என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயிகள்"
- சம்பா சாகுபடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டது.
- பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வேளாண் துறை வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் அதனைத் தொடர்ந்து மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்பட்டதை நம்பி திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதன் காரணத்தினால் பயிர்கள் கருகி வருகிறது. ஆகையால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி பெற்று தர வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களை முழுவதுமாக எந்த நிபந்தனையும் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டு சம்பா சாகுபடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டது இதற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்த நிலையில் குறைந்த அளவு பயிர் காப்பீடு தொகையை பயிர் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் கலெக்டர் அலுவலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையின் முடிவில் விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.அதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
- மூலிகை செடிகள், பூச்செடிகள் உள்ளிட்டவைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.
- விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் தண்ணீர் குழாய்கள் பெற விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் தோட்டக்கலை துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும்,பெரும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் ஏக்கர் ஒன்றுக்கு 18 கருப்பு நிற தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என அறிவி க்கப்பட்டு விண்ணப்பங்கள் பெற ப்பட்டது.விண்ண ப்பங்கள் பெறப்பட்டு தகுதியான 400 விவசாயிகளுக்கு முழு மானியத்தில் தண்ணீர் குழாய்களை உதவி தோட்ட க்கலை அலுவலர்கள் செல்லபாண்டியன், சரவண அய்யப்பன் ஆகியோர் வழங்கினர்.
மேலும் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு தகுதிக்கு ஏற்ப வாழை,கோவைக்காய் செடி,முள் இல்லா மூங்கில், மூலிகை செடிகள், பூச்செ டிகள் உள்ளிட்டவைகள் 100 சதவீத மான்யத்தில் வழங்கப்பட்டது.
அப்போது இந்த தண்ணீர் குழாய்கள் மூலம் குறைவான அளவில் தண்ணீர் பயன்பாடு,மகசூல் அதிகரி ப்பு,களைகள் வளர்வது குறைக்கப்ப டும்,மின்சாரம் குறைவான அளவில் பயன்படும் என உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் தெரிவித்தார்.
மேலும் தண்ணீர் குழாய்கள் தேவைப்படும் சிறு குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் பெற தோட்ட க்கலை அலுவலகத்திற்கு வந்து சிறு குறு விவசாய சான்று,அடங்கல்,நிலத்தின் வரைபடம்,ஆதார் நகல்,தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என கூறினார்.
மேலும் தகவல்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர் 9952329863 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.
- நாகையில் சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தன.
- திடீரென பெய்த கனமழையால் சேதமடைந்தது விவசா யிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் போதிய தண்ணீர் இல்லாததால் பல்வேறு இடங்களில் குறுவை பயிர்கள் கருகியது.
மேலும் கால்நடைகளை வயலில் கட்டியும் டிராக்டர் கொண்டு அழித்தனர் இதனால் சுமார் 35 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது எஞ்சிய பயிர்களை பல தூரங்களில் இருந்து எஞ்சின் மூலம் தண்ணீர் கொண்டுவந்து குறுவை பயிர்களை காப்பாற்றினர்.
குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வெண்மணி, கடலாகுடி, திருபஞ்சனம், பிச்சமங்கம், அணக்குடி, கிள்ளுக்குடி அய்யடிமங்கலம், காரிய மங்கலம், மோகலூர் , செண்பகபுரம்,பரப்பனூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கரில் 90 நாட்கள் ஆகிய பயிர்கள் இன்னும் 10, தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நேற்று முன்தினம் இடியுடன் பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது.
மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் திடீரென பெய்த கனமழை யால் சேதமடைந்தது விவசா யிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- விவசாயிகள் ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.1,463 செலுத்தி ரூ.29,250 இழப்பீடாகவும் பெறலாம்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு மேற்கொள்ள அறிவிக்கை பெறப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் சுமார் 4930 எக்டேர் பரப்பளவில் வாழை மற்றும் 1250 எக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்யும்போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை, மழை பொய்த்தல், வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்ட நிலவரம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகிய வற்றால் இழப்பு ஏற்படும்போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படு கிறது.பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடன்பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங்கப்படுகிறது. குத்தகை விவசாயிகளும், இத்திட்டத் தின் மூலம் காப்பீடு செய்து பயன்பெறலாம். வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4203 பிரீமிய மாக செலுத்தி ரூ.84 ஆயிரத்து 50 இழப்பீடாகவும், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.1,463 செலுத்தி ரூ.29,250 இழப்பீடாகவும் பெறலாம்.
கடன்பெறும் விவசாயி களுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மூலம் விருப்பத்தின் பேரில் பிடித்தம் செய்து காப்பீடு நிறுவனங்களுக்கு செலுத்த லாம். கடன் பெறாத விவசாயிகள் தங்களது அருகாமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பிரீமியம் செலுத்தலாம்.
