search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cultivation of cantaloupe"

    • ஒருமுறை பந்தல் அமைத்தால் தொடர்ந்து, ஐந்து முதல், ஏழு ஆண்டுகள் வரைக்கும் பலன் தருகிறது.
    • ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 டன் வரைக்கும் மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    உடுமலை:

    உடுமலையில் தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயமே பிரதானமாக உள்ளது. குறிப்பாக, தக்காளி, வெங்காயம், கத்தரி மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளே அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக, விளைநிலங்களில் தோட்டக்கலைத்துறை மானிய திட்டத்தின் கீழ் பந்தல் அமைத்து, சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    ஒருமுறை பந்தல் அமைத்தால் தொடர்ந்து, ஐந்து முதல், ஏழு ஆண்டுகள் வரைக்கும் பலன் தருகிறது. மகசூலும் கூடுதலாக கிடைக்கிறது. பாகற்காய், சுரைக்காய், புடலை, பீர்க்கங்காய் மற்றும் கோவைக்காய் இம்முறையில் சாகுபடி செய்யலாம். பாகற்காய் சாகுபடியில் பத்து அடி இடைவெளி விட்டு, மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் 5 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 4 ஆயிரம் செடிகள் வரையும் நடவு செய்யலாம்.சிறந்த பராமரிப்பு மற்றும் மழை கிடைத்தால் தொடர்ந்து, 75 முதல் 90 நாட்கள் வரைக்கும், காய்ப்பு இருக்கும். ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 டன் வரைக்கும் மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    ×