என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Retailers"

    • 'ஹைப்ரிட் ஏடிஎம்'களாக அமைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
    • மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்களை அமைக்க அரசு முன்னுரிமை அளிக்கும்

    பொதுமக்களின் சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ.10, ரூ.20, ரூ.50 என குறைந்த மதிப்புகளை கொண்ட நோட்டுகளை பெறும் வகையில் புதிய ATM இயந்திரங்களை நிறுவ மத்திய அரசு திட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரூ.100, ரூ.500 நோட்டுக்களை கொடுத்து ரூ.10, ரூ.20, ரூ..50 நோட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதி கொண்ட 'ஹைப்ரிட் ஏடிஎம்'களாக அமைக்கவும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

    மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்களை அமைக்க அரசு முன்னுரிமை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக மும்பையில் அதிகப்படியான சில்லரை பரிவர்த்தனை நடைபெறும் ஒரு சில பகுதிகளில் சோதனை முறையில் இத்திட்டம் அமலுக்கு வரும் என்றும் இந்த திட்டத்தின் சாதக, பாதகங்களை பொறுத்து நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    • சில்லறை வியாபாரிகள் முன்னேற்றத்திற்கும் உதவி செய்யப்படும் என்று யூனியன் வங்கி அதிகாரி கூறினார்.
    • கோபாலபுரம் கிளை மேலாளர் திவ்யா நன்றி கூறினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வாடிக்கையாளர் தின நிகழ்ச்சி நடந்தது. ராஜ பாளையம் கிளை மேலாளர் ஜேம்ஸ் வரவேற்றார். மண்டல மேலாளர் ரஞ்சித் பேசியதாவது:-

    வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை அதிகரிக்கவும், பெரிய வணிகர்கள் மட்டுமின்றி சில்லறை வியாபாரிகளும் முன்னேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வது தருவதற்காக இந்த வாடிக்கையாளர் தினம் நடத்தப்படுகிறது.

    மேலும் வீடு கட்டவும், வியாபாரம் செய்யவும், வீடு, நிலம் போன்றவை வாங்குவதற்கும், இதர வங்கி பரிமாற்றங்களுக்கும் சேவை அளிக்கப்படும். இந்தியாவிலேயே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக ளில் 5-வது சிறந்த வங்கி யாக யூனியன் வங்கி உள்ளது. மேலும் வாடிக்கை யாளர்களின் அனைத்து தேவைகளுக்கும் வங்கி மேலாளர் அணுகலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வாடிக்கை யாளர்கள்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். விழாவில் துணை மண்டல மேலாளர் சோமசுந்தரம், கிளை மேலா ளர்கள் ஜேம்ஸ், செட்டியார்பட்டி சக்தி ஆனந்த மூர்த்தி, சேத்தூர் ஜெயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோபாலபுரம் கிளை மேலாளர் திவ்யா நன்றி கூறினார்.

    • கூட்டத்தில் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
    • கூட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் கந்துவட்டி,மீட்டர்வட்டி,தினவட்டி என பல்வேறு வகையான கூடுதல்வட்டிகளால் சில்லரை வணிகர்கள் பொதுமக்கள் விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் துணை கண்காணிப்பாளர் தலைமையில் கந்துவட்டி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    வேதாரண்யத்தில் கந்து வட்டி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் வேதாரணியம் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேதாரணியம் காவல்துறை ஆய்வாளர் சுப்ரியா, வேதாரணியம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலர்கொடி, தலைஞாயிறு காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வேதார ணியம் தலைஞாயிறு, வாய்மேடு, கரியாபட்டினம் சுற்றுவட்டார பொது மக்களும் கலந்து கொ ணண்டனர். கூட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் கந்துவட்டி மீட்டர்வட்டி தினவட்டி என பல்வேறு வகையான கூடுதல்வட்டிகளால். சில்லரை வணிகர்கள் பொதுமக்கள் விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர் மேலும் கந்து வட்டி சம்பந்தமான பல பிரச்சினைகளை குறித்து பொதுமக்கள் ேபசினர்.கூட்ட முடிவில் துணை கண்காணிப்பாளர் முருகவேல் பேசுகையில்:-

    கந்து வட்டி சம்பந்தமான எந்த புகார் வந்தாலும் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அச்சப்படமால் புகார் அளிக்கலாம் புகார் அளித்தவுடன் உடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×