search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில், திருமண விசேஷங்களால வாழைத்தார் விலை உயர்வு  விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    விற்பனைக்காக வைத்துள்ள வாழைத்தார்களை படத்தில் காணலாம்.

    கோவில், திருமண விசேஷங்களால வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

    பரமத்திவேலூர் பகுதிகளில் கோவில், திருமண விசேஷங்களால வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரை யோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு ,கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை தவிர தினந்தோறும் நடைபெறும் வாழைத்தார் ஏல சந்தைக்கு வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250-க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.400-க்கும் மொந்தன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.300-க்கும் விற்பனையானது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300-க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.500-க்கும் , மொந்தன் காய் ஒன்று ரூ.350- க்கும் விற்பனையானது. வாழைத்தார்கள் வரத்து குறைந்ததாலும்,கோவில் விழாக்கள் மற்றும் கல்யாண நிகழ்ச்சிகள் அதிக அளவில் இருந்ததால் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×