அரசு தேர்வுத்துறை நடத்தும் இலவச பயிற்சி வகுப்பு

கலெக்டர் தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
அரசு தேர்வுத்துறை நடத்தும் இலவச பயிற்சி வகுப்பு
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே நாட்றம்பள்ளி சாலையில் உள்ள யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் பொது அறிவு, தமிழ் பாடம் ஆகிய பாடங்களை பயிற்சியில் கலந்துகொண்ட போட்டித் தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் பாடம் நடத்தினார்.

மேலும் இந்த பயிற்சியின் போது பள்ளியின் நிறுவனர் கே.எஸ். சிவப்பிரகாசம், முதல்வர் கிரிநாத், பயிற்றுனர்கள் பாலாஜி, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com