் இந்த பயிற்சியின் போது பள்ளியின் நிறுவனர் கே.எஸ். சிவப்பிரகாசம், முதல்வர் கிரிநாத், பயிற்றுனர்கள் பாலாஜி, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • விருதுநகரில் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள் 9-ந் தேதி தொடங்குவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்த பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டித் தேர்வு களுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்த பட்டு வருகிறது.

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 2023-24-ம் ஆண்டிற்கான ஆண்டில் குரூப்-1, குரூப்-4, குரூப்-2 போன்ற பல்வேறு பணிக்காலியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த போட்டித்தேர்வு தொடர்பாக விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நேரடியாக இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெறவுள்ளது. அதற்கான இலவச மாதிரி தேர்வுகள் வாரந்தோறும் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    மேலும் பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் இத்தேர்வுக்கான புத்தகங்க ளை பயன்படுத்திக் கொள்ள லாம்.

    இப்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க https://forms.gle/QuWrLhx6tKZVP4C69 என்ற Google Form பூர்த்தி செய்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் https://t.me/vnrstudycircle என்ற டெலிகிராம் மூலமாகவோ, studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலை வாய்ப்பு அலுவல கத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போட்டி தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
    • தொலைபேசி எண் 04567-230160ல் தொடர்பு கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் மத்திய அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளான பணியாளர் தேர்வாணையம் (SSC), ெரயில்வே தேர்வு வாரியம் (RRB), வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (IBPS) உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றிபெற தேவையான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    மேற்கண்ட மத்திய அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை தமிழகத்தைச் சேர்ந்த போட்டித்தேர்வர்கள் பெருமளவில் பங்கு கொண்டு வெற்றிபெறும் நோக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு 100 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பட்டப்படிப்பு முடித்த 21 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் தங்களது பெயரை ஆன்லைனில் கீழ்கண்ட லிங்கின் வாயிலாக https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX தவறாது பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இது குறித்த முழு விவரங்களை https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04567-230160 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 8.6.2023 ஆகும்.
    • போட்டி தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    கணினி இயக்குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் பணிகாலியிடங்களுக்கு கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வயதுவரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும்.

    வயதுவரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள். ஓ.பி.சி.பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு உண்டு.

    மொத்த பணிக்காலியிடங்கள் தோராயமாக 1,600 (இந்தியா முழுவதும்). இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 8.6.2023 ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த போட்டி தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மொத்த பணிக்காலியிடங்கள் தோராயமாக 1,600 (இந்தியா முழுவதும்). இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 8.6.2023 ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த போட்டி தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • மயிலாடுதுறை குத்தாலத்தில் மத்திய அரசு பணி போட்டி தேர்வுகளான பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
    • மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு தொடர்பான சந்தேகங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மத்திய அரசின் 11 ஆயிரத்து 409 பணியிடங்களுக்கான தமிழ் வழி போட்டி தேர்வுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பழனிவேல் கலந்து கொண்டு தேர்வு தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.

    இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை குத்தாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் செய்திருந்தார். முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சுந்தர் நன்றி கூறினார்.

    • சிவகங்கையில் மத்திய அரசின் போட்டி தேர்வுக்்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது.
    • மேற்கண்ட தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

    இந்த பயிற்சி வகுப்புகள் கலெக்டர் அலுவலக மயில்கேட் அருகில் உள்ள படிப்பு வட்டத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள SSC CuSL போட்டித் தேர்வுக்கான அறிவிப்பில் சுமார் 4 ஆயிரத்து 500 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த ேதர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள். 4.1.2023 ஆகும். இந்த தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான கல்வித்தகுதி பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான வேலை நாடுநர்கள் மேற்கண்ட தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    அவ்வாறு விண்ணப்பிக்க இயலாதவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்திற்கு கல்விச்சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் நேரில் வரும் பட்சத்தில் மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பம் செய்து தரப்படும். இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (14-ந் தேதி) முதல் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த அலுவலகத்தின் வாயிலாக தொடங்கப்பட உள்ளது.

    மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பம் செய்து இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற விரும்பும் வேலைநாடுநர்கள் 04575-240435 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது நேரிலோ வருகை புரிந்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்த பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. சீரான இடைவெளியில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த அரிய வாய்ப்பை குரூப்-2 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து வரும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள tamlianducareerservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பெயரை கட்டணமில்லாமல் இலவசமாக பதிவு செய்து இந்த இணையதளத்தில் மத்திய-மாநில அரசினால் நடத்தப்படும் போட்டித் தேர்வு களுக்கான பாடக்குறிப்புகள், வினா-விடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டியதுள்ளது.
    • சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டியதுள்ளது. ஏழை மாணவர்கள் தனியார் மையங்களில் பயில, போதுமான பொருளாதார வசதி இருப்பதில்லை.இவர்களுக்கு உதவும் வகையில், கல்வித்துறையும், பயிற்சிகள் அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் போட்டித்தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு, வாரத்தில் சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம் 412 பயற்சி மையங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், (அதிகபட்சம் 50 மாணவர்கள் ஒரு ஒன்றியத்துக்கு), பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், 10-ம்வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (ஒரு ஒன்றியத்துக்கு அதிகபட்சம், 20 மாணவர்கள்) தேர்வு செய்யப்படவுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது :- மாணவர்களில், ஓ.சி., மற்றும் ஓ.பி.சி., பிரிவை சார்ந்தவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களாக கொண்டு, பிளஸ் 2 வகுப்பில் 50 சதவீத மாணவர்களும், பிளஸ் 1 வகுப்பில், 20 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு கல்வித்துறை சார்பில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

    2017-18, 2018-19, 2019-20ம் கல்வியாண்டுகளில் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற பாட ஆசிரியர்கள் மைய ஒருங்கிணைப்பாளராக இருப்பர். இந்த வாய்ப்பை பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இந்த பயிற்சியின் வாயிலாக போட்டித்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்றனர்.  

    • குரூப்- 1, காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 3-ந் தேதி நடக்கிறது.
    • போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 1 மற்றும் காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ண ப்பித்து தயாரா கிவரும் இளைஞர்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற அமைப்பு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

    இங்கு பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள், மாதாந்திர இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் அடங்கிய நூலகம் செயல்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பலர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

    தற்போது அறிவிக்க ப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-I) மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய 2-ம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

    இந்த தேர்வுகளுக்கான அறிமுக வகுப்பு வருகிற 3-ந் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஆர்வமும், விருப்பமும் உள்ள போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் அறிமுக வகுப்பு நாளில் மார்பளவு புகைப்படம் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்த விவரங்களுடன் கலந்து கொள்ளலாம்.

    பயிற்சி தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 9487375737 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொண்டும் பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.i

    ×