திசையன்விளை மனோ கல்லூரி ஆண்டு விழா

திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விழா நடந்தது. விழாவில் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆண்டு விழா நடந்தபோது எடுத்த படம்.
ஆண்டு விழா நடந்தபோது எடுத்த படம்.
Published on

திசையன்விளை:

திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விழா நடந்தது. திசையன்விளை லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன் தலைமை தாங்கினார். கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் டிம்பர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்று பேசி ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் இந்த கல்வி ஆண்டில் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com