இதற்கு நிலத்தீர்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை, புகைப்படம் போன்றவை தேவையான ஆவணங்களாகும். வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு காப்பீடு செய்ய அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 29-ந்தேதி கடைசி நாளாகும்.
மேலும், இது தொடர் பான விவரங்களுக்கு தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவல கங்களை அணுகி பயிர் காப்பீடு செய்து பயன்பெறு மாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
- கருகும் பயிர்களை பாதுகாக்க கர்நாடகம் காவிரி நீரை திறந்து விட வேண்டும்.
பூதலூர்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட 24-வது மாநாடு செங்கிப்பட்டியில் கலிய பெருமாள், முத்துக்கண்ணு ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
மாநாட்டின் முதல் நிகழ்வாக அரங்கத்தின் வெளியே கடைத்தெருவில் அமைக்கப்பட்டிருந்த சங்க கொடியினை வீரப்பன் ஏற்றி வைத்தார்.
மாநாட்டை வாழ்த்தி சங்கத்தின் மாநில பொதுச்செ யலாளர் மாசிலாமணி,தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாள சக்திவேல், மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் விஜயலெட்சுமி, நிர்வாகிகள் சேவையா, திருநாவுக்கரசு, பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சிசெயலாளர் முகில் உள்ளிட்டோர் பேசினர்.
சங்கத்தின் மாவட்ட பொறுப்பு செயலாளர்.பாஸ்கர் வேலை அறிக்கை, வரவு செலவு அறிக்கை முன்வைத்து பேசினார்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் மாவட்ட தலைவராக ராமச்சந்திரன், செயலாளராக பாஸ்கர், பொருளாளராக சவுந்தர ராசன் உள்ளிட்ட 27 மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில் நடப்பாண்டு பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்களை பாதுகாக்க காவிரியில் கர்நாடகம் தொடர்ந்து நீரைதிறந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.30 அடியாக உள்ளது.
- 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகிறது.
நாகர்கோவில், செப்.26-
குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரண மாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கும்பப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக் கப்பட்டுள்ளது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட் டம் இன்று காலை 21.50 அடியாக இருந்தது.
அணைக்கு 618 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 434 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.30 அடியாக உள்ளது. அணைக்கு 306 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் 634 கன அடி தண்ணீரும் சானல் களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு உள்ளது. 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகிறது. சானல்களிலும் தண்ணீர் வந்து கொண்டிருப்பதை யடுத்து விவசாயிகள் சாகு படி பணியை தீவிரப்படுத்தி யுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் கும்பப்பூ சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. பறக்கை, தெங்கம்புதூர், சுசீந்திரம் பகுதிகளில் ஏற்கனவே நாற்றுப் பாவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை யடுத்து அவர்களுக்கு தேவை யான விதை நெல் களை தங்குதடையின்றி வழங்க வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் ஹெக்டேரில் சாகு படி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது.
- சமச்சீா் பாசனம் உள்ளதைப்போல மடைக்கு 7 நாள்கள் என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,
- பிஏபி., தொகுப்பணைகளின் காலாவதியான ஷட்டா், உபகரணங்களை உடனே மாற்ற வேண்டும்
காங்கயம்,செப்.25-
பிஏபி பாசன பகுதிகளில் தண்ணீா் திருட்டைத் தடுக்க வேண்டும், மற்ற பகுதிகளில் சமச்சீா் பாசனம் உள்ளதைப்போல மடைக்கு 7 நாள்கள் என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும், சிதிலமடைந்த பகிா்மான, உபபகிா்மான வாய்க்கால் பராமரிப்புப் பணிகளை உடனே தொடங்க வேண்டும், பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சீரமைப்பில் நீண்ட கால அடிப்படையில் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும்,
பிஏபி., தொகுப்பணைகளின் காலாவதியான ஷட்டா், உபகரணங்களை உடனே மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கயம் அருகே, கரூா் சாலையில் உள்ள பகவதிபாளையம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கேயம்-வெள்ளக்கோவில்) நீா் பாதுகாப்பு சங்கம் சாா்பில், தொடா் பட்டினிப்போராட்டத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை தொடங்கினா்.போராட்டத்தில், 200-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு பெண் சனிக்கிழமை மயங்கி விழுந்தாா்.
போராட்டத்தின் 3 -ம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை 5 பெண்கள் மயங்கி விழுந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.மேலும் அதிகாரிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ேதால்வியில் முடிந்தது.
இதனால் விவசாயிகள் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது.
- மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது.
- 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.
