search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் தென்னை சாகுபடி குறித்த சிறப்பு பயிற்சி
    X

    நாமக்கல்லில் தென்னை சாகுபடி குறித்த சிறப்பு பயிற்சி

    • தென்னை சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
    • இதில் பங்கேற்கும் விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் டாக்டர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    நாமக்கல் மோகனூர் சாலை, கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை காலை, 10 மணிக்கு, தென்னை சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில், மண் பரிசோதனையின் முக்கியத்துவம், தென்னை நாற்றாங்கால் பராமரிப்பு, குறுகிய காலத்தில் வளரும் தென்னையின் வகைகள், லாபகரமான முறையில் தென்னை வளர்ப்பு, தென்னை ஊட்டச்சத்து, நீர், களை மற்றும் பூச்சி மேலாண் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

    இதில் பங்கேற்கும் விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள வரும் விவசாயிகள் கட்டாயம் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×