search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடிந்தகரை, கூத்தன்குழி பகுதிகளில்  ரூ.65 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் - மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார்
    X

    வளர்ச்சி திட்ட பணிகளுக்காக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் அடிக்கல் நாட்டிய போது எடுத்தபடம்.

    இடிந்தகரை, கூத்தன்குழி பகுதிகளில் ரூ.65 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் - மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார்

    • ராதாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள இடிந்தகரை மற்றும் கூத்தன்குழி ஆகிய பஞ்சாயத்துகளில் சுமார் ரூ.65 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
    • பல்வேறு நிதிகளின் கீழ் இடிந்தகரையில் சிமெண்ட் சாலை, மீன் வலை கூடம், மீன் விற்பனை நிலையம், அங்கன்வாடி மையம், விஜயாபதி பஞ்சாயத்து குறிஞ்சிகுளத்தில் பேருந்து நிறுத்தத்திற்கும், கூத்தன்குழியில் வண்ண கற்கள் பதிக்கும் பணிக்கும், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள இடிந்தகரை மற்றும் கூத்தன்குழி ஆகிய பஞ்சாயத்துகளில் சுமார் ரூ.65 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    பல்வேறு நிதிகளின் கீழ் இடிந்தகரையில் சிமெண்ட் சாலை, மீன் வலை கூடம், மீன் விற்பனை நிலையம், அங்கன்வாடி மையம், விஜயாபதி பஞ்சாயத்து குறிஞ்சிகுளத்தில் பேருந்து நிறுத்தத்திற்கும், கூத்தன்குழியில் வண்ண கற்கள் பதிக்கும் பணிக்கும், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜா, மவுலின், படையப்பா முருகன், இசக்கி பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் சகாயராஜ், வளர்மதி, முருகேசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சூசை அந்தோணி, மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ், சரவணகுமார், சந்தியாகு, ராஜேஷ், வளன், பாப்டிஸ், ரீகன், யேசுதாஸ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், சங்கர், எழில் ஜோசப், குமார், காமில், முத்தையா, டென்னிஸ், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×