search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udumalai area"

    • ஒரே வகையான சாகுபடியை மேற்கொள்ளாமல், சந்தை வாய்ப்புகள் அடிப்படையில், மாற்று சாகுபடியையும் சில விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
    • கடந்த சில ஆண்டுகளாக, பொரியல் தட்டை சாகுபடிக்கு உடுமலை பகுதி விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டு முழுவதும், தக்காளி, கத்தரி உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது.தொடர்ச்சியாக ஒரே வகையான சாகுபடியை மேற்கொள்ளாமல், சந்தை வாய்ப்புகள் அடிப்படையில், மாற்று சாகுபடியையும் சில விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.அவ்வகையில் கடந்த சில ஆண்டுகளாக, பொரியல் தட்டை சாகுபடிக்கு உடுமலை பகுதி விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.கேரளாவில், அவியல், பொரியல், கூட்டு என பொரியல் தட்டை உணவில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.எனவே இப்பகுதிகளில் விளையும் பொரியல் தட்டை, கேரள மாநிலம் மூணாறு, மறையூர் மற்றும் பாலக்காடு பகுதிகளுக்கு, விற்பனைக்கு செல்கிறது.முக்கிய சீசனின் போது கேரள மாநில வியாபாரிகள் விளைநிலங்களுக்கு நேரடியாக வந்து, கொள்முதல் செய்கின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பொரியல் தட்டை அனைத்து வகை நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். குளிர் சீதோஷ்ண நிலை உள்ள உடுமலை சுற்றுப்பகுதிகளில் நல்ல மகசூல் கிடைக்கிறது.விதைப்பு செய்த, 50வது நாள் முதல் காய்கள் தினமும் பறிக்கலாம். நாள்தோறும் ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது.ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. 10 டன் வரை மகசூல் கிடைக்கிறது.கேரளா மட்டுமல்லாது உள்ளூரிலும், சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால் அனைத்து சீசன்களிலும் பொரியல்தட்டைக்கு நிலையான விலை கிடைக்கும்.இதே போல், தோட்டக்கலைத்துறை வாயிலாக சாகுபடிக்கு தேவையான விதைகளை விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • போதிய விலை கிடைக்காததால், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • வெங்காயத்தை விற்க முடியாமல் சேமித்து வைத்து உள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை வட்டாரத்தில் காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டு முழுவதும் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் உற்பத்திசெய்கின்றனர்.சமீப நாட்களாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் மழையால் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்தன.

    மேலும் அதற்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கிலோ 5 ரூபாய்க்கு தக்காளியும், 10 ரூபாய்க்கு குறைவாக வெங்காயமும் விற்பனையாகின. தக்காளி, வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். இந்நிலையில் தற்போதைய நிலையில் மழை பாதிப்பு குறைந்துள்ளதால் வைகாசி பட்ட வெங்காய சாகுபடியை விவசாயிகள் மீண்டும் மேற்கொண்டுள்ளனர்.

    ஏற்கனவே விவசாயிகள் பலர் பட்டறை அமைத்து, வெங்காயத்தை விற்க முடியாமல் சேமித்து வைத்து உள்ளனர். தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.20க்கு மேல் கொள்முதல் செய்யப்படுகிறது. இருப்பினும் வரும் நாட்களில் போதிய விலை கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் கடமையே கண்ணாக மீண்டும் வெங்காய நடவில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த 13 நாட்களாக ஒரே பகுதியில் சின்னதம்பி யானை சுற்றி திரிவதால் நேற்று மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது. அடிக்கடி கரும்பு தோட்டத்திற்குள் சென்று படுத்து கொண்டது. #ChinnathambiElephant
    உடுமலை:

    கோவை சின்னத்தடாகத்தில் அட்டகாசம் செய்த சின்னதம்பி யானை கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு டாப்சிலிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

    ஒரு சில நாட்கள் அங்கு வசித்த யானை வனப்பகுதியை விட்டு 31-ந்தேதி வெளியேறியது. பொள்ளாச்சி வழியாக காடு, வயல்வெளிகளை கடந்து 130 கி.மீட்டர் தூரமுள்ள உடுமலை மைவாடி கண்ணாடி புதூர் பகுதிக்கு வந்தது.

    கடந்த 13 நாட்களாக அங்குள்ள அமராவதி சர்க்கரை ஆலை பின்புறம் சுற்றி திரிகிறது. இதனை வனப் பகுதிக்குள் விரட்ட டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானைகள் மாரியப்பன், கலீம் கொண்டு வரப்பட்டது.

    இந்த கும்கிகளுடன் சின்னதம்பி யானை நண்பர்களாக பழகியது. இதனால் சின்ன தம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட முடியவில்லை.

    ஒரு கட்டத்தில் கும்கிகளை சின்னதம்பி எதிர்த்து விரட்ட தொடங்கியது. இதனை தொடர்ந்து கும்கியானை மாரியப்பனை டாப்சிலிப் முகாமிற்கு திருப்பி அனுப்பிய வனத்துறையினர் அங்கிருந்து மற்றொரு கும்கியான சுயம்புவை அழைத்து வந்தனர்.

    இந்த கும்கியுடனும் சின்னதம்பி நட்பு பாராட்ட தொடங்கியது. இதனால் சின்னதம்பி யானையை வன பகுதிக்குள் விரட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    தற்போது சின்னதம்பி யானை கண்ணாடி புதூர் பகுதியிலே கற்றி திரிகிறது. அங்கு பயிரிடப்பட்ட உள்ள வாழை, கரும்பு, வெங்காய பயிர்களை தின்று நாசம் செய்து வருகிறது.

    அதனை பார்க்க ஏராளமான பொதுமக்கள் மைவாடி பகுதிக்கு குவிந்து வருகிறார்கள். ஆனால் சின்னதம்பி யானை பொதுமக்களை எந்த தொந்தரவும் செய்வதில்லை.

    அதன் நடமாட்டத்தை 80-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள். கடந்த 13 நாட்களாக ஒரே பகுதியில் சின்னதம்பி யானை சுற்றி திரிவதால் நேற்று மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது. அடிக்கடி கரும்பு தோட்டத்திற்குள் சென்று படுத்து கொண்டது.

    இன்று அதிகாலை 3 மணியளவில் சற்று சோர்வு தெளிந்து சுமார் 1 கிலோ மீட்டர் வரை சென்றது. பின்னர் கரும்பு தோட்டத்திற்கு திரும்பி விட்டது.

    சின்னதம்பி யானை தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதன் தீர்ப்பை பொறுத்து தான் சின்னதம்பி யானை வனப்பகுதியில் விரட்டப்படுமா? அல்லது முகாமிற்கு கொண்டு செல்லப்படுமா? என்பது தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #ChinnathambiElephant
    ×