search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bait Curve"

    • நெம்மேலியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • தூண்டில் வளைவு மீன் இறங்கு தளம், வலை பின்னும் கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ளது நெம்மேலி மீனவ கிராமம். இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பால் மீனவர்கள் கடற்கரையில் மீன்பிடி படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் கடல் அரிப்பு காரணமாக கரையில் அமைக்கப்பட்டு இருந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் போக்குவரத்து பாதிக்கப் பட்டு மீன்பிடி தொழில் செய்ய சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    இதையடுத்து நெம்மேலியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.

    இதற்கிடையே சட்டசபையில் நடைபெற்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானிய கோரிக்கையின் போது நெம்மேலி மீனவ குப்பத்தில் தூண்டில் வளைவு மீன் இறங்கு தளம், வலை பின்னும் கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

    இதன்காரணமாக நெம்மேலி மீனவ கிராம மக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து உள்ளது. இதனை மீனவர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

    • கடந்த 11-ந் தேதி முதல் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • ரொசிங்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூடுதாழை மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி கடந்த 11-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

    மேலும் தினமும் பல்வேறு வகையான போராட்டங்களையும் நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று 19 -வது நாளாக கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் போராட்டக்குழு தலைவர் ரொசிங்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாலையில் போராட்ட பந்தலில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. மாநில மீனவர் அணிசெயலாளர் ஜோசப் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பங்குதந்தை வில்லியம் வரவேற்று பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கூறியதாவது:-

    கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க சபாநாயகர் அப்பாவு தீவிர முயற்சி செய்துவருகிறார். சென்னை யில் மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து தூண்டில் வளைவு அமைப்பதற்கான முயற்சி களை செய்துவருகிறார்.

    நாளை (வெள்ளிக் கிழமை) அதற்கான ஆணை பெற்று விடுவதாக உறுதியளித்துள்ளார். 3 மாதத்திற்குள் தூண்டில் வளைவு அமைக்கும் பணி தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    ×