என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு: நெம்மேலியில் ரூ.25 கோடியில் தூண்டில் வளைவு மீனவர்கள் வரவேற்பு
- நெம்மேலியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
- தூண்டில் வளைவு மீன் இறங்கு தளம், வலை பின்னும் கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே உள்ளது நெம்மேலி மீனவ கிராமம். இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பால் மீனவர்கள் கடற்கரையில் மீன்பிடி படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் கடல் அரிப்பு காரணமாக கரையில் அமைக்கப்பட்டு இருந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் போக்குவரத்து பாதிக்கப் பட்டு மீன்பிடி தொழில் செய்ய சிரமம் அடைந்து வருகிறார்கள்.
இதையடுத்து நெம்மேலியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
இதற்கிடையே சட்டசபையில் நடைபெற்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானிய கோரிக்கையின் போது நெம்மேலி மீனவ குப்பத்தில் தூண்டில் வளைவு மீன் இறங்கு தளம், வலை பின்னும் கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
இதன்காரணமாக நெம்மேலி மீனவ கிராம மக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து உள்ளது. இதனை மீனவர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்