தாராபுரம்,செப்.25-
திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணை கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர். அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை மற்றும் அதற்கு உரிய வட்டியை சேர்த்து அவர்களுக்கு வழங்க வேண்டும் என 2019-ம் ஆண்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இருப்பினும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் ஜப்தி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நூதன போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்று 47-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதில் மண்டியிட்டுபிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விரைவில் சென்னை தலைமை செயலகம் முன்பு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஈசன் முருகசாமி ,பொதுச் செயலாளர் முத்து விசுவநாதன் ,திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ,திருப்பூர் கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் பாலு ,திண்டுக்கல் மாவட்ட செயலாளர் வடிவேல் மற்றும் விவசாயிகள் 75க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- வேளாண் முன்னேற்ற குழுவினருக்கான முன்பருவ பயிற்சி நடைபெற்றது.
- ஒரு குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
மெலட்டூர்:
அம்மாபேட்டை அடுத்த வடக்குமாங்குடி கிராமத்தில் அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை தொழில் நுட்பக்குழு சார்பில் கிராம வேளாண் முன்னேற்ற குழுவினருக்கான முன்பருவ பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வடக்கு மாங்குடி ஊராட்சி தலைவர் கலைச்செல்வி கனகராஜ் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் அப்துல் நாசர் முன்னிலை வகித்தார்.
அட்மா திட்ட வட்டார தொழில் நுட்பக்குழு மேலாளர் மாதா லெட்சுமி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசுகையில்:-
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வடக்கு மாங்குடி பகுதி விவசாயி களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
மேலும், நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் இலவச பைப்புகள் மற்றும் 50 சதவீத மானியத்தில் சிங் சல்பேட், கடப்பாரை, மண்வெட்டி, இரும்பு பாண்டு, கைதெளிப்பான், பவர் ஸ்பிரே, ஆயில் இன்ஜின் ஆகியவை வழங்கப்படும்.
மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் உள்பட பல்வேறு வேளாண் உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதில் உதவி வேளாண் அலுவலர் விஜயகுமார் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் அட்மா திட்ட உதவி மேலாளர் மங்களேஸ்வரி நன்றி கூறினார்.
- தமிழக அரசு சம்பா, தாளடி சாகுபடிக்கு மட்டுமே பயிர் காப்பீடு அறிவிக்கின்றது.
- குறுவை சாகுபடிக்கு அறிவிப்பது கிடையாது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர், திருவாரூர், நாகை,மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,தாளடி சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர கோடை கால சாகுபடியும் நடைபெறும். இதில் குறுவை, சம்பா ஆகிய இரண்டு சாகுபடிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.
காவிரி நீரையும் மழை நீரையும் நம்பி செய்யக்கூடிய இந்த சாகுபடியால் வறட்சி மற்றும் வெள்ளம் , இயற்கை சீற்றம் போன்ற ஏதாவது ஒரு காரணத்தால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த ஆண்டு கர்நாடக அரசு உரிய காவிரி நீரை திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் பெருமளவில் கருகி பாதிப்புக்கு உள்ளாகின.
ஆனால் தமிழக அரசு சம்பா, தாளடி சாகுபடிக்கு மட்டுமே பயிர் காப்பீடு அறிவிக்கின்றது. குறுவை சாகுபடிக்கு அறிவிப்பது கிடையாது.
நேற்று சம்பாவுக்கு இழப்பீடு தொகை அறிவித்தது. ஆனால் குறுவை பயிர்களுக்கு காப்பீடு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் வக்கீல் ஜீவக்குமார் கூறியதாவது :-
தமிழக அரசு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு தேவையில்லை. பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாகவும் சம்பா சாகுபடிக்கு மட்டுமே பயிர் காப்பீடு செய்யப்படுவதாகவும் அறிவித்திருக்கிறது. இது குறுவை பாதித்த விவசாயிகளை பெரிதும் பாதிக்கும்.
விவசாயிகள் பிரீமியம் செலுத்தி பயிர் 100 சதவீதம் பாதிக்கப்பட்டால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை இழப்பீடு கிடைக்கும். ஆனால் நிவாரண நிதி என்று அரசு அறிவித்தால் ரூ.5000 மட்டுமே கிடைக்கும். அதுவும் அரசுதான் பேரிடர் நிவாரணம் நிதியில் இருந்து கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பு ஏற்படுவதோடு அரசாங்கத்திற்கும் ரூ.5000 இழப்புதான் ஏற்படும்.
ஆனால் பயிர் காப்பீடு செய்வதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் 100 சதவீதம் நிவாரணம் பெற வாய்ப்பு உள்ளது. எனவே குறுவை சாகுபடிக்கும் காப்பீடு அறிவிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கை என்றார்.